மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரிட்டனில் உள்ள சிறு வணிகங்களில் பாதிக்கும் மேலானவை எரிசக்தி செலவுகள் அதிகரித்து, முடக்கப்படும் பணவீக்கத்துடன் சேர்ந்து, அவற்றை மூடுவதற்கு கட்டாயப்படுத்தும் என்று அஞ்சுகின்றன. சிறு வணிகங்களின் கூட்டமைப்பு (FSB) 53 சதவீத வணிகங்கள் சரிந்து, சுருங்கும் அல்லது அடுத்த ஆண்டில் தேக்கமடையும் என எதிர்பார்க்கிறது. FSB “ஒரு தலைமுறை இழந்த வணிகங்கள், வேலைகள் மற்றும் சாத்தியக்கூறுகள்” பற்றி எச்சரித்துள்ளது.
பிப்ரவரி 2021 மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில், மின்சாரக் கட்டணம் 349 சதவீதமும், எரிவாயு கட்டணம் 424 சதவீதமும் அதிகரித்துள்ளதாக FSB மதிப்பிட்டுள்ளது.
திகைப்பூட்டும் எரிசக்தி விலை உயர்வு, பலருக்கு வறுமை மற்றும் பேரழிவை அச்சுறுத்துகிறது. உயரும் வீட்டுக் கட்டணங்கள், தனிநபர்களையும் குடும்பங்களையும் வறுமையில் ஆழ்த்தும். ஆனால் இந்த அதிகரிப்புகள் வேலை மற்றும் உணவுக்காக இந்தக் குடும்பங்கள் சார்ந்திருக்கும் பல சிறு வணிகங்கள் காணாமல் போகவும் வழிவகுக்கும்.
ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை மணிகளும் ஒலிக்கின்றன. எரிபொருள் வறுமையால் ஏற்படும் 'மனிதாபிமான நெருக்கடியில்' இந்த குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்று தேசிய சுகாதார சேவை (NHS) அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெரிதும் தனியார்மயமாக்கப்பட்ட பராமரிப்புத் துறையிலும் நெருக்கடி உருவாகி வருகிறது. ஆகஸ்ட் 2021 மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில், ஒரு மருத்துவமனை படுக்கைக்கான வருடாந்திர எரிசக்தி செலவுகள் 660 பவுண்டுகளில் இருந்து 5,166 பவுண்டுகளாக 683 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு, சமூக மற்றும் பொருளாதார பேரழிவை குறிக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கு இடையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட ஏற்கனவே 20,200 குறைவான வணிகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது, ஐந்து ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்களால் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். FSB கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களின் அதிகரிப்பையும் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், 11.5 சதவீத வணிகங்கள் கடனுக்காக விண்ணப்பித்துள்ளன, இது முதல் காலாண்டில் 9.1 சதவீதமாக இருந்தது. சில சில்லறைக்கடை தெருக்களில் ஐந்தில் ஒரு பங்கு வரை காலியான கடைகள் இருப்பதால், இந்த போக்குகள் பல பெரும் தெருக்களின் முடிவையும், குடும்பத்திற்குச் சொந்தமான மூலைக் கடைகளின் முடிவையும் கொண்டுவரும் என்று எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.
