UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லெஹ்மன் அமெரிக்க வாகன ஆலைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை இணையவழி சந்திப்புடன் முடித்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

UAW ஜனாதிபதிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு உலக சோசலிச வலைத் தளம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கும் ஈடுபடவும் WillForUAWPresident.org ஐப் பார்வையிடவும்.

150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சனிக்கிழமையன்று ஐக்கிய வாகன தொழிலாளர் (United Auto Workers – UAW) தொழிற்சங்கங்கத்தின் தலைமைக்கான வேட்பாளர் வில் லெஹ்மனுடன் இணையவழி கூட்டத்தில் கலந்து கொண்டனர். லெஹ்மன் நாடு முழுவதும் உள்ள வாகனத் தொழிலாளர்களிடம் இருந்து கேள்விகளை எடுத்து, UAW எந்திரத்திற்கு எதிராக ஒரு சாமானிய தொழிலாளர்களின் இயக்கத்தைத் அணிதிரட்டுவதற்கான தனது போராட்டத்தை விளக்கினார்.

இந்த சந்திப்பு, அமெரிக்க மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள வாகன ஆலைகளுக்கு லெஹ்மனின் வரலாற்று சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த சுற்றுப்பயணத்தில், ஞாயிற்றுக்கிழமை ஃபோர்டு டியர்போர்ன் டிரக் ஆலைக்கு சென்றது; திங்கட்கிழமை டெட்ராய்ட் புறநகர் பகுதியில் மூன்று கிறைஸ்லர்/ஸ்டெல்லாண்டிஸ் ஆலைகள்; செவ்வாயன்று GM இன் ஃபிளின்ட் அசெம்பிளி ஆலை; புதன்கிழமை ஓஹியோவின் கொலம்பஸில் வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களின் மறியல் போராட்டங்கள்; வியாழன் அன்று லூயிஸ்வில்லில் ஃபோர்டின் கென்டக்கி டிரக் ஆலை; மற்றும் வெள்ளிக்கிழமை வேர்ஜீனியாவின் டப்ளினில் வோல்வோ டிரக்ஸ் தொழிலாளர்கள் சந்திப்பு ஆகியவை உள்ளடங்கும்.

வில் தனது வேலைத்திட்டத்தை லூயிஸ்வில் ஃபோர்டு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்

இதில் டியர்பார்னில் 1932 ஃபோர்டு ஹங்கர் மார்ச் உட்பட; 1936-37 பிளின்ட் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் மற்றும் அதை வழிநடத்தியதில் சோசலிஸ்டுகளின் பங்கு; வேலைநிறுத்தம் செய்யும் கொலம்பஸ், ஓஹியோ கல்வியாளர்களுக்குப் பின்னால் அனைத்து தொழிலாளர்களையும் அணிதிரட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் லெஹ்மன் தனது சுற்றுப்பயணத்தின் போது பல வீடியோ அறிக்கைகளை வெளியிட்டார்.

சுற்றுப்பயணத்தின் போது, லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கையெழுத்திட்டனர். அவர் பார்வையிட்ட ஒவ்வொரு ஆலையிலும், சகிக்க முடியாத நிலைமைகளுக்கும், அவற்றைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பான UAW எந்திரத்திற்கு எதிரான உண்மையான போராட்டத்திற்கும், சாமானிய தொழிலாளர்களிடையே லெஹ்மன் மகத்தான ஆதரவை பெற்றார்.

டியர்போர்ன் ட்ரக்கின் ஒரு தொழிலாளி, லெஹ்மனிடம் கூறியபோது, சாமானிய தொழிலாளர்களின் உணர்வுகளைச் சுருக்கமாகக் கூறினார், “[UAW] தலைமைப் பதவியில் இருப்பவர்கள் தாங்கள் எளிதான தெருவில் இருப்பதாக நினைக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை... தொழிற்சங்கம் அவர்களுக்கான ஒரு வணிகம்.'

சனிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் Ford's Dearborn டிரக், Cleveland Engine மற்றும் Kentucky Truck ஆலைகள், Chrysler's Belvidere அசெம்பிளி மற்றும் வாரன் டிரக் ஆலைகளில் இருந்து வாகனத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்; GM இன் பிளின்ட் அசெம்பிளி ஆலை; லெஹ்மன் பணிபுரியும் பென்சில்வேனியாவின் மக்கான்கியில் உள்ள மாக் டிரக்குகள்; மற்றும் ஜோன் டியர், மற்ற பணியிடங்களில். கல்வியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சேவைப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை ஆரம்பித்து வைக்கையில், 'எனது பிரச்சாரம் UAW எந்திரத்தை ஒழிப்பது பற்றியது' என லெஹ்மன் கூறினார். 'UAW இரண்டு அடுக்குகளை உள்ளடக்கியது—அனைத்து இலாபங்களையும் உருவாக்கும் மற்றும் அனைத்து சந்தா கட்டணங்களையும் செலுத்தும் தொழிலாளர்கள், மற்றது அதிகாரத்துவத்தின் ஒரு அடுக்கு... அது இப்போது, [UAW] ஒரு பெரு வணிகமாக செயல்படுகிறது, மேலும் அது நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க வேலை செய்கிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

