அமெரிக்க கீழ்சபை சபாநாயகரின் திட்டமிட்ட விஜயத்திற்கு சீன அதிகாரிகள் "இராணுவ" பதிலை எழுப்பினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பல தசாப்தங்களாக சீனாவுடனான அதன் உறவுகளை நிர்வகிக்கும் ஒரு சீனா கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் மற்றொரு நடவடிக்கையில், கீழ்சபை சபாநாயகர் நான்சி பெலோசி அடுத்த மாதம் தைவானுக்கு செல்வார் என பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஒரு சீனா கொள்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தைவானுடன் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை, மேலும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு பயணம் செய்யவில்லை. ட்ரம்ப் நிர்வாகம் கொள்கையை முறையாக அகற்றி, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் செயலர் அலெக்ஸ் அசாரை 2020 இல் தைவானுக்கு அனுப்பியது. அந்த நேரத்தில், பல தசாப்தங்களாக தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி அசார் ஆவார்.

எவ்வாறாயினும், பெலோசி ஜனாதிபதி வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார், மேலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தைவானுக்கு விஜயம் செய்யும் மிக உயர்ந்த அமெரிக்க அதிகாரி ஆவார்.

சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பெலோசியின் பயணத்திற்கு 'உறுதியான மற்றும் வலுவான நடவடிக்கைகளுடன்” பதிலளிப்பதாக உறுதியளித்தது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜின் கூறுகையில், 'அமெரிக்கா மேலும் செல்ல வலியுறுத்தினால், தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க சீனா உறுதியான மற்றும் பலமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

சீனாவின் குளோபல் டைம்ஸ் செய்தித்தாள், சீன அரசு மற்றும் இராணுவத்திற்குள் உள்ள் குறிப்பிடத்தக்க பிரிவுகளுக்காக பேசுகையில், சீனாவிலிருந்து வரும் பதில் 'இராணுவம் ஆனால் மூலோபாயமானது' என்று அறிவித்து திட்டமிட்ட வருகைக்கு பதிலளித்தது.”

அதன் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹு ஸிஜின் (Hu Xijin), 'தைவான் தீவிற்குள் நுழைவதற்கும், பெலோசி தரையிறங்கும் விமான நிலையத்தின் மீது பறக்கவும், பெலோசியின் விமானத்திற்கு துணையாக இராணுவ விமானத்தை சீனா அனுப்ப வேண்டும் என்றும், பின்னர் அங்கிருந்து பிரதான நிலப்பகுதிக்கு மீண்டும் பறக்க வேண்டும்” என்றும் முன்மொழிந்ததாக செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.

அவர் மேலும் கூறுகையில், 'தீவு முழுவதும் பறக்க PLA விமானங்களை அனுப்பும்போது, நாம் [சீனா] முழு அளவிலான இராணுவ மோதலுக்கு முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.'

அவர் தொடர்ந்தார்: “தைவான் இராணுவம் PLA விமானங்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்தத் துணிந்தால், தைவான் இராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் மற்றும் தைவான் இராணுவ தளங்கள் அழிக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் தைவான் அதிகாரிகள் முழுமையான போரை விரும்பினால், தைவானின் விடுதலைக்கான நேரம் வரும்.

அப்படி ஒரு மோதல் வெடித்தால், அமெரிக்கா சீனாவுடன் போரில் ஈடுபடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் சுட்டிக்காட்டியுள்ளார்.

தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா பலத்தைப் பயன்படுத்துமா என்று மே மாதம் கேட்டதற்கு, 'ஆம்... அதுதான் நாங்கள் செய்த உறுதிமொழி' என்று பைடென் பதிலளித்தார். கடந்த அக்டோபரில் அதே கேள்வியைக் கேட்டதற்கு, 'ஆம், அதைச் செய்வதற்கான அர்ப்பணிப்பு எங்களுக்கு உள்ளது' என பைடென் பதிலளித்தார்.

அதேபோல் தைவான் மீது போருக்கு செல்ல சீன தரப்பும் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம், சீன பாதுகாப்பு மந்திரி வெய் ஃபாங், சிங்கப்பூரில் நடந்த ஷாங்கிரி-லா உரையாடலில் அமெரிக்க அதிகாரிகளிடம், “தாய்வானை சீனாவில் இருந்து யாரேனும் பிரிக்கத் துணிந்தால், நாங்கள் போராடத் தயங்க மாட்டோம், எந்த விலையிலும் போராடுவோம்” என்றார்.

ஆனால் பெலோசியின் திட்டமிடப்பட்ட விஜயமானது, சீனாவுடனான அமெரிக்க மோதலை பாரியளவில் அதிகரிப்பதற்கான தொடர்ச்சியான நகர்வுகளில் மிகவும் ஆத்திரமூட்டுவதாக மட்டுமே உள்ளது.