Association of Convenience Stores (ACS) 48,000 என்ற அமைப்பு உள்ளூர் கடைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அதில் 405,000 பேர் பணியாற்றுகின்றனர். அதிபர் நாதிம் ஸஹாவி (Nadhim Zahawi) க்கு அது எழுதிய கடிதத்தில், 'மிகச் சிறிய 1,000 சதுர அடி (93 சதுர மீட்டர்) கடைகளில் கூட சுமார் 80,000 kWh மின் நுகர்வு இருக்கும் என்பதால், சிறிய உறுப்பினர்களுக்கு எரிசக்தி செலவினங்கள் சராசரியாக 45,000 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது என விளக்குகிறது.” ACS படி, 'சில்லறை விற்பனைத் துறையில் எரிசக்தி செலவுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் 2.5 பில்லியன் பவுண்டுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, 2021 இன் முந்தைய நிலைகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். கடிதம் எச்சரிக்கிறது: “பல வசதியான சில்லறைக் கடை விற்பனையாளர்கள், மற்றும் சிறிய, பெரிய வணிகங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் அவை சாத்தியமானவை அல்ல, இந்த நிகழ்வைத் தணிக்க நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராமங்கள், வீட்டுத் தோட்டங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் முக்கிய வீதிகள் தங்கள் சிறிய கடைகளை இழக்க நேரிடும்” என தெரிவிக்கிறது.
வீடுகளுக்கு 5 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, தங்கள் எரிசக்தி கட்டணங்களில் 20 சதவீத வரிகளை செலுத்தக்கூடிய வணிகங்கள், ஒழுங்குமுறை விலை உச்சவரம்பு என்ற பெயரளவு பாதுகாப்பும் கூட இல்லாமல் பேரழிவு தரும் முடங்கு அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளன.
ஒரு கிலோவாட் மணிநேரத்திற்கு (kWh) பயன்படுத்தப்படும் விலையில் அதிகபட்ச வரம்பை நிர்ணயிக்கும் எரிசக்தி கட்டுப்பாட்டாளரான Ofgem மூலம் வீட்டு கட்டணங்கள் (bills) கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த விலை ஒரு kWh க்கு 28 பென்சில் இருந்து 56 பென்ஸாக இரட்டிப்பாகியுள்ளது, மேலும் கட்டணம் வசூலிக்கப்படும் உண்மையான தொகைக்கு வரம்புகள் இல்லை. இந்த கூறப்படும் வரம்புக்கு உட்பட்டும் மில்லியன் கணக்கானவர்கள் வறுமையை எதிர்கொள்கின்றனர்.
வணிகங்களுக்கு அத்தகைய ஒழுங்குமுறை வரம்பு எதுவும் இல்லை மற்றும் கடை உரிமையாளர்கள் மற்றும் பிற ஒப்பந்தக்காரர்கள் தங்கள் அடமானக் கொடுப்பனவுகளை விட அதிக எரிசக்தி கட்டணங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய கணிப்புகளின்படி, சில வணிகங்கள் தங்கள் சொத்துக்களின் அடமான கடனை திருப்பிச் செலுத்துவதை விட நான்கு மடங்கு அதிகமான எரிசக்தி கட்டணங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.
வணிகங்கள் ஏற்கனவே தங்கள் எரிசக்தி கட்டணங்களில் வானியல் அதிகரிப்புகளைப் புகாரளிக்கின்றன. வணிகங்கள் ஏற்கனவே விநியோகஸ்தர்களுடன் உள்ள ஒப்பந்தங்களை சரிசெய்து செய்துகொண்டாலும் தாக்கம் தடுமாறுகிறது. இது ஆரம்பத்தில் பேரழிவின் முழு அளவையும் வெளிப்படையாகத் தெரியாமல் தாமதப்படுத்தினாலும், அது அதன் தாக்கத்தை மோசமாக்கியுள்ளது, ஒப்பந்த மறுபரிசீலனைகளின் போது எரிசக்தி நிறுவனங்கள் விலையை மேலும் உயர்த்த அனுமதிக்கிறது.
