SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை

ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைகாலப் பள்ளியை ஆரம்பித்துவைக்கையில், அதன் தேசியத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த் பின்வரும் அறிக்கையை வழங்கினார். உலக சோசலிச வலைத் தளம் எதிர்வரும் வாரங்களில் பள்ளியில் வழங்கப்பட்ட அனைத்து விரிவுரைகளையும் வெளியிடும்.

1. சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 சர்வதேச கோடைகாலப் பள்ளியை ஆரம்பித்து வைக்கையில், முதலில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி (SEP) யின் சார்பாகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வின் சார்பாகவும் தோழர் விஜே டயஸின் வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். அவர் ஒரு வருடத்திற்கு முன்பு, ஜூலை 27, 2022 அன்று தனது எண்பதாவது வயதில் காலமானார். அந்த வருடங்களில் 60க்கும் மேற்பட்டவை இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. தனது வாழ்நாளின் கடந்த 35 ஆண்டுகளாக, தோழர் விஜே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். தனது வாழ்நாளின் கடைசி நாள் வரை இலங்கைப் பிரிவின் பணிகளிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்

2. தோழர் விஜேவின் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான மதிப்பாய்வு ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாற்றை விட அதிகமானது. அது இலங்கை தொழிலாள வர்க்கத்தின் நவீன வரலாற்றையும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றையும் உள்ளடக்கியதாக அவசியம் இருக்க வேண்டும். அவர் லங்கா சம சமாஜக் கட்சியின் (LSSP) இளைஞர் இயக்கத்தின் உறுப்பினராக ஒரு ட்ரொட்ஸ்கிசவாதியாக ஆனார், அது ட்ரொட்ஸ்கிசத்திற்கான அதன் பல தசாப்த கால போராட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகரக் கட்சியாக வளர்ந்தது. ஆனால் ஜூன் 1964 இல், பப்லோயிசத்தின் மோசமான செல்வாக்கின் விளைவாகவும், அதன் சொந்த தசாப்த கால மற்றும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கு இன்னும் வெளிப்படையான தழுவலின் விளைவாகவும், LSSP ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை நிராகரித்து, பிரதமர் பண்டாரநாயக்க தலைமையிலான முதலாளித்துவ SLFP உடன் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியது.

2018 இல் கொழும்பில் நான்காம் அகிலத்தின் 80வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் விஜே டயஸ் உரையாற்றுகிறார்

3. இந்த காட்டிக்கொடுப்பை எதிர்த்து, இலங்கையில் ட்ரொட்ஸ்கிச இயக்கமான LSSP சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான தளராத போராட்டத்தில், மீண்டும் கட்டியெழுப்ப புறப்பட்ட கோட்பாட்டு ரீதியான மற்றும் தைரியமான இளம் புரட்சியாளர்களின் குறிப்பிடத்தக்க தலைமுறையில் தோழர் விஜே முன்னணியில் இருந்தார். ஜூன் 1964 இல் ஜெர்ரி ஹீலி கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் விளைவாக, விஜே மற்றும் கூட்டணியின் மற்ற எதிர்ப்பாளர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர். ஹீலியுடனான கலந்துரையாடல்களும் ஏனைய கூட்டணியைக் கண்டிக்கும் ICFI ஐ அறிக்கைகளும், LSSP இன் துரோகத்தை 1953 ஆம் ஆண்டிலிருந்து பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பரந்த மற்றும் அத்தியாவசிய சர்வதேச உள்ளடக்கத்தில் வைத்தன.

4. இலங்கையில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்தின் வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1964 செப்டம்பரில் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) இல் இருந்து வெளியேற்றப்பட்டு நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவை ஸ்தாபித்தமைக்கு, இலங்கையில் LSSP இன் காட்டிக்கொடுப்புக்கு அனைத்துலகக் குழுவின் அமெரிக்க ஆதரவாளர்களின் கொள்கை ரீதியான பிரதிபலிப்பே காரணம் என்பது, அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிக்கு எப்போதும் பெருமை சேர்க்கும் விடயமாக இருந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நவம்பர் 1966 இல், ICFI உடன் அனுதாபம் கொண்ட பிரிவாக வேர்க்கர்ஸ் லீக் ஸ்தாபிக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டில், நீண்டகால அரசியல் தெளிவுபடுத்தலைத் தொடர்ந்து, புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது. தோழர் கீர்த்தி பாலசூரியா அதன் முதல் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார், 1987 டிசம்பர் 18 அன்று தனது 39 வயதில் அகால மரணமாகும் வரை அந்தப் பதவியை வகித்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது என்ற ஆவணத்தை எழுதுவதில் தோழர் கீர்த்தி எனக்கு எப்படி எழுதுவது என்பதில் மட்டும் உதவவில்லை என்பதை நான் அடக்கமாகச் சேர்க்க விரும்புகிறேன். அவர் வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் அந்த ஆவணத்தின் முழு இணை ஆசிரியராக இருந்தார்.

கீர்த்தி பாலசூரியவும் டேவிட் நோர்த்தும் - செப்டம்பர் 1986

5. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து தோழர் விஜே அதன் தலைமைத்துவத்தில் முக்கிய பங்கு வகித்தார். RCL தனது புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் இளமையான தலைவரின் திடீர் மற்றும் முற்றிலும் எதிர்பாராத இழப்பை எதிர்கொண்ட அசாதாரணமான கடினமான சூழ்நிலையில், விஜே பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். உள்நாட்டுப் போர் மற்றும் RCL மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள், ஜே.வி.பி. யின் பிற்போக்குத்தனமான சிங்களப் பேரினவாதிகளால் அதன் உறுப்பினர் கொலை ஆகியவற்றுக்கு மத்தியில் அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விஜேயின் உறுதியானதும் தீர்க்கமானதுமான தலைமை இவற்றை எதிர்கொள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்களை அணிதிரட்டியது.

6. எல்லையற்றதும் செயற்கைத்தனமற்றதுமான தனிப்பட்ட தைரியமும், அரசியல் கோட்பாடுகளுக்கு வளைந்து கொடுக்காத அர்ப்பணிப்பும் விஜேயின் மிகச்சிறந்த பண்புகளாகும். இது அவரது அரசியல் எதிர்ப்பாளர்களால் கூட அங்கீகரிக்கப்பட்டது, அவர் முன்னிலையில் இருக்கும்போது, அவர்களால் தங்களின் சொந்த சந்தர்ப்பவாதத்தைப் பற்றி சற்று வெட்கப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

7. விஜே மதிக்கப்படுபவர் மட்டுமல்ல. அவர் பிரியமானவரும் கூட. ஒரு சந்தர்ப்பத்தில், அதை அவதானிக்க எனக்கு பெரும் அதிர்ஷ்டம் இருந்தது, சிங்களப் பின்னணியைச் சேர்ந்த தோழர் விஜே, கொழும்பில் ஒரு தமிழ் சுற்றுப்புறத்தில் நடந்த ஒரு சமூக நிகழ்வில், கௌரவ விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டார். உள்நாட்டுப் போர் இன்னும் உக்கிரமாக இருந்தது. ஆனால் இனவாதப் போருக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் விடாப்பிடியான எதிர்ப்பை தமிழ் சமூகம் அறிந்திருந்தது. தோழர் விஜே மண்டபத்திற்குள் நுழைந்தபோது, பெரும் கரகோஷம் எழுந்தது. இலங்கையில் அனைத்து இன மற்றும் மத சமூகங்களின் தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சியின் தலைவராக அவர் நோக்கப்பட்டார்.

8. தோழர் விஜே டயஸ் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் பெரும் ஆளுமையை கொண்டிருந்தார். அவர் பங்கேற்ற அனைத்து கலந்துரையாடல்களிலும், அவரது பரந்த அனுபவம், புறநிலைத்தன்மை மற்றும் அறிவு ஆகியவற்றை நம்பியிருக்கலாம், மேலும் அவரது குறிப்பிடத்தக்க நகைச்சுவை உணர்விலிருந்து ஆறுதலையும் பெறலாம். விஜே இப்போது அனைத்துலகக் குழுவின் வரலாற்றினுள் நுழைந்துள்ளார். அவரது முன்னுதாரணம் உலக சோசலிசப் புரட்சிக் கட்சியின் காரியாளர்களுக்கு என்றென்றும் உத்வேகத்தின் ஆதாரமாக எப்போதும் இருக்கும். சோசலிசத்திற்கான போராட்டத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெற்றிக்கும் அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், தோழர் விஜே டயஸின் வாழ்க்கைக்கும் நினைவுக்கும் இந்தப் பள்ளியை அர்ப்பணிக்கிறோம். நாம் இப்போது ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவோம்.

9. உலகெங்கிலும் உள்ள எங்கள் தோழர்களுக்கும் எனது சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். சர்வதேச அளவில் ஒரு கோடைகால பள்ளியை நடத்துவதற்கு, இந்த பள்ளியில் நள்ளிரவில் பல தோழர்கள் கலந்துகொள்ள வேண்டும், மேலும் இது உருவாக்கும் உடல் உபாதைகள் இருந்தபோதிலும், இதில் யார் பங்கேற்பார்கள் என்றால், எங்கள் இயக்கத்தின் வரலாற்றின் இந்த முக்கியமான மதிப்பாய்வில் அவர்கள் பங்கேற்க விரும்புபவர்களாவர். அவர்களின் பங்கேற்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம் மற்றும் பாராட்டுகிறோம். நான் விளக்குவது போல், இந்த விரிவுரையின் போது, 1985-86 பிளவிலிருந்து எழுந்த மாபெரும் சாதனைகளில் ஒன்று உண்மையான புரட்சிகர சர்வதேசியத்தை நமது இயக்கத்தில் மீண்டும் நிலைநாட்டியதாகும்.

10. மேலும் இரண்டு அவதானிப்புகள். முதலில், மொழிபெயர்ப்பு நிகழ்ச்சிப்போக்குடன் தொடர்புடையது. தோழர் ஆண்ட்ரியா, பல உட்பிரிவுகள் கொண்ட நீண்ட, சிக்கலான வாக்கியங்களைப் பற்றி எச்சரிக்கை செய்தபோது, அவர் சிலவேளை எனது உரையின் வரைவை மறுபார்வை செய்திருக்கலாம் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

11. இது போன்ற கூட்டங்களில் மொழிபெயர்ப்புகளின் வரலாற்றைப் பொறுத்தவரை, 1922 ஆம் ஆண்டு மூன்றாம் அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் —என்னை மன்னியுங்கள், நான்காவது மாநாட்டில்— கலந்து கொண்ட ஒரு புரட்சியாளரால், பல ஆண்டுகளுக்கு முன்பு, துல்லியமாக 1975 இல் சொல்லப்பட்ட ஒரு கதையை நான் நினைவு கூர்கிறேன். அவர் ஆர்ன் ஸ்வாபெக் (Arne Swabeck) ஆவார். அவர் 1919 இல் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனராக இருந்து, பின்னர் 1928 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கமான அமெரிக்க கம்யூனிஸ்ட் லீக் இன் ஸ்தாபகரும் ஆவார். அந்த நேரத்தில் அவருக்கு 85 வயதாக இருந்தது, சரியான ஆரோக்கியத்துடன், 1907 ஆம் ஆண்டு வரை சென்ற ஒரு வியக்க வைக்கும் நினைவாற்றலை இன்னும் கொண்டிருந்தார். டென்மார்க்கிலிருந்து ஜேர்மனி வழியாகச் செல்லும்போது, ஜேர்மனியில் தனது முதல் வெகுஜனக் கூட்டங்களில் ஒன்றில் அவர் எவ்வாறு கலந்து கொண்டார் என்பதை அவர் என்னிடம் விவரித்தார். அது ரோசா லுக்செம்பேர்க் பேசிய மே தின கூட்டமாகும். அவர் ஒரு டேனிஷ்-ஆங்கில உச்சரிப்பில், 'அவர் ஒரு உறுதியான பேச்சாளராக இருந்தார்” என்றார்.

12. ஆனால் பின்னர் அவர் 1922 இல் தனது அனுபவத்தைப் பற்றி என்னிடம் கூறினார். இரண்டு குறிப்பிட்ட நிகழ்வுகள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முதலாவது, லெனின் உரையைப் பற்றிய அவரது விளக்கம். லெனின் ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர், மேலும் லெனினின் உடல்நிலை குறித்து மிகுந்த கவலை இருந்தது. ஆனால் மேடையில் ஏறி ஒரு அற்புதமாக உரையை நிகழ்த்தினார். அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளும் மிகவும் உற்சாகப்படுத்தப்பட்டனர், மேலும் ஸ்வாபெக் தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு ரஷ்ய பிரதிநிதியிடம் திரும்பி, 'அது ஒரு அற்புதமான பேச்சு' என்று கூறினார். அதற்கு ரஷ்ய பிரதிநிதி, ஆம், ஆனால் இலிச்சின் பக்கவாதத்திற்கு முன்பு நீங்கள் கேட்டிருக்க வேண்டும்” என்றார்.