'நான் பேசிய நிறைய தொழிலாளர்கள், UAW, நிறுவனங்களின் சட்டைப் பைக்குள் உள்ளது என கூறியுள்ளனர். அப்படி என்று அவர்கள் கூறும்போது, அது அதிகாரத்துவம் என்று அர்த்தம். நிறுவனங்களின் சட்டைப் பைக்குள் இருப்பது தொழிலாளர்கள் அல்ல; இது அதிகாரத்துவவாதிகள், அந்த அடுக்கு ஒழிக்கப்பட வேண்டும்.”

“பேரம் பேசுதல் மற்றும் வாக்கு எண்ணுதல் ஆகியவற்றுடன் அனைத்து UAW சொத்துக்கள் மீது முழு சாமானிய தொழிலாளர் கட்டுப்பாட்டிற்கு” அழைப்பு விடுவதாக லெஹ்மன் கூறினார். “சந்தா தொகையை செலுத்துவதன் மூலம் அந்த சொத்துக்கள் அனைத்தையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம், மேலும் இந்த சொத்துக்களை என்ன செய்யப்போகிறோம் என்பதை நாங்கள் கூற வேண்டும், அதிகாரத்துவம் அல்ல,” என்றார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அவர் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு ஆலையிலும் தலைமைத்துவம் இருக்க வேண்டும், ஒவ்வொரு தொழிற்துறையிலும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் இருக்க வேண்டும். இந்த பிரச்சாரம் வாகனத் தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமல்ல, இது ஒவ்வொரு தொழிலாளியையும் பற்றியது, அந்த வர்க்க நனவை, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு கொண்டு வருவது பற்றியது, ஏனென்றால் அந்த வகையில்தான் நீங்கள் வெற்றி பெறமுடியும்.”

ஊதிய உயர்வு குறித்த தனது நிலைப்பாடு பற்றி கேட்ட ஒரு தொழிலாளிக்கு பதிலளித்த லெஹ்மன், அனைத்து தொழிலாளர்களுக்கும் கடந்த கால சலுகைகளை ஈடுகட்ட 50 சதவீத ஊதிய உயர்வு தேவை என்றும், மேலும் பணவீக்கம் அதிகரித்து வருவதைத் தக்கவைக்க கட்டாய வாழ்க்கைச் செலவு சரிசெய்தல் தேவை என்றும் கூறினார்.

அனைத்து அடுக்குகளையும் ஒழிக்கவும், தற்காலிக தொழிலாளர்களை முழுநேர வேலைக்கு மாற்றவும் லெஹ்மன் அழைப்பு விடுத்தார். 'நீங்கள் ஒரு உயர்மட்ட வேலையின் 75 சதவிகிதத்தில் தொடங்குகிறீர்கள், சில தொழிலாளர்களுக்கு இது மிகவும் மோசமாக உள்ளது,' என்று அவர் கூறினார். 'நீங்கள் செய்ய வேண்டிய நான்கு வேலைகளில் மூன்றை நீங்கள் செய்தால் நிறுவனம் விசித்திரமான முறையில் நடந்துகொள்ளத் தொடங்கும். இருப்பினும், அதை உங்களுக்குச் செலுத்துவதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது முடிவுக்கு வர வேண்டும். தற்காலிக பகுதி நேர நிலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

'ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்ல, அதற்காக நீங்கள் எவ்வாறு போராடுகிறீர்கள் என்பதும்தான். நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் உறுதியளிக்க முடியும், ஆனால் உண்மை என்னவென்றால், அதைச் செய்ய உங்களுக்கு ஒரு சர்வதேச இயக்கம் தேவை.”

மிச்சிகனில் இருந்து 35 வருடங்கள் பணியில் இருக்கும் ஸ்டெல்லாண்டிஸ் (கிறைஸ்லர்) தொழிலாளி, பிரச்சாரத்தைத் தொடங்குவதில் லெஹ்மனின் முன்முயற்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 'UAW இல் ஊழல் இவ்வளவு தூரம் சென்றுள்ளது மற்றும் மிக ஆழமானது, அது இன்னும் தீர்க்கப்படவில்லை,' என்று தொழிலாளி கூறினார். 'இது UAW இன் துணைத் தலைவர் முதல், 2 மில்லியன் டாலர்களை திருடிய எங்கள் உள்ளூர் பொருளாளர் வரை நீண்டு செல்கிறது.'