இந்த அதிகரிப்புகள் குறுகிய காலத்திற்கு கூட நீடிக்க முடியாதவை. இந்த உயர்வுகளின் தாக்கம் முதலில் ஹோட்டல் மற்றும் உணவகத் துறையில் விழுந்தது, அங்கு சமையல் மற்றும் சேமிப்பு செலவுகள் தவிர்க்க முடியாத செலவாகும். Morning Advertiser ஆய்வு செய்த சுமார் 70 சதவீத பொது விடுதிகள் (pubs), இந்த குளிர்காலத்தில் உதவியின்றி திவாலாகிவிடும் என்று கூறியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு காரணமாக காரணமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஒரு உரிமதாரர் கூறினார்: “எல்லாவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது, மக்கள் ஏற்கனவே அவதிப்பட்டு வருவதால், வாடிக்கையாளர்களுக்கு அதைத் தொடர்ந்து அனுப்ப முடியாது. வாழ்க்கைச் செலவு நெருக்கடி ஏற்பட்டால், முதலில் செய்ய வேண்டியது பொது விடுதிகளுக்குச் செல்வதையும் வெளியே சாப்பிடுவதையும் நிறுத்த வேண்டும்.”
ஜொனாதன் கிரேடோரெக்ஸ் (Jonathan Greatorex), நார்த் வேல்ஸ், லானார்மோனில் உள்ள ஹாண்ட் ஹோட்டலில், இயக்குவதற்கான செலவுகள் ஒரு மாதத்திற்கு 1,900 பவுண்டுகளிலிருந்து 9,500 பவுண்டுகளாக உயர்ந்தபோது திறந்திருக்கும் நேரத்தைக் குறைத்தார். சில உணவகங்கள் இப்போது கிறிஸ்துமஸ் காலத்தில் மூட வேண்டும் என்று பேசுகின்றன. 'மளிகைக் கடைகள் மற்றும் எரிவாயு நிலையங்கள் மூடத் தொடங்கும் போது இந்த நெருக்கடி சமூகத்தின் கட்டமைப்பையே பாதிக்கும்... மேலும் மக்கள் வேலை இழந்தால் குடும்பங்கள் தங்கள் கட்டணங்களை எவ்வாறு நிர்வகிக்கப் போகிறார்கள்?' என்று கிரேடோரெக்ஸ் எச்சரித்தார்.
ஆண்ட்ரூ க்ரூக், லங்காஷையரின் கொப்புல்லில் உள்ள தனது fish and chip shop கடையை மூடிவிட்டார். பகல் நேரப் பயன்பாட்டிற்கு kWh ஒன்றுக்கு 80 பென்ஸ் மின்சார விலையாகக் கூறப்பட்ட பின்னர் அவர் இதைச் செய்தார், அவர் மற்றொரு உள்ளூர் வளாகத்திற்கான தனது ஒப்பந்தத்தில் அவர் செலுத்தும் kWh ஒன்றுக்கு 11.5 பென்ஸ் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாக இருந்தது. இப்போது கொப்புல் கடையில் நான்கு பேரும் ஒரு விநியோக சாரதியும் பணியாற்றுகின்றனர்.
எரிசக்தி அதிகரிப்பு என்பது, அதிகரித்து வரும் விநியோகம் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு மேல் கூடுதல் சுமையாகும். பிரிஸ்டல் கசாப்புக்கடை T.& PA இன் முர்ரே, மாட்டிறைச்சி மற்றும் சீஸ் விலையில் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும், இதில் கடையின் தொழில்முறை வரி கட்டணத்தில் திட்டமிடப்பட்ட அதிகரிப்பு சேர்க்கப்பட்டு, இது தற்போது 11,000 பவுண்டுகளாக உள்ளது என சுட்டிக்காட்டினார். 7,000 முதல் 22,000 பவுண்டுகள் வரை சென்ற வருடாந்திர எரிசக்தி கட்டணத்தின் மும்மடங்கு அதிகரிப்பானது, ஒட்டகத்தின் முதுகை உடைத்த கடைசி நடவடிக்கை ஆகும்.