லியோன் ட்ரொட்ஸ்கி

13. மொழிபெயர்ப்பு கேள்வியுடன் நேரடியாகத் தொடர்புடைய இரண்டாவது நிகழ்வு இருந்தது, அதுதான் ட்ரொட்ஸ்கியின் பிரசன்னம். அவர் பேசவிருந்தபோது, அங்கு பெரும் உணர்ச்சியூக்கம், நீண்ட கரகோஷம் ஏற்பட்டது. ஆனால் ட்ரொட்ஸ்கி பேசத் தொடங்கியபோது, அவர் தனது அனைத்து குறிப்புகளையும் ஜேர்மன் மொழியில் தயார் செய்ததாக விளக்கி மன்னிப்புடன் ஆரம்பித்தார். கம்யூனிச அகிலத்தின் அரை உத்தியோகபூர்வ மொழியாக ஜேர்மன் மொழி இருந்தது. மேலும் அதன் காரணமாக, தான் ஜேர்மன் மொழியில் பேசுவேன் என்றார். அந்த நேரத்தில், பிரெஞ்சு பிரதிநிதிகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியது, அவர்கள், “தோழர் ட்ரொட்ஸ்கி, இது நியாயமில்லை. மொழிபெயர்ப்பு நன்றாக இல்லை. உங்கள் அறிக்கையைப் பின்பற்றுவது கடினமாக இருக்கும். அப்போது ட்ரொட்ஸ்கி பிரெஞ்சு மொழியில், “தோழர்களே, இந்தப் பிரச்சனை எனக்குப் புரிகிறது. நான் ஜேர்மன் மொழியில் எனது உரையை முடித்ததும், நாங்கள் வேறு அறைக்குச் செல்வோம், மேலும் எனது அறிக்கையை பிரெஞ்சு மொழியில் மீண்டும் கூறுவேன். இந்த நேரத்தில், ரஷ்ய பிரதிநிதிகள் கூச்சலிடத் தொடங்கினர். “டோவரிச் ட்ரொட்ஸ்கி, லெவ் டேவிடோவிச், இது சரியல்ல. நீங்கள் ஜேர்மன் மொழியிலும், பின்னர் பிரெஞ்சு மொழியிலும் பேசப் போகிறீர்கள் என்றால், ரஷ்ய மொழியில் விரிவுரை வழங்க வேண்டும். அவர் கூறினார், 'ஆமாம் தோழர்களே, நான் பிரெஞ்சு பிரதிநிதிகளுக்கு எனது சொற்பொழிவு முடிந்ததும், நாங்கள் தனித்தனியாக சந்திப்போம், ரஷ்ய மொழியில் எனது அறிக்கையை தருகிறேன்.' ட்ரொட்ஸ்கி ஜேர்மன் மொழியில் மூன்று மணி நேரம் பேசினார். பின்னர் அவர் தனது அறிக்கையை பிரெஞ்சு மொழியிலும், பின்னர் ரஷ்ய மொழியிலும் தனது அறிக்கையை வழங்கினார், மேலும் ஸ்வாபெக், ஒரு நாள் தாமதமாகிவிட்டதை நினைவு கூர்ந்தார், அவர் கோமின்டேர்னின் அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தை விட்டு வெளியேறுகையில், மேலும் ட்ரொட்ஸ்கி ரஷ்ய பிரதிநிதிகளுடனான சந்திப்பிலிருந்து வெளியே வருவதைக் கண்டார். மொத்தம் ஒன்பது மணி நேரம் பேசியிருந்தார். மேலும் அந்த நிகழ்வை முந்தைய நாள் நடந்ததைப் போல அவர் நினைவில் வைத்திருந்தார்.

14. ட்ரொட்ஸ்கி உண்மையிலேயே இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அசாதாரண ஆளுமையாக இருந்தார். அந்த நேரத்தில், அவரது அதிகாரத்தை இழக்க நேரிடும் போல்ஷிவிக் கட்சியினுள் போராட்டம் வெடிப்பதற்கு சில மாதங்கள் மட்டுமே இருந்தது என்பதை புரிந்துகொள்வது கடினம். எப்படியிருந்தாலும், இப்போது நாங்கள் செயற்கை நுண்ணறிவின் வசதிகளைப் பயன்படுத்துகிறோம், விரிவுரைகளை வழங்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம், இது இந்த பள்ளியில் பங்கேற்கும் உலகெங்கிலும் உள்ள தோழர்கள் அனைவரும் சில வசதிகளுடன் அதனைப் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம்.

15. இப்போது சோசலிச சமத்துவக் கட்சியின் கடைசி நேரடி கோடைகால பள்ளி ஜூலை 21 முதல் ஜூலை 28, 2019 வரை, Sars-CoV-2 தொற்றுநோய் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. 1986 பிப்ரவரியில் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் பிளவு ஏற்பட்டதை அடுத்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் வளர்ச்சி பற்றிய ஆய்வுக்கு அப்பள்ளி அர்ப்பணிக்கப்பட்டது. மூன்று வருட காலமாக விரிவடைந்த அந்த பிளவு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் நீடித்த மோதலின் விளைவாகும்.

16. அக்டோபர் 1982 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையானது, ஜெர்ரி ஹீலி, கிளிஃவ் சுலோட்டர், மைக்கல் பண்டா மற்றும் WRP இன் அரசியல் குழுவிற்கு, மார்க்சிசத்தின் மெய்யியல் அடித்தளங்களை பிரிட்டிஷ் பிரிவு உருத்திரிப்பதிலும், நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்திலிருந்து பின்வாங்குவதிலும் இருந்த கணிசமான வேறுபாடுகளைத் தெரிவித்தது.

17. வேர்க்கர்ஸ் லீக் எழுப்பிய கருத்து வேறுபாடுகள் பற்றிய விரிவான கலந்துரையாடலை ஏற்பாடு செய்வதாக கூறிய தங்கள் ஆரம்ப உறுதிமொழியை பிரிட்டிஷ் தலைவர்கள் கைதுறந்தனர், அதற்குப் பதிலாக 1982 டிசம்பரில் அமெரிக்கப் பிரிவு அதன் விமர்சனங்களைத் திரும்பப் பெறாவிட்டால் உடனடியாகப் பிளவு ஏற்படும் என்ற அச்சுறுத்தலைத் தொடர்ந்தனர். எழுப்பப்பட்ட வேறுபாடுகளின் இருப்பு குறித்து அனைத்துலகக் குழுவுக்கு முற்றிலும் தெரியாத நிலைமைகளின் கீழ், விமர்சனங்கள் திரும்பப் பெறப்பட்டன.

18. எவ்வாறாயினும், WRP அதன் தவறுகளை திருத்திக்கொள்ளத் தவறியதும் பப்லோவாத அரசியலை அது இன்னும் வெளிப்படையாக கடைப்பிடித்ததும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கு நாம் கொடுத்த 'மிகக் கடுமையான வலியுறுத்தல்' மீதான 1983 நவம்பரில் கிளிஃவ் சுலோட்டரின் விமர்சனம் மற்றும் மத்திய கிழக்கில் பிற்போக்குத்தனமான முதலாளித்துவ அரசாங்கங்களை WRP இன் கட்டுப்பாடற்ற மகிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மீதான எமது விமர்சனத்தால் 1984 ஜனவரியில் பிரிட்டிஷ் பிரிவின் அரசியல் நோக்குநிலை மற்றும் அனைத்துலகக் குழுவின் உலக முன்னோக்கு பற்றிய கலந்துரையாடலுக்கு அதன் கோரிக்கையை புதுப்பிக்க வேர்க்கஸ் லீக்கை கட்டாயப்படுத்தியது.

19. மீண்டும் WRP, அரசியல் பிரச்சினைகள் குறித்த முறையான கலந்துரையாடலை ஒழுங்கமைப்பதை நாசப்படுத்தத் தொடங்கியது. நினைவில் கொள்ளுங்கள், அது இணையம், மின்னஞ்சல் இல்லாத காலம், ஆவணங்களின் எளிதான மற்றும் உடனடி பரிமாற்றம் இல்லாத காலம். எனவே, வேர்க்கர்ஸ் லீக்கின் முன்னணி உறுப்பினர்கள் பிப்ரவரி 1984 இல் இலண்டனுக்கு வந்தபோது, இலங்கை அல்லது ஆஸ்திரேலிய பிரிவுகளுக்கு ICFI கூட்டம் பற்றி அறிவிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தனர். அவர்களுக்கு பிரதிநிதிகள் இருக்கவில்லை. WRP பப்லோவாதத்திற்கு சரணடைந்தது பற்றி வேர்க்கர்ஸ் லீக் தயாரித்த விரிவான பகுப்பாய்வு மீண்டும் உடனடிப் பிளவு அச்சுறுத்தல்களை சந்தித்தது. உலக இயக்கத்தின் பல பிரிவுகளுக்கு அதன் விமர்சனங்களின் கருப்பொருள் மற்றும் இருப்புக் கூட தெரியாத நிலைமைகளின் கீழ் அனைத்துலகக் குழுவுடன் ஒரு முதிர்ச்சியடையாத அமைப்புரீதியான முறிவைத் தவிர்க்க தீர்மானித்த வேர்க்கர்ஸ் லீக், WRP பற்றிய தனது விமர்சனங்களை மீண்டும் திரும்பப் பெற்றது.

20. எவ்வாறாயினும், ஜூலை 1985 இல் WRP க்குள் வெடித்த நெருக்கடியை அனைத்துலகக் குழுவிடம் இருந்து மறைக்க முடியவில்லை. 1982 மற்றும் 1984 க்கு இடையில் வேர்க்கர்ஸ் லீக்கால் செய்யப்பட்ட விரிவான மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட விமர்சனங்கள், இறுதியாக WRP மற்றும் ICFI முழுவதும் பரவியது, அவை பிரிட்டிஷ் பிரிவில் பேரழிவு தரும் அமைப்புரீதியான நெருக்கடியை அடிக்கோடிட்டுக் காட்டும் சந்தர்ப்பவாத கொள்கைகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து பின்வாங்குவது பற்றிய பகுப்பாய்வை வழங்கியது.

21. அக்டோபர் மற்றும் டிசம்பர் 1985 க்கு இடையில், மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அனைத்துலகக் குழுவின் மீது உறுதியான கட்டுப்பாட்டை மீண்டும் நிறுவினர். ICFI இலிருந்து பிரிட்டிஷ் பிரிவு இடைநீக்கம் செய்யப்பட்டது, அதன் மறுஅனுமதி, லெனினிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் ஸ்தாபித கொள்கைகளுக்கு அதன் புதுப்பிக்கப்பட்டதும், வெளிப்படையானதுமான உறுதிப்பாட்டில் தங்கியிருந்தது, ஏனெனில் அவை, கம்யூனிச அகிலத்தின் முதல் நான்கு மாநாடுகள் மற்றும் அக்டோபர் 1923 இல் இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து அபிவிருத்திசெய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டன.

22. WRP ஆல் இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட முடியவில்லை மற்றும் பிப்ரவரி 8, 1986 அன்று ஒரு மோசடி சிறுபான்மை காங்கிரசில் அனைத்துலகக் குழுவிலிருந்து பிரிந்தது, அதில் அனைத்துலகக் குழுவை ஆதரித்த WRP உறுப்பினர்கள் —மற்றும் உண்மையில் சட்டபூர்வமான கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையை அமைத்தவர்கள்— சுலோட்டரால் அழைக்கப்பட்ட காவல்துறையினரால் மண்டபத்திற்குள் நுழையாது தடுக்கப்பட்டனர். ''ஏன் அனைத்துலகக் குழு உடனே புதைக்கப்பட்டு நான்காம் அகிலம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதற்கான 27 காரணங்கள்” என்ற தலைப்பில் பண்டா எழுதிய ஒரு ஆவணத்தின் அடிப்படையில் இந்த பிளவு கிளிஃவ் சுலோட்டர் மற்றும் மைக்கல் பண்டா ஆகியோரால் நடத்தப்பட்டது. ஆவணத்தின் தலைப்பு ஒரே நேரத்தில் முரண்பாடாகவும் இருந்தது, ஏனெனில் நான்காம் அகிலம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதற்கு பண்டா ஒரு காரணத்தைக் கூட கொடுக்கவில்லை.

23. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னறிவித்தது போல, இந்த இழிவான ஆவணத்தை ஆதரித்த அனைவரும் விரைவில் ட்ரொட்ஸ்கிசத்தையும் சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்துடனான அனைத்து அரசியல் தொடர்பையும் நிராகரிக்க வேண்டியிருந்தது. அவர்களில் பலர் ஸ்ராலினிசத்திற்குத் திரும்பினர், மற்றவர்கள் யூகோஸ்லாவியாவின் அழிவைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரின் போது பொஸ்னியாவில் நேட்டோ இராணுவ நடவடிக்கைகளின் கூட்டாளிகளாக மாறினர். அவர்கள் அனைத்து வகையிலும் கம்யூனிச விரோதிகளாகவும் ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் மாறினர்.

24. இந்தப் போராட்டம், இந்த வார இறுதியில் மூன்று விரிவுரைகளில் விரிவாக மதிப்பாய்வு செய்யப்படும், இது நான்காம் அகிலத்தின் வரலாற்றில் மிகவும் பின்விளைவுகளை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாகும். இது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அழிவைத் தடுத்து, மார்க்சிசத்தின் மறுமலர்ச்சிக்கான நிலைமைகளையும், அனைத்துலகக் குழுவின் தத்துவார்த்த, அரசியல் மற்றும் அமைப்புரீதியான பணிகளில் ஒரு மகத்தான வளர்ச்சியையும் உருவாக்கியது.

25. 2019 பள்ளிக்குப் பின்னர், பிளவு, நான்காம் அகிலத்தின் வரலாற்றின் பரந்த உள்ளடக்கத்தில் வைக்கப்பட்டது. ஆரம்ப அறிக்கை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஐந்து தனித்துவமான காலகட்டங்களை அல்லது நிலைகளை அடையாளம் கண்டுள்ளது.

26. முதல் காலகட்டம் 1923 இல் இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டது முதல் 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது வரை பதினைந்து ஆண்டுகள் நீடித்தது. இந்த காலகட்டம் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தின் முழு போக்கையும் தீர்மானித்த முக்கியமான வரலாற்று நிகழ்வுகளையும், மூலோபாய அனுபவங்களையும் உள்ளடக்கியது மற்றும் இது நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையையும் உருவாக்கியது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய தோல்விகளையும், மார்க்சிசத்தின் பெரும் பகுதியினரின் சரீரரீதியான அழிவையும் கண்ட இந்த துயரமான காலகட்டத்தின் அத்தியாவசிய படிப்பினைகள், ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தை திறந்து வைத்த வாக்கியத்தில் சுருக்கிக் கூறப்பட்டது: 'ஒட்டுமொத்த உலக அரசியல் நிலைமை, எல்லாவற்றிற்கும் மேலாக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் வரலாற்று நெருக்கடியால் குணாதிசயப்படுத்தப்படுகின்றது.'

27. இரண்டாம் காலகட்டம், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திலிருந்து சர்வதேச செயலகத்தின் பப்லோவாதத் தலைமையுடன் பிளவுபட்டு, 70 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 1953 இல் அனைத்துலகக் குழுவின் உருவாக்கம் வரையிலான மற்றொரு 15 ஆண்டு காலப்பகுதியை உள்ளடக்கியது. 2019 இல் நாங்கள் விளக்கியது போல், இந்த காலகட்டம், 'ட்ரொட்ஸ்கியின் படுகொலை, இரண்டாம் உலகப் போர் முழுவதையும், கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளை நிறுவுதல், மேற்கு ஐரோப்பா மற்றும் ஜப்பானில் முதலாளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துதல், பனிப்போரின் வெடிப்பு, சீனப் புரட்சியின் வெற்றி, கொரியப் போரின் வெடிப்பு மற்றும் இறுதியாக ஸ்ராலினின் மரணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.”

ஜேம்ஸ் பி. கனன், மத்தி, மக்ஸ் ஈஸ்ட்மன், இடது மற்றும் ஹேவூட், 1922இல் மாஸ்கோவில்.

28. நான்காம் அகிலத்தின் மூன்றாம் காலகட்டம் அனைத்துலகக் குழுவிற்குள் 33 ஆண்டுகால போராட்டத்தை உள்ளடக்கியது (அனைத்துலகக் குழுவிற்கு வெளியே நான்காம் அகிலம் இல்லை) இது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஜேம்ஸ் பி. கனனின் பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டதன் மூலம் தொடங்கி, டிசம்பர் 1985 இல் WRP இன் இடைநிறுத்தம், பிப்ரவரி 1986 இல் தேசிய சந்தர்ப்பவாத துரோகிகளுடன் இறுதி முறிவுடன் முடிவடைந்தது. இது, அனைத்துலகக் குழுவிற்குள் நீடித்த உள்நாட்டுப் போர் என்று நாங்கள் வகைப்படுத்திய ஒரு காலகட்டமாகும், இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு வெளியேயும் உள்ளேயும் பப்லோவாதப் போக்குகளுடன் தொடர்ச்சியான தீவிர அரசியல் மோதல்களால் குறிக்கப்பட்டது. அறிக்கை விளக்கியது:

தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த வெகுஜன இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் சாத்தியத்தை புறநிலையாக முன்வைத்த இந்த வெடிக்கும் காலம் முழுவதும், அனைத்துலகக் குழு ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் இடைவிடாத அழுத்தத்துடன் போராடவேண்டியிருந்தது. மேற்கூறிய அதிகாரத்துவங்களுடன் இணைந்த பப்லோவாத அமைப்புகள், அத்துடன் குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகள் மற்றும் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு புத்திஜீவிகளின் பரந்த அடுக்குகள் ஒரு தொடர் அரசியல் மற்றும் அமைப்புரீதியான ஆத்திரமூட்டல்களுடன் இணைத்து மார்க்சிச தத்துவம் மற்றும் நான்காம் அகிலத்தின் கொள்கைகளின் இடைவிடாத பொய்மைப்படுத்தல்களால் அனைத்துலகக் குழுவைத் தனிமைப்படுத்த முயன்றன.

29. முக்கியமாக, இந்த வாரம் வழங்கப்படும் அறிக்கைகள் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் இந்த மூன்றாம் கட்டத்தில் கவனம் செலுத்தும், இதில் வேர்க்கர்ஸ் லீக்கின் முக்கியமான அனுபவங்கள் அடங்கும் —குறிப்பாக, வொல்ஃபோர்த்துடனான முறிவு, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையைத் தொடங்குதல், வர்க்கப் போராட்டத்தில் கட்சியின் தலையீடுகள்— இது அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச காரியாளரின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கும் WRP இன் சந்தர்ப்பவாத போக்கிற்கு அதன் எதிர்ப்பிற்கும் வழிவகுத்தது. 2019 இல் நாங்கள் வலியுறுத்தியது போல:

வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் வரலாறும், அமைப்பின் தத்துவார்த்த-அரசியல் பணிகளும் வேர்க்கர்ஸ் லீக்கின் தலைமையை, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு மற்றும் கோட்பாடுகளுடன், புறநிலை பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஊக்கமளித்தது. இது WRP பின்பற்றிய பாதையில் அரசியல் அதிருப்தியையும் கருத்து வேறுபாட்டையும் உருவாக்கியது.

30. பிப்ரவரி 1986ல் WRP உடன் முறித்துக் கொண்டதில் தொடங்கிய நான்காம் அகிலத்தின் வரலாற்றின் நான்காம் காலகட்டமானது, சந்தர்ப்பவாதிகளின் தீர்க்கமான தோல்வியுடன், அனைத்துலகக் குழுவிற்குள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் அரசியல் ஆளுமை நிறுவப்பட்டது. நான் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அசாதாரண வளர்ச்சியில், இறுதியாக பப்லோவாதத்தின் அழிவுகரமான செல்வாக்கு மற்றும் சூழ்ச்சிகளிலிருந்து விடுவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான சாதனை ஒரு உலக முன்னோக்கின் வளர்ச்சியாகும், இது அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்த சர்வதேச நடைமுறையை, பொருளாதார வாழ்க்கையின் புறநிலை பூகோளமயமாக்கல் மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு அதன் தாக்கங்களுடன் சீரமைக்க அனைத்துலகக் குழுவுக்கு உதவியது.

31. 1985-86 பிளவுக்குப் பின்னர் அபிவிருத்தியடைந்த ICFI பிரிவுகளிடையேயான தீவிரமான தொடர்புகளை விளக்குகையில், ஜூன் 25, 1989 அன்று டெட்ராய்ட் உறுப்பினர் கூட்டத்திற்கு நான் அளித்த அறிக்கையைக் குறிப்பிட்டேன்:

இந்த சர்வதேச ஒத்துழைப்பின் பரப்பெல்லை, ஒவ்வொரு பிரிவின் நடைமுறைப் பணியின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் அதன் நேரடி தாக்கம், ICFI மற்றும் அதன் பிரிவுகளின் தன்மையை ஆழமாகவும், சாதகமாகவும் மாற்றியுள்ளது. அதன் பிரிவுகள் எந்தவொரு அரசியல் மற்றும் நடைமுறையில் அர்த்தமுள்ள வழியில் சுயாதீன அமைப்புகளாக இருப்பதை நிறுத்துகின்றன. ஒரு பொதுவான அரசியல் வேலைத்திட்டத்தின் அஸ்திவாரத்தின் மீது, ஒவ்வொரு பிரிவையும் ஒன்றாக இணைக்கும் ஒரு சிக்கலான உறவு வலையமைப்பு ICFI க்குள் வெளிப்பட்டுள்ளது. அதாவது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் ஒரு அரசியல் அமைப்பின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்த கூறுகளை உள்ளடக்கியது. அந்த உறவின் எந்தவொரு முறிவும் சம்பந்தப்பட்ட பிரிவுக்குள் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு பிரிவும் இப்போது, கருத்தியல் மற்றும் நடைமுறை இரண்டிலும், இந்த சர்வதேச கூட்டுறவு மற்றும் கூட்டுழைப்பைச் சார்ந்துள்ளது.

32. அனைத்துலகக் குழுவின் முன்னேற்றங்கள் வெறுமனே அதன் காரியாளர்களின் அகநிலை விருப்பம் மற்றும் அரசியல் நேர்மையின் விளைபொருளாக இருக்கவில்லை—இருந்திருக்கவும் முடியாது. அதன் வளர்ச்சிக்கு அடிப்படையானது, உலக அளவில் சமூக பொருளாதார நிலைமைகளில் ஆழமான மாற்றங்களும் அரசியல் கட்டமைப்புகள் மற்றும் உறவுகளில் அவற்றின் பிரதிபலிப்புமாகும். ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் முக்கிய முன்னேற்றங்கள் —குறிப்பாக உட்கட்சி போராட்டத்தின் மும்முரமான காலங்கள்— உலக அரசியலில் முக்கியமான திருப்புமுனைகளின் எதிர்பார்ப்பாகவோ அல்லது விளைவாகவோ நிகழ்ந்துள்ளன என்பதை நாம் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறோம்.

33. சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் 1939-40 கன்னைப் போராட்டம் இரண்டாம் உலகப் போர் வெடித்ததற்கு கிட்டத்தட்ட உடனடிப் பிரதிபலிப்பாக வளர்ந்தது. நவம்பர் 1953 பிளவு எட்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்ராலினின் மரணத்தால் துரிதப்படுத்தப்பட்டது, இது கிரெம்ளின் மற்றும் உலக ஸ்ராலினிச இயக்கத்திற்குள் முடிவில்லாத தொடர் நெருக்கடிகளை உருவாக்கியது. இது அரசியல் ரீதியாக சுயாதீனமான மற்றும் புரட்சிகர சமூக சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கு எதிராக வளர்ந்த நடுத்தர வர்க்க தீவிரவாதத்தின் ஒரு வடிவத்தின் வளர்ச்சியையும் இது பிரதிபலித்தது.

34. விரைவில் தெளிவாகியது போல், 1982 மற்றும் 1986 க்கு இடையில் அனைத்துலகக் குழுவிற்குள் நடந்த போராட்டமானது, 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சீரழிவில், இறுதி முடிவுக் கட்டத்தை எதிர்பார்த்தது. மேலோட்டமான பார்வையாளர்களுக்கு —குறிப்பாக WRP இன் தலைமையில் இருந்தவர்களுக்கு— வேர்க்கர்ஸ் லீக்கின் வெளிப்படையான தனிமைப்படுத்தப்பட்ட எதிர்ப்பு, வெறும் மூன்று வருட காலத்திற்குள், ஒரு புதிய ட்ரொட்ஸ்கிச மறுசீரமைப்பின் மையப் புள்ளியாகவும், அனைத்துலகக் குழுவிற்குள் பெரும்பான்மையாகவும் மாறும் என்பது மிகவும் சாத்தியமில்லை என்று தோன்றியிருக்கலாம்.