வெள்ளியன்று, தைவானுக்கு 100 மில்லியன் டாலர் அமெரிக்க ஆயுத விற்பனைக்கு வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக பென்டகன் கூறியது, மேலும் சீனா இந்த விற்பனையை இரத்து செய்யுமாறு அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

திங்களன்று, ஆர்லீ பர்க்-தர நாசகார கப்பலான யுஎஸ்எஸ் பென்ஃபோல்ட் தைவான் ஜலசந்தி வழியாக, கடல்வழி சுதந்திர நடவடிக்கையை மேற்கொண்டது, இது பெய்ஜிங்கிலிருந்து கண்டனத்தைத் தூண்டியது.

இரு அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான முழு அளவிலான போரின் முரண்பாடுகளில் முக்கிய அமெரிக்க மற்றும் உலகளாவிய நிறுவனங்கள் ஏற்கனவே பந்தையம் செய்யத் தொடங்கியுள்ளன. பைனான்சியல் டைம்ஸின் ஒரு கட்டுரையில், 'தைவான் மற்றும் சீனா மீது பெருநிறுவன நடுக்கங்கள் அதிகரித்து வருகின்றன' என்ற தலைப்பில், பெருநிறுவன அபாய பகுப்பாய்வை செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது, இது போரின் நிகழ்தகவை குறுகிய காலத்தில் ஐந்தில் ஒரு வீதத்தில் வைக்கிறது.

பைனான்சியல் டைம்ஸ் எழுதுகிறது, 'அமெரிக்காவின் ஆலோசகர்களும் சீனா வல்லுநர்களும் கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ் அறிவித்தபடி, உக்ரேனில் போர் தொடங்கியதிலிருந்து விளக்கங்களுக்கான கோரிக்கைகளின் அலைகளைக் கண்டிருக்கிறார்கள். தைவான் ஜலசந்தியில் ஏற்படக்கூடிய மோதல் தொடர்பாக அரசியல் ஆபத்து காப்பீட்டுக்கான தேவையும் கடுமையாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.”

'ஒரு மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாகி' கூறியதாக பைனான்சியல் டைம்ஸ் மேற்கோள் காட்டியது, 'உக்ரேனில் இருந்து முக்கிய படிப்பினை என்னவென்றால், மேற்கு ஒரு ஆக்கிரமிப்பாளரை மிகவும் குறிப்பிடத்தக்க பொருளாதாரத் தடைகளுடன் தாக்கும். ரஷ்யாவில் நாங்கள் பார்த்ததை சீனாவுக்குப் பயன்படுத்துங்கள், சீனப் பொருளாதாரத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இறுதிப் போர் உங்களுக்கு இருக்கிறது.”

அமெரிக்க-சீனா மோதலைத் தூண்டுவதற்கான பைடென் நிர்வாகத்தின் பொறுப்பற்ற முயற்சி, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரின் எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது, அவர் புளூம்பேர்க்கிடம் ஒரு நேர்காணலில் கூறினார், 'பைடென் மற்றும் முந்தைய நிர்வாகங்கள் சீனாவின் பார்வையின் உள்நாட்டு அம்சங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 'சீன... மேலாதிக்கத்தை' தடுப்பது 'முடிவற்ற மோதல்களால் அடையக்கூடிய ஒன்று' அல்ல.

முன்னதாக, கிஸ்ஸிங்கர் அமெரிக்க-சீனா மோதல் உலகளாவிய 'முதல் உலகப் போருடன் ஒப்பிடக்கூடிய பேரழிவை' தூண்டும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க பினாமி போர் தொடர்ந்து அதிகரித்து வருவதன் பின்னணியில் சீனாவுடனான பதட்டங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இங்கிலாந்துக்கு விஜயம் செய்த உக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் கவ்ரிலோவ், ரஷ்ய கருங்கடல் கடற்படையை அழிக்கவும் கிரிமியாவை மீண்டும் கைப்பற்றவும் அமெரிக்கா வழங்கிய கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக உறுதியளித்தார்.

'நாங்கள் கப்பல் எதிர்ப்பு திறன்களைப் பெறுகிறோம், விரைவிலோ அல்லது பின்னரோ நாங்கள் கடற்படையை குறிவைப்போம். இது தவிர்க்க முடியாதது, ஏனென்றால் எங்கள் மக்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். 'ரஷ்யா ஒரு நாடாக இருக்க விரும்பினால் கிரிமியாவை விட்டு வெளியேற வேண்டும்' என்று கவ்ரிலோவ் வலியுறுத்தினார்.

ரஷ்யாவுடனான அமெரிக்காவின் பினாமிப் போரில் பைடென் நிர்வாகம் உக்ரேனை ஆயுத வெள்ளத்தில் மூழ்கடித்துக்கொண்டிருக்கையிலும் கூட, பெருகிய முறையில் பூகோள ரீதியாக பரவிவரும் மோதலாக இருப்பதில் ஒரு புதிய முன்னணியை திறக்க அச்சுறுத்துகிறது.