வடக்கு யோர்க்ஷயரில் ஒரு குடும்ப பண்ணை கடையை நடத்தி வந்த லில்லி பீட்டன், டெய்லி மெயிலிடம் கூறினார்: 'பெரும்பாலான சிறு வணிகங்கள் பெரிய இலாப வரம்பில் இயங்குவதில்லை.' கடையின் தற்போதைய எரிசக்தி ஒப்பந்தம் இம்மாதம் முடிவடையும் போது, அவர்களின் வருடாந்திர கட்டணங்கள் 20,000 பவுண்டுகளில் இருந்து 76,000 பவுண்டுகளாக அதிகரிக்கும். அவர்களின் முதல் கட்டணப் பட்டியல் கிடைத்தவுடன், அவர்கள் நஷ்டத்தில் செயல்படப் போகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். செலவு அதிகரிப்பை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு மேல் சுமத்துவது சாத்தியமில்லை.
எரிசக்தி வழங்குநர்கள் ஏற்கனவே இந்த ஆண்டு 15 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான இலாபங்களை ஈட்டியுள்ளனர் - மேலும் பழமைவாத அரசாங்கத்தின் ஒரே கவலை என்னவென்றால், இந்த அப்பட்டமான கொள்ளை ஒரு எதிர்வினையைத் தூண்டக்கூடாது என்பதுதான். கருவூல செய்தித் தொடர்பாளர் கார்டியனிடம், கடந்த மாதம் அரசாங்கம் ஒரு வட்ட மேசை சந்திப்பில் எரிசக்தி முதலாளிகளுக்கு 'அசாதாரணமான அதிக கட்டணங்கள் இறுதியில் எரிசக்தி நிறுவனங்களை சேதப்படுத்தும்' என அறிவுறுத்தியதாக கூறினார்.
இது வெறுமனே ஒரு நட்பு ஆலோசனை மட்டுமே. போரிஸ் ஜோன்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் மற்றும் அவர்களது அரசாங்கம் உக்ரேனில் நேட்டோவின் பினாமிப் போருக்கு பங்களிப்பாக, மில்லியன் கணக்கானவர்களை துயரத்தில் மூழ்கடித்துள்ளது. ஆயுதப்படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பே, ரஷ்யாவிற்கு எதிரான போரை ஆதரிப்பது என்பது 'உண்மையில் மிகவும் விலையுயர்ந்த குளிர்காலம்' என்று பொருள்படும், அதை உழைக்கும் மக்கள் 'எவ்வளவு வலி மற்றும் செலவு என்னவாக இருந்தாலும்' பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த அறிக்கை தெளிவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஹோட்டல் உரிமையாளர் ஜொனாதன் கிரேடோரெக்ஸ் கூறினார்: “நாங்கள் ரஷ்யாவை மட்டும் குறை கூற முடியாது, எரிசக்தி நிறுவனங்கள் இந்த ஆண்டு பில்லியன் கணக்கான பவுண்டுகள் கூடுதல் இலாபத்தை சம்பாதிக்கின்றன. இது ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, மேலும் உதவ, இன்னும் பலவற்றைச் செய்ய அவர்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது.'
சிறுதொழில் வணிகங்கள், ஆதரவு மற்றும் உதவிக்காக வீணாக அரசாங்கத்தை பார்க்கின்றன. லில்லி பீட்டன் கூறினார், 'நீங்கள் செய்திகளைப் பார்க்கிறீர்கள், எரிசக்தி நெருக்கடியைப் பற்றி யாராவது ஒருவர் தலையிட்டு ஏதாவது செய்யப் போகிறார்கள் என்று நம்புகிறீர்கள், ஆனால் அப்படி எவருமே இல்லை.” வரலாற்று ரீதியாக டோரிகள் தங்கள் சிறிய அளவிலான சுதந்திர நிறுவனத்தை ஆதரிப்பதாகக் கருதிய சிறு வணிக உரிமையாளர்கள் இப்போது முதலாளித்துவத்திற்கு பலியாகிறார்கள், இது அதன் முறையான நெருக்கடியில், நடுத்தர வர்க்கத்தின் பெரும் பகுதியினரை ஏழைகளாக்குகிறது.