35. மிக ஆழ்ந்த அர்த்தத்தில், ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பின் வலிமை அது புறநிலை நிகழ்ச்சிப்போக்குகளை சரியாக பகுப்பாய்வு செய்தது மட்டுமல்லாமல், இந்த நிகழ்ச்சிப்போக்குகள் —1939-40, 1953 இல் இருந்த நிலைமைகளுக்கு மாறாக, அல்லது 1961-63 இல் பப்லோவாதிகளுடன் SWP இன் கொள்கையற்ற மறு ஒருங்கிணைப்புக்கு எதிரான SLL இன் போராட்டத்தின் போது கூட— புரட்சிகர போக்குக்கு சாதகமாக இருந்தன. பொருளாதார பூகோளமயமாக்கலின் நிகழ்ச்சிப்போக்குகள், சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் தொழிற்சங்கவாதிகளின் ஒவ்வொரு வடிவமான தேசிய தொழிலாளர் வேலைத்திட்டத்தின் சமூக அடித்தளங்களை சிதைத்துக்கொண்டிருந்தன. பழைய தேசிய அளவில் வேரூன்றிய அனைத்து தொழிற் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் புதிய பொருளாதார யதார்த்தங்களுக்கு ஒரு சாத்தியமான பதிலைத் வகுக்க இயலாதிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் வெகுஜன ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சிதைவு ஆகியவை தேசிய அளவில் அடித்தளமிட்டிருந்த சீர்திருத்தவாதத்தின் முறிவின் ஒரு பரந்த நிகழ்ச்சிப்போக்கின் மிக முக்கியமான பாகமாக இருந்தன.

36. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளின் முக்கிய முன்முயற்சிகள் —குறிப்பாக லீக்குகளிலிருந்து கட்சிகளுக்கு மாறுதல் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தைத் ஸ்தாபித்தல் ஆகியவை— சோசலிச புரட்சியின் உலகக் கட்சியாக அனைத்துலகக் குழுவின் வளர்ச்சிக்கு, ஒரு புதிய மற்றும் சக்திவாய்ந்த உந்துதலை வழங்கும் புறநிலை சக்திகளின் சரியான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது.

37. 1986க்கும் 2019க்கும் இடைப்பட்ட 33 ஆண்டுகளை பற்றி சுருக்கமாக, அறிக்கை கூறியது:

இன்றியமையாத தயாரிப்பு வேலைகளாய் இருந்த பப்லோவாதிகளை வெளியேற்றுவது, உலகக் கட்சியை ஒரு சர்வதேசிய அடித்தளத்தின் மீது மீள்கட்டுமானம் செய்வது, ICFI இன் சர்வதேச மூலோபாயத்தை எடுத்துரைப்பது, நான்காம் அகிலத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை பாதுகாப்பது, அனைத்துலகக் குழுவின் கழகங்களை கட்சிகளாக மாற்றுவது, மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபிப்பது ஆகியவை நான்காவது கட்டத்தின் பிரதான சாதனைகளாய் இருந்தன. அனைத்துலகக் குழுவின் அரசியல் செல்வாக்கு பரந்த விரிவாக்கம் காண்பதையும் அதன் உறுப்பினர் எண்ணிக்கை கணிசமாய் வளர்ச்சி அடைவதையும் இந்த சாதனைகள் சாத்தியமாக்கின. இந்தக் கட்டம் நிறைவுற்றிருக்கிறது.

38. 2019 அறிக்கை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றின் ஐந்தாவது காலகட்டம் தொடங்கிவிட்டது என்று வலியுறுத்தியது:

இந்தக் காலகட்டமே சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக ICFI இன் விரிந்த வளர்ச்சியை காணவிருக்கும் நிலையாகும் என்று நாங்கள் கூறினோம். 30 ஆண்டுகளுக்கும் முன்னர் அனைத்துலகக் குழுவால் அடையாளம் காணப்பட்ட, பொருளாதார பூகோளமயமாக்கலின் புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள், மேலும் பிரம்மாண்டமானதொரு அபிவிருத்திக்குள் சென்றிருக்கின்றன. தகவல்தொடர்பில் புரட்சிகளை உண்டாக்கியிருக்கும் புதிய தொழில்நுட்பங்களது எழுச்சியுடன் சேர்ந்து, இந்த நிகழ்ச்சிப்போக்குகள் 25 ஆண்டுகளுக்கு முன்புவரை கூட கற்பனை செய்திருக்க சிரமமான ஒரு மட்டத்திற்கு வர்க்கப் போராட்டத்தை சர்வதேசியமயப்படுத்தியிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டமானது ஒரு பரஸ்பர இணைப்புடைய மற்றும் ஐக்கியப்பட்ட உலக இயக்கமாக அபிவிருத்தி காணும். இந்த புறநிலை சமூகப்-பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் நனவான அரசியல் தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்படும். அது ஏகாதிபத்தியப் போர் எனும் முதலாளித்துவ அரசியலுக்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சி எனும் வர்க்க-அடிப்படையிலான மூலோபாயத்தை எதிர்நிறுத்தும். இதுவே நான்காம் அகிலத்தின் வரலாற்றில் புதிய காலகட்டத்தின் அடிப்படையான வரலாற்றுப் பணியாகும்.

39. நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஐந்தாம் காலகட்டத்தின் தொடக்கத்தை நாம் அடையாளம் கண்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது நாம் ஒரு கேள்வியை முன்வைக்க வேண்டும்: முதலாளித்துவத்தின் புறநிலை பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் வளர்ச்சி, வர்க்கப் போராட்டத்தின் தீவிரம் மற்றும் இறுதியாக, கட்சியின் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்தடுத்த நிகழ்வுகள் இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தியுள்ளனவா?

40. கடந்த நான்கு ஆண்டுளைத் திரும்பிப் பார்க்கும்போது, 2019 பள்ளியானது உலக முதலாளித்துவத்தின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் பாரிய விரிவாக்கத்திற்கு முன்னதாகவே நடந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும், பள்ளி முடிந்த சில வாரங்களுக்குள், ஒரு தற்செயலான நிகழ்வாகத் தோன்றியிருக்ககூடிய, கட்சியின் அரசியல் மற்றும் அறிவுசார் செல்வாக்கில் ஒரு பண்புரீதியான வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க அறிகுறியை வழங்கியது.

41. ஆகஸ்ட் 19, 2019 அன்று, நியூ யோர்க் டைம்ஸ் தனது ஞாயிற்றுக்கிழமை இதழில் நிகோல் ஹன்னா-ஜோன்ஸ் எழுதிய '1619 திட்டம்' பற்றிய தொடர்ச்சியான கட்டுரைகளை வெளியிடப்போவதாக அறிவித்தது. இந்த திட்டத்திற்கு மகத்தான வளங்களை அளித்து, அமெரிக்காவில் உள்ள மிகவும் செல்வாக்குமிக்க முதலாளித்துவ பெருநிறுவன செய்தித்தாள் —அமெரிக்க அரசு, உளவுத்துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் முதன்மையான ஊடகம்— அது அமெரிக்க வரலாற்றின் விவரிப்பில் ஒரு அடிப்படை திருத்தத்தை தொடங்குவதாக அறிவித்தது. அமெரிக்கப் புரட்சியையோ, அமெரிக்க உள்நாட்டுப் போரையோ இனி முற்போக்கான வரலாற்று நிகழ்வுகளாகப் பார்க்க வேண்டியதில்லை. 1619 திட்டம், புரட்சியை அடிமை உரிமையாளர்களின் அவநம்பிக்கையான மற்றும் சிடுமூஞ்சித்தனமான கிளர்ச்சியாக தீர்க்கமாக அம்பலப்படுத்தும், வீரமிக்க டன்மோர் பிரபு விடுதலைக்கான காரணத்தை முன்னெடுக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முயற்சிகளை முறியடிக்க உறுதியாக இருந்தது.

42. உள்நாட்டுப் போரைப் பொறுத்தவரை, அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் கூறினர். கூட்டமைப்பின் இராணுவம், அடிமைகளின் சுய-விடுதலைக்கான மிகப் பெரிய சம்பவத்தில் ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே வகித்தது என்றனர். லிங்கனைப் பொறுத்தவரை, அவர் ஒரு அற்ப, மோசமான இனவெறியர், அவர் வட அமெரிக்கக் கண்டத்திலிருந்து கறுப்பர்களை வெளியேற்றி ஆபிரிக்காவுக்கு திருப்புவதை தவிர வேறெதையும் விரும்பவில்லை என்றனர்.

43. லெரோன் பென்னட் ஜூனியர் போன்ற கறுப்பின தேசியவாத பிரச்சாரகர்களின் பிற்போக்கு இனவெறி புராணங்களை மறுசுழற்சி செய்வதை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றின் இந்த பொய்யான மற்றும் புத்திஜீவித திவாலான திருத்தம், உடனடியாக ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களின் குழுவினால் நீண்ட கால தாமதமான வெளிப்பாடாகப் பாராட்டப்பட்டது. உலக சோசலிச வலைத் தளத்தின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால், அது பெரும்பாலும் சவால் செய்யப்படாமல் போயிருக்கும். செப்டம்பர் 3, 2019 அன்று, 1619 திட்டம் தொடங்கி இரண்டு வாரங்களுக்குப் பின்னர், WSWS அதன் முதல் முக்கிய பதிலை வெளியிட்டது: “நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டம்: அமெரிக்க மற்றும் உலக வரலாற்றின் இனவாத பொய்மைப்படுத்தல்.”

44. ஹன்னா-ஜோன்ஸின் கட்டுரையில் உள்ள கசப்பான மற்றும் வெளிப்படையான பிழைகளின் இந்த விரிவான வெளிப்பாடு, 1619 திட்டத்தின் விமர்சனத்தை உருவாக்கிய கட்டுரைகளால் மட்டும் பின்பற்றப்படவில்லை. கோர்டன் வூட், ஜேம்ஸ் மெக்பெர்சன், ஜேம்ஸ் ஓக்ஸ், ரிச்சர்ட் கார்வர்டின், விக்டோரியா பைனம் மற்றும் கிளேபோர்ன் கார்சன் உட்பட முக்கிய வரலாற்றாசிரியர்களை பேட்டி கண்டு, 1619 திட்டத்தின் முக்கிய கூற்றுக்களின் விரிவான மறுப்புகளை தோழர் ரொம் மக்கமான் வழங்கினார்.

45. உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்து நியூ யோர்க் டைம்ஸை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. ஹன்னா-ஜோன்ஸின் கட்டுரையின் அசல் உரையில் அறிவிக்கப்படாத மற்றும்/அல்லது விவரிக்கப்படாத திருத்தங்களுடன் திட்டத்தின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற அதன் ஆசிரியர்களின் விகாரமான முயற்சி, அவர்களின் பரிதாபகரமான பிரச்சாரத்தை மேலும் இழிவுபடுத்த மட்டுமே உதவியது.

46. 1619 திட்டத்தை அம்பலப்படுத்துவதில் WSWS ஆற்றிய பங்கு, புத்திஜீவித ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. ட்ரொட்ஸ்கிச இயக்கம், அதன் ஆரம்பத்திலிருந்தே, ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ வரலாற்றாசிரியர்களால் கூறப்பட்ட அக்டோபர் புரட்சி மற்றும் சோவியத் வரலாறு பற்றிய கோரமான பொய்களை அம்பலப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பின்னர், அனைத்துலகக் குழு சோவியத்திற்கு பிந்தைய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளியின் பொய்களை அம்பலப்படுத்தும் ஏராளமான இலக்கியங்களை வெளியிட்டது, இதில், அனைத்துலகக் குழுவின் நெருங்கிய ஒத்துழைப்புடன் எழுதப்பட்ட வாடிம் ரோகோவின் படைப்புகள், அத்துடன் பேராசிரியர்களான இயன் தாட்சர், ஜெஃப்ரி ஸ்வைன் மற்றும் ரோபர்ட் சேர்வீஸ் ஆகியோரின் ட்ரொட்ஸ்கி எதிர்ப்பு அவதூறுகளுக்கு பதிலளிக்கும் விதமாக எழுதப்பட்ட கட்டுரைகள் உள்ளடங்கும். இக்கட்டுரைகள் லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பு என்ற நூலில் வெளியிடப்பட்டன.

47. சோசலிச இயக்கத்தின் வரலாற்றின் பொய்மைப்படுத்தலை அம்பலப்படுத்துவதில் ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னிலை வகிக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் அமெரிக்கப் புரட்சியையும் உள்நாட்டுப் போரையும் பாதுகாப்பது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலையீட்டில் முற்றிலும் சார்ந்திருந்தது என்ற உண்மை நீண்டகால அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் புத்திஜீவித வாழ்க்கைத் துறையில் நிரந்தரப் புரட்சி தத்துவம் ஒரு அடிப்படை முன்னிபந்தனையாகிவிட்டது என்பதற்கான ஒரு நிரூபணம் தொடர்பானதாகும். ஏகாதிபத்திய சிதைவின் சகாப்தத்தில், ஜனநாயகப் புரட்சிகளின் முக்கியமான மற்றும் நீடித்த வெற்றிகளின் முறையான மற்றும் அசைக்க முடியாத பாதுகாப்பு —அதில் அவற்றின் வரலாற்று நியாயத்தன்மையின் புத்திஜீவித பாதுகாப்பும் அடங்கும்— சோசலிச இயக்கத்தின் போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே நிலைநிறுத்த முடியும்.