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

UAW இல் உள்ள ஊழல், தொழிற்சங்கத்திற்கும் நிறுவனங்களுக்கும் இடையே நிறுவப்பட்ட பெருநிறுவன உறவுகளுடன் தொடர்புடையது என்று லெஹ்மன் விளக்கினார். 'UAW நிறுவனங்களுடன் நெருங்கி வந்ததும், UAW-GM, UAW-Ford ஆகியவை தொடங்கியபோது, அவர்கள் பங்குகளை வைத்திருக்கத் தொடங்கினர், மேலும் இந்த நிறுவனங்களின் நிர்வாக குழுக்களில் அமர்ந்தனர், அவர்கள் ஒரு நிறுவன வகை மனநிலையில் சிந்திக்கத் தொடங்கினர். அவர்களின் நலன்கள் இப்போது நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சோசலிஸ்டுகளால் வழிநடத்தப்பட்ட 1936-37 இன் பிளின்ட் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தைக் குறிப்பிட்டு, வர்க்கப் போராட்டத்தின் வரலாறு மற்றும் UAW பற்றியும் லெஹ்மன் சக்தி வாய்ந்த முறையில் பேசினார். வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக தேசிய காவலர் துருப்புக்களை (National Guard troops) அனுப்புவதற்கு ரூஸ்வெல்ட் நிர்வாகம் ஆதரவளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

'அரசு நீண்ட காலமாக நிறுவனங்களுடன் இணைந்துள்ளது, மேலும் அவை தனியார் இலாபத்தைப் பாதுகாக்க கொல்ல தயாராக உள்ளன. அப்படித்தான், அது முதலாளித்துவம் என்று உங்களுக்குத் தெரியும்.... இது நான் முன்மொழிவது போல் மனித தேவைக்கான அமைப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல,' என்று லெஹ்மன் கூறினார். “தொழிலாள வர்க்கம் ஈட்டிய எந்தவொரு ஆதாயமும் தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்டது,' என்று அவர் மேலும் கூறினார்.

GM இன் பிளின்ட் அசெம்பிளி ஆலையில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றிய ஒரு தற்காலிக பகுதிநேர (Temporary Part-Time TPT) தொழிலாளி, தற்காலிக தொழிலாளர்களுக்கு UAW எதுவும் செய்யவில்லை என்று கண்டனம் தெரிவித்தார். 'எல்லோரும் தற்காலிக தொழிலாளர்களை மறந்துவிட்டார்கள் போல உள்ளது.'

லெஹ்மன், வாரன் டிரக் அசெம்பிளி தொழிலாளர்களுடன் வேலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தைப் பற்றி விவாதிக்கிறார்

'UAW ஒற்றுமையைப் பற்றி பேசகிறது, ஆனால் அவர்கள் உண்மையில் விரும்புவது கட்டுப்படலைத்தான்' என்று லெஹ்மன் பதிலளித்தார். UAW எந்திரத்திற்கு நாங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.' முழு ஊதியம் மற்றும் சலுகைகளுடன் அனைத்து தொழிலாளர்களையும் முழு நேரமாக உயர்த்த அவர் அழைப்பு விடுத்தார். 'யாரும் தற்காலிகமாகவோ, பகுதி நேரமாகவோ இருக்கக்கூடாது... [UAW ஆல்] கைவிடப்பட்ட சலுகைகளில் இதுவும் ஒன்றாகும்.'

கூட்டத்தில் லெஹ்மன் உரையாற்றிய மற்றொரு தலைப்பு, கடந்த சில வாரங்களில் 100,000க்கும் மேற்பட்ட இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைத் தடுக்கவும் கொலம்பஸ், ஓஹியோ ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை மூடவும் பைடென் நிர்வாகத்தின் பங்கு பற்றியது.

'எனது பிரச்சாரம் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் விரோதமானது' என்று லெஹ்மன் கூறினார். 'தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எனது வேண்டுகோள்... அவர்கள் பிளின்ட் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத அணிவகுப்புடன் நடந்துகொண்டதைப் போலவே அரசாங்கம் எங்களுக்கு விரோதமாக இருக்கப் போகிறது... இது ஒரு தொழிலாளர் அரசு அல்ல, அது ஒரு முதலாளித்துவ அரசு.”