48. 2020ஆண்டில் உலக சோசலிச வலைத் தளத்தின் புதுவருட முதல் பதிப்பு “சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது” என்ற தலைப்பில் ஒரு முன்னோக்கை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இப்புத்தாண்டு தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தினதும் உலக சோசலிச புரட்சியினதும் ஒரு தசாப்தம் ஆரம்பமாவதைக் குறித்துநிற்கிறது.

வருங்காலத்தில், புத்திசாதுர்யமான வரலாற்றாசிரியர்கள் இருபத்தியோராம் நூற்றாண்டின் எழுச்சிகள் பற்றி எழுதுகின்றபோது, 2020 களின் தொடக்கத்தில் நிலவிக் கொண்டிருந்த, விரைவில் உலகெங்கும் வியாபிக்கவிருந்த புரட்சிகரப் புயலின் “வெளிப்படையான” அறிகுறிகளைப் பட்டியலிடுவார்கள். உண்மைகளின் ஒரு விரிவான தொகுப்பு, ஆவணங்கள், வரைபடங்கள், வலைத் தள மற்றும் சமூக ஊடக பதிவுகள், மற்றும் தாங்கள் கையாளக்கூடிய மற்ற மதிப்புமிக்க டிஜிட்டல் தகவல் வடிவங்களின் மூலமாக, அறிஞர்கள், 2010 களை உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கமுடியாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் குணாதிசயப்படுத்தப்பட்ட ஒரு காலகட்டமாக விவரிப்பார்கள்.

இந்த நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தம் தொடங்கும்போது, தத்துவார்த்தரீதியாக காரல் மார்க்ஸால் முன்கணிக்கப்பட்ட ஒரு நிலைக்கு வரலாறு துல்லியமாக வந்து சேர்ந்திருந்ததை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுவார்கள்: “சமூகத்தின் சடத்துவ உற்பத்தி சக்திகள், அவற்றின் குறிப்பிட்ட அபிவிருத்திக் கட்டத்தில், அப்போது நிலவும் உற்பத்தி உறவுகளுடன், அல்லது அதன் ஒரு சட்டபூர்வமான வெளிப்பாடான அவை இதுவரை இயங்கிவந்த சொத்துடமை முறைகளுடன் மோதலுக்குள் வருகின்றன. அதிலிருந்து இந்த உற்பத்தி சக்திகளின் அபிவிருத்தி வடிவங்கள் அவற்றின் தளைகளாக மாறுகின்றன. அதன்பின் சமூகப் புரட்சியின் ஒரு சகாப்தம் ஆரம்பமாகிறது. பொருளாதார அடித்தளத்தின் மாற்றத்துடன், ஒட்டுமொத்தமான பாரிய மேற்கட்டுமானமும் கிட்டத்தட்ட துரிதமாய் உருமாற்றம் காண்கிறது.”

49. அனைத்துலகக் குழுவின் முன்னோக்குடன் பொதுவாக உடன்படுபவர்கள் மற்றும் ஒருவேளை எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட, வலைத் தளத்தின் பல வாசகர்கள், இந்த முன்னோக்கைக் வரலாற்று நிலைமையின் ஒரு கவனமான மதிப்பீட்டு என்பதைக் காட்டிலும் ஒரு புதிய தசாப்தத்தின் கொண்டாட்டத்தால் உந்தப்படும் மிகைப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தையாடலாக கருதியிருக்கலாம்.

50. ஆனால் இந்த அறிக்கையின் உண்மைத்தன்மை நிகழ்வுகளால் நிரூபிக்கப்பட வேண்டியிருந்தது. 2020 ஆம் ஆண்டின் முதல் மாதம் முடிவடைவதற்கு முன்பு, சாத்தியமான தொற்றுநோய் பற்றிய முதல் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. ஜனவரி 24, 2020 அன்று உலக சோசலிச வலைத் தளம் புதியவகை கொரோனா வைரஸ் வெடித்தது குறித்த தனது முதல் கட்டுரையை வெளியிட்டது. வேகமாக வளர்ந்து வரும் தொற்றுநோயால் ஏற்படும் பாரிய உலகளாவிய ஆபத்தை அது விரைவில் உணர்ந்துகொண்டது. பிப்ரவரி 28, 2020 அன்று, 'கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான உலகளாவிய ஒருங்கிணைந்த அவசரகால பதிலளிப்புக்காக' என்ற ஒரு அறிக்கையை ICFI வெளியிட்டது. வேறு எந்த வெளியீட்டிலும் காட்டாத தெளிவுடன், ICFI தொற்றுநோயின் பரந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தாக்கங்களைப் புரிந்துகொண்டு, உலக அளவில் முதலாளித்துவ சமூகத்தின் அனைத்து உள்ளார்ந்த முரண்பாடுகளையும் தீவிரப்படுத்தும் ஒரு 'தூண்டுதல் நிகழ்வு' என அதனை வரையறுத்தது.

51. முக்கிய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் கட்சியின் தலையீட்டின் இன்றியமையாத பங்கின் ஒரு மேலதிக எடுத்துக்காட்டாக, தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் தலைமையை அனைத்துலகக் குழு ஏற்றுக்கொண்டது. அது சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பரந்தளவிலான உழைக்கும் மக்களுக்கு ஒரு முன்னோக்கையும் மற்றும் கொள்கை வழிகாட்டுதலையும் வழங்கியது. முந்தைய சகாப்தத்தில், பெரிய பொது சுகாதார நெருக்கடிகள் பொதுமக்களுக்கு கல்வி ஊட்டுவதற்கும், தொற்று நோய்களை ஒழிப்பதற்கும் பரந்த அடிப்படையிலான பொது முயற்சிகளுக்கு வழிவகுத்தது. Sars-CoV-2 தொற்றுநோய் வெடித்ததற்கு பதிலளிக்கும் விதமாக அவ்வாறான எதுவும் நடக்கவில்லை. மார்ச் 2020இல் முதலாளித்துவ அரசாங்கங்களின் பிரதிபலிப்பை 'இழிந்த புறக்கணிப்பு' கொள்கை என WSWS விவரித்ததற்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பயனுள்ள எதிர்ப்பு அனைத்துலகக் குழுவிலிருந்து மட்டுமே வந்தது.

52. மார்ச் 6, 2020 அன்று, “கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டது. மார்ச் 14, 2020 அன்று, 'கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பிரதிபலிப்பாக, பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியத்துடனும், நாடு முழுவதும் அனைத்து வாகனத்துறை மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்' என ஒரு அறிக்கையை வெளியிட்டது, இதைத் தொடர்ந்து மார்ச் 17 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழுவின் அறிக்கை, 'கோவிட்-19 தொற்றுநோயை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது: தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு செயல்திட்டம்' இந்த அறிக்கைகள் மிச்சிகனில் தன்னிச்சையான வேலைநிறுத்தங்களைத் தூண்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன, இது வட அமெரிக்கா முழுவதும் ஆலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு பெருநிறுவனங்களை கட்டாயப்படுத்தியது. இந்த கட்டத்தில், அமெரிக்காவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை இன்னும் சில டஜன் ஆகவும் மற்றும் உலகம் முழுவதும் சில ஆயிரம் பேர் ஆகவுமே இருந்தது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எங்கள் கட்சி முன்வைத்த கொள்கையை ஏற்றுக்கொண்டிருந்தால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று கேட்க எங்களுக்கு உரிமை உள்ளது. இதற்கான பதில் நமக்குத் தெரியும். அது மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கும்.

53. தொற்றுநோய்க்கான மூன்று முக்கிய கொள்கை பிரதிபலிப்புகளை WSWS வரையறுத்திருந்தது: 1) 'சமூக நோயெதிர்ப்பு சக்தி' கொள்கைக்கான முதலாளித்துவ அரசின் பிரதிபலிப்பு 2) 'கட்டுப்படுத்தல்' என்ற தாராளவாத சீர்திருத்தவாத பிரதிபலிப்பு; மற்றும் 3) வைரஸ் ஒழிப்பிற்கும் மற்றும் இல்லாதழிப்பதற்குமான விஞ்ஞான அடிப்படையிலான மற்றும் அவசியமான சோசலிச வேலைத்திட்டம். உலக சோசலிச வலைத் தளமானது, தொழிலாள வர்க்கத்திற்கு கல்வி ஊட்டுவதற்கும், ஒழிப்பு/இல்லாதழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு வெகுஜன ஆதரவைக் கட்டியெழுப்புவதற்கும், சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்களை ஒன்றிணைத்து இரண்டு சர்வதேச வலையரங்கங்களை நடத்தியது.

54. ஏப்ரல் 24, 2021 அன்று, அனைத்துலகக் குழுவானது, தொற்றுநோய்க்கான அவசியமான பிரதிபலிப்பாகவும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்திற்காகவும், உலகளவில் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை உருவாக்குவதற்கான அழைப்பை வெளியிட்டது.

55. நவம்பர் 2021 இல், பேரழிவு தரும் ஓமிக்ரோன் மாறுபாடு வெடிப்பதற்கு சற்று முன்பு, WSWS தொற்றுநோய்க்கான சர்வதேச விசாரணையைத் தொடங்கியது. நடந்து கொண்டிருக்கும் இந்த முயற்சி, தொற்றுநோயின் உலகளாவிய சமூக தாக்கம் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் குற்றவியல் பிரதிபலிப்பு பற்றிய மிகவும் மேம்பட்ட மற்றும் விரிவான விசாரணையாக இருந்தது.

56. தொற்றுநோய்க்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பதிலிறுப்பு அதனை விமர்சிப்பதுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. அல்லது, இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், தொற்றுநோய் பற்றிய அதன் பகுப்பாய்வு, அனைத்து அரசாங்கங்களின் கொலைகாரக் கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன தொழிலாள வர்க்க எதிர்ப்பினை ஒழுங்கமைப்பதுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது.

57. ஜனவரி 6, 2021 அன்று, டொனால்ட் ட்ரம்ப் நவம்பர் 2020 தேர்தலில் பைடெனின் வெற்றியை உறுதிப்படுத்துவதைத் தடுக்கவும், வெள்ளை மாளிகையின் மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும், உண்மையில் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிலைநாட்டவும் காங்கிரஸ் கட்டிடத்தின் மீது ஒரு கும்பல் தாக்குதலை ஏற்பாடு செய்தார். உலக சோசலிச வலைத் தளத்தால் முன்னரே ஊகிக்கப்பட்ட சதி முயற்சியானது அமெரிக்க வரலாற்றில் முன்னோடியில்லாத நிகழ்வாகும். மேலும் இது அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி நெருக்கடி பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் பகுப்பாய்வை உறுதிப்படுத்தியது. அரசின் சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பைக் காட்டிலும் கும்பலின் தந்திரோபாய அனுபவமின்மையினால் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பின் தோல்வி, அரசியல் நிலைமையை ஸ்திரப்படுத்தவில்லை. எதிர்வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் 2021 ஆட்சிக் கவிழ்ப்பின் தொடரும் நிழலின் கீழ் உள்ளது.

58. இறுதியாக, 2019 ஆம் ஆண்டின் பள்ளி மற்றும் ஐந்தாம் காலகட்டத்தின் தொடக்கத்தை அது அடையாளம் காணும் அனுபவங்களை மதிப்பாய்வு செய்யும்போது பிப்ரவரி 24, 2022 அன்று, ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்தது. பைடென் நிர்வாகமும் ஐரோப்பாவில் உள்ள அதன் சகாக்களும், ஊடகங்களும் 'ஆத்திரமூட்டப்படாத போர்' என்று கண்டித்ததின் திடீர் மற்றும் எதிர்பாராத தொடக்கமாக இல்லாமல், இது நன்கு திட்டமிடப்பட்ட நேட்டோ ஆத்திரமூட்டல்களின் விளைவாகும். 2014 மைதான் ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் அதற்கு முன்னரும் கூட, ரஷ்யாவை ஒரு பேரழிவுகரமான போருக்கு இழுப்பதை நோக்கமாகக் கொண்டதும், ரஷ்ய ஆட்சியை சீர்குலைப்பதையும் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் உடைவுக்கு இட்டுச்செல்வதையும் நோக்கமாக கொண்டதாகும்.

59. முந்தைய சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்டது போல், கடந்த பத்து ஆண்டுகளில் WSWS இல் வெளியிடப்பட்ட அறிக்கைகள் 'ஆத்திரமூட்டப்படாத போர்' தொடர்பான கட்டுக்கதைகளை உடைக்கும் மறுப்புகளாகும். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான போருக்கான அமெரிக்காவின் இடைவிடாத தயாரிப்புகள் குறித்து WSWS வெளிப்படையாக எச்சரித்த நூற்றுக்கணக்கான கட்டுரைகள் மற்றும் அறிக்கைகள் உள்ளன. பிப்ரவரி 24, 2022 முதல், உக்ரேனில் நடந்த போர் தொடர்பான கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கை 1,000 இனை அண்மித்துள்ளது. உலக சோசலிச வலைத் தளத்தின் போரைப் பற்றிய ஒரு மதிப்பாய்விற்கு ஒரு வாரம் முழுவதையும் ஒதுக்க முடிவு செய்திருந்தாலும், வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஆவணங்களையே கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்திருக்கும்.

60. ட்ரொட்ஸ்கிச இயக்கம் அதன் வரலாற்றின் ஐந்தாம் காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்றும் 2020கள் புரட்சிகரப் போராட்டங்களின் தசாப்தமாக இருக்கும் என்றும் செய்த அனைத்துலகக் குழுவின் மதிப்பீடுகளுக்கு இந்த போர் மிக முக்கியமான சான்றாக உள்ளது. அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளின் மிகத் தீவிரமான வெளிப்பாடாக, போரின் தவிர்க்கமுடியாத விரிவாக்கம் தொழிலாள வர்க்கத்தின் முன் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனத்தனமா என்ற மாற்றீடுகளையே முன்வைத்துள்ளது.

61. இந்த நெருக்கடியின் அடிப்படையில் இருக்கும் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு, இந்தப் போரின் வேண்டுமென்றே ஆத்திரமூட்டல் மற்றும் இரண்டு அணுஆயுத வல்லரசுகளான ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளுடனான மோதலை அதிகரிப்பதற்கான பொறுப்பற்ற உறுதிப்பாடு ஆகியவை, வெறுமனே பகுத்தறிவற்ற ஆக்கிரமிப்பின் விளைவு அல்ல என்பதை அங்கீகரிக்க வேண்டும். 1930களில் இருந்ததைப் போலவே, ஆளும் வர்க்கங்கள் தமது நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு போரைத் தவிர வேறு வழியைக் காணவில்லை.1938 இல், ட்ரொட்ஸ்கி இடைமருவு வேலைத்திட்டத்தின் தொடக்கத்தில், ஏகாதிபத்திய சக்திகளிடம் இரண்டாம் உலகப் போரைத் தடுக்கும் திறன், முதலாம் உலகப் போருக்கு முன்னதாக இருந்ததை விடவும் குறைவாகவே உள்ளன என எழுதினார். இப்போது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முதலாளித்துவ உயரடுக்குகள் இரண்டாம் உலகப் போரைத் தடுப்பதில் இருந்ததை விட, மூன்றாம் உலகப் போரைத் தடுக்கும் திறனை குறைவாகவே கொண்டிருக்கிறது என எவ்விதமான அவசரமும் இல்லாமல் கூறலாம்.

62. ஒரு அணுஆயுதப் போர் பல்லாயிரக்கணக்கான மில்லியன் மக்களின் மரணத்திற்கும், அமெரிக்காவில் மட்டும் பத்தாயிரக்கணக்கான மில்லியன் மக்களின் மரணம் உள்ளடங்கலாக அமெரிக்காவின் அழிவையும் விளைவிப்பதற்கான அதிக நிகழ்தகவு பற்றி பைடென் நிர்வாகம் முற்றிலும் அறிந்திருக்கவில்லை என்று ஒருவர் கருதமுடியாது. எவ்வாறாயினும், அணுசக்தி போரானது அமெரிக்க முதலாளித்துவத்தின் உயிர்வாழ்விற்கு இன்னும் முக்கியமான இலக்குகளை அடைய எடுக்கப்பட வேண்டிய ஒரு அபாயமாக ஆளும் உயரடுக்குகளால் பார்க்கப்படுகிறது என்பதை மட்டுமே இது அர்த்தப்படுத்துகிறது. மேலும், ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தில், முதலாளித்துவம் இல்லாத அமெரிக்கா, பாதுகாக்கத் தகுதியற்ற நாடாக நோக்கப்படுகின்றது.

63. பல தசாப்தங்களாக அனைத்துலகக் குழுவால் அபிவிருத்தி செய்யப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பகுப்பாய்வில், அமெரிக்கா தனது நீண்டகால பொருளாதாரச் சரிவை இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் முக்கிய முதலாளித்துவ போட்டியாளர்களுக்கு எதிராக திட்டமிட்டபடி ஈடுசெய்ய முயன்றுள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்தினோம்.

64. பொருளாதாரச் சீரழிவுக்கும் இராணுவத் தீர்வுகளை நாடுவதற்கும் இடையிலான இந்த உறவு, ஒரு வகையில் சமகால புவிசார் அரசியலின் ஒரு விதிபோன்ற தன்மையைப் பெற்றுள்ளது. உலகளாவிய புவிசார் அரசியலில் அமெரிக்காவின் முக்கிய பாத்திரத்தைப் பாதுகாப்பது, மேலாதிக்கத்தை அடைவதற்கான அதன் முயற்சி ஒருபுறமிருக்க, அமெரிக்க டாலரை மறுக்க முடியாத உலக இருப்பு நாணயமாக பராமரிப்பதுடன் முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளது. இது உலக விவகாரங்களில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு மட்டுமின்றி, உள்நாட்டு நிதிய திவால்நிலையைத் தடுப்பதற்கும் தேவையான முக்கிய அடித்தளமாகியுள்ளது.

65. 1944 முதல் 1971 வரை இருந்த பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் அடிப்படையானது அவுன்ஸ் ஒன்றுக்கு 35 டாலர் என்ற விகிதத்தில் டாலரை தங்கமாக மாற்றுவதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த அமைப்பின் நம்பகத்தன்மை அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் நிதி மேலாதிக்கத்தைச் சார்ந்திருந்ததுடன், இது வர்த்தகம் மற்றும் செலுத்துமதி நிலுவைகளின் உபரிகளுக்கு உத்தரவாதம் அளித்தது. 1960களின் போது அந்த அத்தியாவசிய காரணிகளின் வீழ்ச்சியானது ஆகஸ்ட் 1971இல் டாலருக்கும் தங்கத்திற்கும் இடையிலான இணைப்பை நிராகரிக்க அமெரிக்காவை கட்டாயப்படுத்தியது.

அமெரிக்க கூட்டாட்சிக் கடன்

66. எளிமையாகக் கூறினால், வெளிநாட்டில் திரட்டப்பட்ட கடன் அவர்கள் 1971 ஆம் ஆண்டில் 80 பில்லியன் யூரோ-டாலர்களுக்கு அதிகமாக இருந்தது என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது. இது ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவிற்கு இந்த டாலர்களை திருப்பி அனுப்புவது தங்கத்தில் திருப்பிச் செலுத்தப்படும் என தொடர்ச்சியான உத்தரவாதம் அளிக்க சாத்தியமற்றதாக்கியது. இதுவே அமெரிக்காவை தங்கத்துடன் டாலருடனான உத்தியோகபூர்வ இணைப்பைக் கைவிடவும், மாற்றமடையும் நாணய விகித முறைக்கு மாறவும் நிர்ப்பந்தித்தது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நாட்டின் வர்த்தக இருப்பு, நடப்புக் கணக்கு நிலுவைகள் மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டத்தின் நிலை போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படும் நாணயங்களின் தினசரி மாற்று விகிதம் சந்தையில் தீர்மானிக்கப்பட்டது.

67. பிரெட்டன் வூட்ஸின் முறிவைத் தொடர்ந்து வந்த தசாப்தங்களில், அமெரிக்கா இன்னும் அதிக அளவிலான கடன் மற்றும் பற்றாக்குறைகளைக் குவித்தது. ஆயினும்கூட, டாலருக்கு மாற்றாக வேறு எந்த தேசிய நாணயமும் இல்லாத காரணத்தால், உலக இருப்பு நாணயமாக டாலரின் பங்கு பராமரிக்கப்படுகிறது. இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய முன்னுரிமைகளை வழங்கியது. உலகின் மத்திய நாணயத்தின் வினியோகத்தர் என்ற முறையில், அது பெரும் வரவு-செலவுத் திட்ட, வர்த்தக மற்றும் கொடுப்பனவுப் பற்றாக்குறைகளை கொண்டிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

68. இருப்பினும், கடந்த 15 ஆண்டுகளின் நிகழ்வுகள், டாலரின் தனித்துவமான உலகளாவிய பாத்திரத்தின் தொடர்ச்சி குறித்து கடுமையான கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளன. முதலாவதாக, அமெரிக்க தேசியக் கடனின் அளவு அதிவேகமாக வளர்ந்துள்ளது. 1982 வரை தேசியக் கடன் 1 டிரில்லியன் டாலர் மதிப்பை தாண்டியிருந்தது. இது இப்போது 32 டிரில்லியன் டாலரை தாண்டியுள்ளது. தேசியக் கடனானது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

69. கடந்த 15 ஆண்டுகளில் அரசாங்கக் கடனின் அளவு வெடித்தமை இரண்டு பெரிய வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்புகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது: முதல் 2008 இலும் மற்றும் இரண்டாவதும் இதைவிட பாரியளவிலான பிணையைடுப்பு, தொற்றுநோயால் தூண்டப்பட்ட 2020 வோல் ஸ்ட்ரீட் உடைவிற்கு பிரதிபலிப்பாக இருந்தது.

70. டாலரின் நிலையை பாதிக்கும் மற்றொரு காரணி, அதன் நலன்களுடன் முரண்படும் வெளிநாட்டு போட்டியாளர்களுக்கு எதிராக நிதித் தடைகள் வடிவில் அமெரிக்காவால் ஆயுதமாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. செல்வாக்குமிக்க அமெரிக்க வெளியுறவுக் கொள்கைத் பண்டிதர் ஃபரீட் சக்காரியா மார்ச் 24, 2023 அன்று வாஷிங்டன் போஸ்ட்டில் எழுதியது போல்:

டாலர் என்பது அமெரிக்காவின் சக்திவாய்ந்த ஆயுதமாகும். இது வாஷிங்டனுக்கு நிகரற்ற பொருளாதார மற்றும் அரசியல் வலிமையை அளிக்கிறது. இதனால் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கலாம், உலகப் பொருளாதாரத்தின் பெரும் பகுதிகளிலிருந்து அவற்றை முடக்கலாம். ஆடம்பரமாக செலவு செய்யும் போது, அதன் கடன் பொதுவாக கடன் பத்திரங்களின் வடிவில், உலகின் பிற நாடுகளால் வாங்கப்படும் என்பதில் உறுதியாக நம்பலாம்.

71. ஆனால் அமெரிக்காவின் மூர்க்கமான நடவடிக்கைகள் ஆபத்தான எதிர்வினையை உருவாக்குகிறது என சக்காரியா கவலை தெரிவித்தார். அவர் பின்வருமாறு கூறுகிறார்:

கடந்த தசாப்தத்தில் வாஷிங்டன் டாலரை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியமை, பல முக்கியமான நாடுகளை அவை அடுத்த ரஷ்யாவாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகளைத் தேட வழிவகுத்தது. உலகளாவிய மத்திய வங்கி கையிருப்புகளில் டாலர்களின் பங்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணளவாக 70 சதவீதத்தில் இருந்து, இன்று 60 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்து, படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ஐரோப்பியர்களும் சீனர்களும் டாலர் தொடர்புடனான SWIFT அமைப்புமுறைக்கு வெளியே சர்வதேச கட்டண முறைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். சவுதி அரேபியா தனது எண்ணெயின் விலையை யுவானில் நிர்ணயிக்கும் யோசனையை விருப்பமாக கொண்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் எண்ணெயின் பெரும்பகுதியை டாலரைத் தவிர வேறு நாணயங்களில் செலுத்துகிறது. பெரும்பாலான நாடுகளால் ஆராயப்படும் டிஜிட்டல் நாணயங்கள் மற்றொரு மாற்றாக இருக்கலாம். உண்மையில், சீனாவின் மத்திய வங்கி அவ்வாறான ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த மாற்றுகள் அனைத்தும் செலவுகளை உருவாக்குகின்றன. ஆனால் அரசியல் இலக்குகளை அடைவதற்கு நாடுகள் அதிக விலை கொடுக்கத் தயாராக உள்ளன என்பதை கடந்த சில ஆண்டுகள் நமக்குக் கற்பித்திருக்கிறது.