ஓய்வுபெற்ற வாகனத் தொழிலாளியின் கேள்விக்கு பதிலளித்த லெஹ்மன், UAW தலைவர் பதவிக்கான மற்ற வேட்பாளர்கள், தமக்கு வாக்களிப்பதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறுகின்றனர். “எங்களுக்கு இந்தப் பொய் நீண்ட காலமாக ஊட்டப்பட்டு வருகிறது.

'இது மாற்றத்திற்காக காத்திருக்கும் நேரமல்ல என தொழிலாளர்களுக்கு சொல்லும் ஒரே வேட்பாளர் நான் தான். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் சமத்துவமின்மை நிலவுவதை நிறுத்துவோம் என்று கூறுகின்றனர். அவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை... அதனால்தான் நான் ஒரு சோசலிஸ்ட். அதனால்தான் நான் முதலாளித்துவ ஆதரவு கட்சிக்கு வாக்களிக்கவில்லை.

தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு லெஹ்மன் ஒரு சக்திவாய்ந்த வேண்டுகோளை விடுத்தார். இங்கிலாந்து, இந்தியா மற்றும் இலங்கை உட்பட உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை அவர் சுட்டிக்காட்டினார்.

'மற்ற நாடுகளில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களும் சர்யாக இதே விஷயங்களைப் பெற முயற்சிக்கிறார்கள்,' என்று அவர் கூறினார், மேலும் நாம் ஒருவரையொருவர் ஒன்றிணைத்து ஒன்றாகப் போராட்டத்தில் இறங்கினால் நாங்கள் மிகவும் வலுவாக இருப்போம்' என்று அவர் கூறினார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அனைத்து வகையான தேசியவாதத்தையும் எதிர்க்கும் லெஹ்மன், “நீங்கள் எதையாவது பெருமைப்படுத்த விரும்பினால், நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்... தொழிலாளி வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதில் பெருமிதம் கொள்ளுங்கள். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, நாம் அனைவரும் வெற்றி பெறுவதற்கான வழி, நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறோம் என்பதை உணர்வதுததான்.”

லெஹ்மன் ஏகாதிபத்திய போருக்கு தனது எதிர்ப்பையும் தெரிவித்தார். 'எந்தவிதமான ஆயுத ஏற்றுமதியையும் நான் ஆதரிக்கவில்லை, பில்லியன் கணக்கான டாலர்கள் [ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை நடத்த உக்ரேனுக்கு] அனுப்பப்படுகின்றன,' என்று அவர் கூறினார். இந்த போர்களை உருவாக்குபவர்கள் 'உயர்மட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும்' என்று அவர் மேலும் கூறினார். 'எங்களுக்கு முன்னோக்கி செல்லும் வழி தொழிலாள வர்க்கத்தின் மட்டத்தில் ஒற்றுமையாகும்.'

கூட்டத்தின் முடிவில், லெஹ்மன் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் உள்ள மகத்தான எதிர்ப்பை சுட்டிக்காட்டினார். “நான் பேசிய பல தொழிலாளர்களிடம் இருந்து, உத்வேகம் தரும் நிறைய விஷயங்களைக் கேட்டிருக்கிறேன்.”

'உண்மையான ஆதரவை நாங்கள் குறைத்து மதிப்பிடலாம், எங்கள் வர்க்கத்தில் உள்ள தொழிலாளர்களிடம் திரும்பவேண்டும். ஆனால் அதெல்லாம் இந்த அதிகாரத்துவங்களாலும் ஆளும் வர்க்கத்தாலும், அதிகாரம் இல்லை என்று நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. சக்தி முற்றிலும் உள்ளது.

'நான் ஆலைகளுக்குச் செல்லும்போது நான் செய்யும் அதே விஷயங்களைச் சொல்லும் நிறைய தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு படி முன்னணிக்கு வரப் போகிறார்கள், அவர்கள் ஏற்கனவே அதைச் செய்திருக்கிறார்கள். இந்த பிரச்சாரத்திற்காக நூற்றுக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளார்கள்... இவை அனைத்தும் சிறந்தவை என்று நினைக்கும் எவருக்கும், ஆனால் நாங்கள் அவற்றை மட்டுமே நினைக்கிறோம், அது அப்படி இல்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

'இந்த கட்டத்தில் என்ன முடிவை பெறுவோம் என எம் அனைவருக்கும் தெரியும், மேலும் என்ன நடக்கப் போகிறது என்பதும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் ஒழுங்கமைத்தால் இதைச் செய்ய முடியும்.

வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நன்கொடை மற்றும் ஈடுபட, WillforUAWPresident.org ஐப் பார்வையிடவும்.

Loading