72. சீனா முக்கியப் பொருளாதாரப் போட்டியாளராக வெளிப்படுவது, டாலரில் இருந்து விலகிச் செல்வதை விரைவுபடுத்தக்கூடும் என்பது பற்றி அமெரிக்க ஆளும் வர்க்கம் அதிக கவலை கொண்டுள்ளது. பல்வேறு நாணயங்களை கொண்ட ஒரு கூடை நாணயங்களின் அடிப்படையில் உலகளாவிய வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு நிதியளிப்பதற்கான மற்றொரு அமைப்பு உருவாகலாம், அல்லது இன்னும் அச்சுறுத்தலாக தங்கத்தின் அதிகரித்த பயன்பாடு டாலரின் தனித்துவமான நிலையை இழக்கச் செய்யலாம்.

73. சமீபத்தில் ஜூன் மாதம் நடைபெற்ற விசாரணையில், நிதி நிறுவனங்கள் மற்றும் நிதிச் சேவைகளுக்கான காங்கிரஸ் குழுவின் நிதிக் கொள்கைக்கான துணைக் குழுவின் அறிக்கை, “டாலர் ஆதிக்கம்: அமெரிக்க டாலரின் நிலையை உலகளாவிய கையிருப்பு நாணயமாகப் பாதுகாத்தல்” என்ற தலைப்பில் இருந்தது. அவரது ஆரம்ப அறிக்கையில், ஓஹியோவைச் சேர்ந்த ஒரு கறுப்பின ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் பெண்மணி ஜோய்ஸ் பீட்டி பின்வருமாறு கூறினார்:

உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளின் கையிருப்பில் சுமார் 60 சதவீதம் அமெரிக்க டாலர்களில் உள்ளதால் அமெரிக்க டாலர் உலகளாவிய இருப்பு நாணயமாகக் கருதப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்திற்கான விருப்பமான நாணயமாக டாலர் கருதப்படுகிறது. எண்ணெய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அமெரிக்க டாலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்நியச் செலாவணி சந்தையில் கிட்டத்தட்ட 90 சதவீத பரிவர்த்தனைகள், ஆம், டாலரை உள்ளடக்கியது. அமெரிக்க அரசு கருவூலங்களுக்கான சந்தையானது உலகின் உறுதியான மற்றும் மிகவும் கொடுப்பனவு பலம்மிக்க சந்தையாகும். மேலும் அமெரிக்க மூலதனச் சந்தைகளின் நம்பகத்தன்மையும் ஸ்திரத்தன்மையும் முதலீட்டாளர்களுக்கு டாலரை விருப்பமான நாணயமாக்குகிறது.

நாணயத்தின் மேலாண்மையும், சர்வாதிக்கமும், உலகளாவிய நிதிச் சந்தைகளில் செல்வாக்கு செலுத்துவதற்கான நிதிய ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதிலிருந்தது, குறைக்கப்பட்ட கடன் செலவுகளிலிருந்து அமெரிக்காவிற்கு பல நன்மைகளை வழங்குகிறது. நமது தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இது அனுமதிக்கிறது. அமெரிக்க டாலரின் மறுக்க முடியாத மதிப்பின் ஆதிக்கத்தின் காரணமாக, நாம் நாணயம் தொடர்பாகவும் தற்போது அதற்குள்ள அச்சுறுத்தல்கள் பற்றி கவனமெடுப்பதும் மிகவும் முக்கியமானது.

நாம் இதுபற்றிப் பேசுகையில், ரஷ்யா, சீனா போன்ற வெளிநாட்டு எதிரிகள் அமெரிக்க டாலரை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், நமது உலகளாவிய சக்தி மற்றும் செல்வாக்கை முடக்கவும் தீவிரமாக செயல்படுகின்றனர். கடந்த தசாப்தத்தில் ரஷ்யாவின் தங்க கையிருப்புகளின் விரைவான குவிப்பு மற்றும் பரிவர்த்தனைகளைத் தீர்த்து வைப்பதற்கும் SWIFTஅல்லாத அமைப்பினை சீனா உருவாக்குவதையும் நாங்கள் காண்கிறோம்.

74. அதே விசாரணையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது 'மேம்படுத்தப்பட்ட விசாரணை நுட்பங்களை' வடிவமைக்க உதவியவரும் மற்றும் பல உயர்மட்ட அரசு பதவிகளை வகித்த மார்ஷல் பில்லிங்ஸ்லியா, 16 ஆம் நூற்றாண்டின் ஸ்பெயின் வெள்ளியினதும், 17 ஆம் நூற்றாண்டின் டச்சு புளோரின் மற்றும் இறுதியாக பிரிட்டிஷ் பவுண்ட் ஸ்டெர்லிங் இன் தலைவிதியை டாலர் சந்திக்க நேரிடும் என்று கவலை தெரிவித்தார். 'ஒரு நாட்டின் நாணயம் வர்த்தகக் கணக்கின் விருப்பமான அலகாக இருப்பதற்கும் மற்றும் உலக அரங்கில் அந்த நாட்டின் ஒப்பீட்டு ஆதிக்கத்திற்கும் இடையேயான தொடர்பு தெளிவாக உள்ளது' என்று அவர் கூறினார். அவர் தொடர்ந்தார்:

அதனால்தான், லூலா, புட்டின் மற்றும் ஜி போன்ற தலைவர்கள் அனைவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாம் மிகவும் சிரமப்பட்டு கட்டமைக்கப்பட்ட சர்வதேச பாதுகாப்பு கட்டமைப்பை அழிக்க விரும்புவதைப் போலவே, உலகளாவிய இருப்பு நாணயமாக டாலரின் பங்கைக்குறைக்க விரும்புகிறார்கள். இறுதியில், அவர்கள் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதிலிருந்து அமெரிக்காவை இடமாற்றம் செய்வதற்கான ஒரு வழியாக இதனைப் பார்க்கிறார்கள். அண்மைக்காலத்தில், நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாக நிதியைப் பயன்படுத்துவதற்கான நமது திறனை அழிக்கும் ஒரு வழியாக அவர்கள் இதைப் பார்க்கிறார்கள்.

75. குறிப்பிடத்தக்க வகையில், ரஷ்யா மற்றும் சீனாவால் தங்கம் வாங்கி குவிக்கப்படுவது குறித்து பில்லிங்ஸ்லியா மிகுந்த கவலையை வெளிப்படுத்தினார். அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

மார்ச் 2018 இல், ரஷ்யா அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் உரிமையை 96 பில்லியன் டாலரில் இருந்து 15 பில்லியன் டாலராக குறைக்கத் தொடங்கியது. ரஷ்யாவும் பெரிய அளவில் தங்கத்தை வாங்கத் தொடங்கி, உலகின் (2,300 டன்களுடன்) ஐந்தாவது பெரிய உரிமையாளராக ஆனது. …

சீனா இப்போது தங்கம் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மே மாதத்திற்கான தரவை நான் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் ஏப்ரல் மாதம் அதன் தங்க இருப்புகளில் சீன விரிவாக்கத்தின் தொடர்ச்சியான ஆறாவது மாதத்தை குறிக்கிறது. அதன் கையிருப்பு 2,000 டன்களை எட்டியுள்ளது. அவை குறைந்தபட்சம் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களாக உள்ளன. இந்த எண்ணிக்கை உண்மையில் மிக அதிகமாக இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். மேலும் அவை உலகெங்கிலும் உள்ள சீன தங்கச் சுரங்கத்தால் உருவாக்கப்பட்ட தொகையை மறைக்கிறது. சீனா உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளரும் மற்றும் அதில் பாதி அரசுக்கு சொந்தமானதாகும். சீனா உலகின் மிகப்பெரிய தங்க இறக்குமதியாளராகவும் உள்ளது. அதில் பெரும்பாலானவை அறிவிக்கப்படவில்லை. குறைந்தபட்சம், மக்கள் சீனக் குடியரசு, நிதித் தடைகள் மூலம் தொடுவதற்கு கடினமாக இருக்கும் சொத்துக்களுடன் ஒரு போர்க் களத்தை உருவாக்குகிறது. ஆனால் சீனா யுவானின் அடிப்படையிலான ஒப்பந்தங்களை தங்கத்தின் மதிப்புடன் ஆதரிக்கத் தொடங்கினால், மாற்றீடு செய்வது பற்றிய சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம் யுவான் டாலருக்கு சவால் விடுவதற்குள்ள ஒரு பெரிய தடையை நீக்கலாம்.

76. ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் ஜெஃப்ரி ஏ. ஃபிராங்கல் மார்ச் 24, 2023 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள Peterson Institute for International Economics இல் நடத்திய மாநாட்டில் ஒரு கட்டுரையை சமர்ப்பித்தார். அவர் பேசிய அமர்வு: “டாலர் அடிப்படையிலான அமைப்பை மேம்படுத்தப்பட முடியுமா அல்லது மாற்ற முடியுமா? என்ற தலைப்பில் இருந்தது.

தங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட முக்கியத்துவத்திற்கு அவர் கவனத்தை ஈர்த்தார். தேசிய நாணயங்கள் மட்டுமே தனித்த சர்வதேச கையிருப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அல்லது சர்வதேச கணக்கெடுப்பிற்கான அலகாகவோ அல்லது பணம் செலுத்தும் வழிமுறையாகவோ இருக்க்கத் தேவையில்லை. ஒரு மாற்று சொத்தாக, சமீப காலம்வரை பெரும்பாலான பொருளாதார வல்லுனர்களால் 'காட்டுமிராண்டித்தனமான கடந்த காலத்தின் நினைவுச்சின்னம்' என்று கருதப்பட்டாலும், இப்போது அது சர்வதேச கையிருப்புக்களின் ஒரு அங்கமாக செயலில் பங்கு வகிக்கிறது. அதுதான் தங்கம். மற்றொன்று புதியது: கிரிப்டோகரன்சி (cryptocurrency - ஒரு காட்டுமிராண்டித்தனமான எதிர்காலத்தின் அடையாளம்?)

மத்திய வங்கியில் தங்கம் வைத்திருப்பது ஒரு அராஜகமானது என்று நாங்கள் நீண்ட காலமாக நினைத்தோம். பல நாடுகளில் உள்ள நாணய அதிகாரிகள் இன்னும் சில தங்கத்தை வைத்திருந்தனர். ஆனால் அதை தங்கள் சர்வதேச கையிருப்புக்களின் செயற்பாட்டில் உள்ள பகுதியாக கருதவில்லை. அதாவது, அவர்கள் அதை வாங்கவும் இல்லை, விற்கவும் இல்லை. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், மத்திய வங்கிகள், குறிப்பாக ஆசியாவில், தீவிரமாக தங்கத்தை வாங்குகின்றன (மற்றும் விற்பனை செய்கின்றன).

77. உக்ரேனில் போர் பெரும்பாலும் அதன் இரண்டாம் ஆண்டில் நுழைந்துள்ளது. மரணம் மற்றும் அழிவின் அளவுகள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஐரோப்பாவில் காணப்பட்ட எதற்கும் அப்பாற்பட்டதாக உள்ளது. இறந்த அல்லது காயமடைந்த உக்ரேனிய மற்றும் ரஷ்ய படையினரின் எண்ணிக்கை தெரியவில்லை. உக்ரேனிய அல்லது ரஷ்ய ஆட்சிகள் துல்லியமான தகவல்களை வழங்கவில்லை. ஆனால் உக்ரேனிய இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது 200,000 மற்றும் கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று நம்பத்தகுந்த முறையில் மதிப்பிடுவதற்கு போதுமான தகவல்கள் உள்ளன. ரஷ்ய இறப்புகளின் எண்ணிக்கை 100,000 ஐ நெருங்கக்கூடும். உண்மையில் கொல்லப்பட்ட அனைவரும் இந்தப் போருக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். இந்த இறந்த உக்ரேனியர்களும் ரஷ்யர்களும் நேட்டோவின் ஏகாதிபத்திய சக்திகளாலும், கியேவிலுள்ள அவர்களின் கைக்கூலிகளாலும், மாஸ்கோவில் அரசியல் ரீதியாக திவாலான ஆட்சியின் முடிவுகளாலும் பாதிக்கப்பட்ட அப்பாவிகளாவர்.

ஜூலை 11, 2023 செவ்வாய்க் கிழமை, உக்ரேனின் டினிப்ரோவில் நடந்த இறுதிச் சடங்கின் போது, 47வது படைப்பிரிவைச் சேர்ந்த ஆண்ட்ரி ஹுசாக் என்ற லிட்சரின் சவப்பெட்டியை புதைகுழிக்குள் இறக்கிய இறுதிச் சடங்கு பணியாளர்கள் [AP Photo]

78. அமெரிக்காவும் நேட்டோவும் போரைத் தூண்டியது உண்மைதான். ஆனால், படையெடுப்பிற்கான புட்டின் ஆட்சியின் பிற்போக்குத்தனமான முடிவு, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தை ஊழல் நிறைந்த தன்னலக்குழுக்களுக்கு மாற்றியதன் இறுதி விளைபொருளாகும். புட்டின் அரசாங்கத்தின் பேரழிவுகரமான தவறான கணக்கீடுகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பு செழிப்பு மற்றும் ரஷ்யாவை முதலாளித்துவ நாடுகளின் சகோதரத்துவத்துடன் ஒருங்கிணைக்கும் என்ற மாயையான கருத்தாக்கத்தில் இருந்து வருகின்றன. 'மேற்கத்திய பங்காளிகள்' என்று அழைக்கப்படுபவர்களின் நம்பிக்கையையும் நட்பையும் பெற மார்க்சிசத்தையும் அக்டோபர் புரட்சியையும் கண்டனம் செய்வதே போதுமானது என்று புட்டின் நம்பினார்... ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் புட்டினின் நட்பை விரும்பவில்லை'. அதற்கு ரஷ்யாவின் தங்கம், பிளாட்டினம், லித்தியம், மாலிப்டினம், டைட்டானியம், கோபால்ட் மற்றும் அந்த பரந்த நாட்டின் மண்ணில் காணப்படும் பிற அத்தியாவசிய மூலோபாய உலோகங்கள் மற்றும் தாதுக்களுக்கான தடையற்ற அணுகலை விரும்புகிறது.

79. இந்தப் போர் கடந்து போகும் ஒரு அத்தியாயம் அல்ல. மோதலின் குறுகிய கால விளைவு எதுவாக இருந்தாலும், இந்த மோதல் போரை இயல்பானதொன்றாக்குவதில் ஒரு மைல்கலாக இருப்பதுடன் மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்களை பின்தொடர்வதற்கு வெகுஜனக் கொலைகளை ஏற்றுக்கொள்வதை உருவாக்குகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகளாவிய போருக்கான அதன் திட்டங்களை மறைக்க முயலவில்லை. ரஷ்யாவுடனும் மற்றும் சீனாவுடனுமான போர் என்பது 'அது நடக்குமா' என்பதல்ல, ஆனால் அது எப்படி, எப்போது நடத்தப்படும் என்பது பற்றியதாக உள்ளது. புவிசார் அரசியல் நோக்கங்களின் அப்பட்டமான அறிக்கையில், ஒரு செல்வாக்குமிக்க இதழான The National Interest, அமெரிக்க இராஜதந்திரத்தின் முக்கிய நோக்கம் ரஷ்யா மற்றும் சீனாவுடனான போரைத் தடுப்பதில் கவனம் செலுத்தாமல், “ஒரு போரில் அது இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த இரண்டு சக்திகளுடனான அதன் போட்டிகளை வெவ்வேறு கட்டங்களில் நடாத்தும் வழியைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று வாதிட்டது.

80. உக்ரேனில் நடக்கும் போர், அனைத்துலகக் குழுவால் தற்போதைய தசாப்தத்தின் புரட்சிகர குணாம்சத்தை அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதற்கான மிக சக்திவாய்ந்த உறுதிப்படுத்தல் ஆகும். ஆனால் இது நான்காம் அகிலத்தின் வரலாற்றின் ஐந்தாம் காலகட்டம் என்ற மதிப்பீட்டோடு எவ்வாறு தொடர்புடையது? இந்தக் கேள்விக்கான பதிலுக்கு, ஒரு புரட்சிகர சகாப்தத்தின் பின்னணியில், முதலாளித்துவ நெருக்கடியின் புறநிலை வளர்ச்சிக்கும் வர்க்க மோதலின் தவிர்க்க முடியாத தீவிரம் மற்றும் புரட்சிகரக் கட்சியின் அகநிலை நடைமுறைக்கும் இடையிலான உறவைப் பற்றிய மார்க்சிச புரிதல் தேவைப்படுகிறது.

81. போர் பற்றிய அவரது அனைத்து முக்கிய அறிக்கைகளிலும், ட்ரொட்ஸ்கி இரண்டு அடிப்படைக் குறிப்புகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஏகாதிபத்திய போரை நோக்கிய உந்துதலை தொழிலாள வர்க்கத்தால் புரட்சிகரமாக முதலாளித்துவத்தை தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே நிறுத்த முடியும் என்பது முதல் புள்ளி. இரண்டாவது விடயம் என்னவெனில், இது தூக்கியெறியப்படுவதற்கு நான்காம் அகிலத்தை தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாகக் கட்டியெழுப்புவது அவசியமாகும். புரட்சிகரத் தலைமை இல்லாமல், தொழிலாள வர்க்கத்தின் தன்னிச்சையான இயக்கத்தின் வளர்ச்சி, போரை நிறுத்தவோ அல்லது ஒட்டுமொத்தப் போரை நடத்துவதற்குத் தேவையான சர்வாதிகார-பாசிச ஆட்சி ஆளும் வர்க்கத்தால் திணிக்கப்படுவதையோ தடுத்துநிறுத்தாது.

82. ஏப்ரல் 1937ல் டுவி ஆணைகுழுவின் முன் தனது நான்கு மணி நேர உரையின் முடிவில், புரட்சி வெடிப்பதை விரைவுபடுத்தும் வழிமுறையாக போரை அவர் வரவேற்கிறார் என்ற ஸ்ராலினிச பொய்க்கு ட்ரொட்ஸ்கி பதிலளித்தார். இந்த அறிக்கை போருக்கும் புரட்சிக்கும் இடையிலான உறவின் சுருக்கமான விளக்கமாக இருந்தது.

உண்மையில் போர் பெரும்பாலும் புரட்சியை துரிதப்படுத்தியுள்ளது. ஆனால் துல்லியமாக இதன் காரணமாக, இது பெரும்பாலும் கருச்சிதைவான முடிவுகளுக்கும் இட்டுச்சென்றது. போர் சமூக முரண்பாடுகளையும் வெகுஜன அதிருப்தியையும் கூர்மைப்படுத்துகிறது. ஆனால் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வெற்றிக்கு அது போதாது. வெகுஜனங்களில் வேரூன்றிய ஒரு புரட்சிகர கட்சி இல்லாமல், புரட்சிகர சூழ்நிலை மிகவும் கொடூரமான தோல்விகளுக்கு வழிவகுக்கிறது. அனைத்து நாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளும் செய்வதுபோல் வெற்றிபெறமுடியாதுள்ள போரை 'விரைவுபடுத்துவது' எமது பணி அல்ல. ஏகாதிபத்தியங்கள் உழைக்கும் மக்களுக்கு விட்டுக்கொடுக்கும் நேரத்தை ஒரு புரட்சிகரக் கட்சியையும் புரட்சிகர தொழிற்சங்கங்களையும் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துவதே எமது பணியாகும்.

பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இன்றியமையாத நலன்களுக்காக, போர் வெடிப்பது முடிந்தவரை தாமதப்படுத்தப்பட வேண்டும், தயாராக இருக்கக்கூடிய அதிகபட்ச நேரத்தைப் பெற வேண்டும். உழைப்பாளிகளின் நடத்தை எவ்வளவு உறுதியானதாகவும், அதிக தைரியமானதாகவும், புரட்சிகரமானதாகவும் இருக்கிறதோ, அந்தளவிற்கு ஏகாதிபத்தியவாதிகள் தயங்குவார்கள், இன்னும் நிச்சயமாக போரை ஒத்திவைக்க முடியும். போருக்கு முன்னர் புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஒருவேளை போரையே சாத்தியமற்றதாக்கி விடலாம்.

போரும் புரட்சியும் மனிதகுல வரலாற்றில் மிக மோசமான மற்றும் சோகமான நிகழ்வுப்போக்குகளாகும். நீங்கள் அவற்றுடன் கேலி செய்ய முடியாது. அவர்கள் சிறுபிள்ளைத்தனத்தை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எமது விருப்பத்தின் பேரில் தூண்டப்பட முடியாத புறநிலை புரட்சிகரக் காரணிகள் மற்றும் புரட்சியின் அகநிலை காரணியான பாட்டாளி வர்க்கத்தின் நனவான முன்னணிப் படையான அதன் கட்சி ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த கட்சியை மிகுந்த ஆற்றலுடன் தயார்படுத்துவது அவசியம்.

83. இந்த முன்னோக்கில்தான் கட்சி தனது பணியை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இது மட்டுமே யதார்த்தமான முன்னோக்கு. முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிந்து, அதற்கு மாற்றாக சோசலிசத்தை உருவாக்கும், உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் அதன் புறநிலைப் பாத்திரத்தின் மூலம் தொழிலாள வர்க்கம்தான் சமுதாயத்தில் அடிப்படை புரட்சிகர சக்தியாக இருக்கிறது என்ற அடிப்படை மற்றும் வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட முன்மாதிரியில் இருந்து நமது பணி தொடர்கிறது. தொழிலாள வர்க்கம் அரசியல் சுய-நனவையும் அதன் வரலாற்றுப் பணிகளைப் பற்றிய புரிதலையும் பெற முடியுமா அல்லது இல்லையா என்பது வெறும் ஊகத்திற்குரிய விஷயமல்ல. எதைச் சாதிக்க முடியும் அல்லது சாதிக்க முடியாது என்பது நடைமுறையில்தான் தீர்மானிக்கப்படும். ட்ரொட்ஸ்கி கூறியிருப்பதைப் போல, போராட்டமே இதை முடிவு செய்யும். புரட்சிகள் தோல்விகளைச் சந்தித்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக 1917 இன் அனுபவத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான தலைமைத்துவத்தை வழங்கினால், ஆளும் வர்க்கத்தை தூக்கி எறிய முடியும் என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

84. தொழிலாள வர்க்கம் போராடுமா அல்லது அமெரிக்க தொழிலாள வர்க்கம் நெருக்கடிக்கான சோசலிச தீர்வை ஏற்குமா என்ற ஊகங்களில் நேரத்தை வீணடிக்க மாட்டோம். நமது முயற்சிகள் கட்சியின் பணிகளை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் சந்தேகம் கொண்டவர்கள் இன்னும் திட்டவட்டமான பதிலைக் கோரினால், தொழிலாள வர்க்கத்தின் திறன் மீதான நம்பிக்கையை நியாயப்படுத்த அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் வெகுஜன சமூகப் போராட்டங்களின் போதுமான உதாரணங்கள் எங்களிடம் உள்ளன என்று நான் பதிலளிப்பேன். உலகம் புரட்சிகரக் கோபத்தால் கொதித்தெழுகிறது. கிளர்ச்சியின் மனநிலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. பாரிஸின் தெருக்கள் பலமுறை நூறாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்பியுள்ளன. புரட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக இருப்பது தொழிலாளர்களின் போராட விருப்பமின்மை அல்ல, மாறாக தொழிற்சங்கங்கள் மற்றும் பல சமயங்களில் வசதியான நடுத்தர வர்க்க போலி இடதுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் பிற்போக்கு அரசியல் அமைப்புகளால் நடத்தப்படும் நாசவேலைகளுமாகும்.

85. மேலும், கடந்த ஆண்டு UAW தேர்தலில் கட்சியின் தலையீடு தொழிலாள வர்க்கத்தின் நனவைப் பற்றிய ஒரு உட்பார்வை வழங்கியது. தோழர் வில் லெஹ்மனின் வேட்புமனு, தனது சோசலிச நம்பிக்கைகளை வெளிப்படையாகக் கூறியதுடன், இந்த தொழிற்சங்க எந்திரத்தை ஒழிக்க அழைப்பு விடுத்தது. இது 5,000 வாகனத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றது. தேர்தல் பற்றி தெரிந்திருந்தால் இன்னும் ஆயிரக்கணக்கானோர் அவருக்கு வாக்களித்திருப்பார்கள். எவ்வாறாயினும், அதிகாரத்துவம், அரசியல் தீவிரமயமாதல் மற்றும் சோசலிசத்தை நோக்கிய இயக்கத்தின் வளர்ச்சியை உணர்ந்து அஞ்சுகிறது, தொழிலாளர்களின் வாக்குப்பதிவைக் குறைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.

86. பிற்போக்கு தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ எந்திரங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் போராடும் எதிர்ப்பை சோசலிச சமத்துவக் கட்சி வழிநடத்துகிறது என்பதற்கு லெஹ்மனின் பிரச்சாரம் குறிப்பிடத்தக்க சான்றாகும். கட்சியால் தொடங்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் உள்ள போர்க்குணமிக்க தொழிலாளர்களின் உண்மையான இயக்கமாக அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வருகிறது.

87. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தின் வளர்ச்சியானது கட்சியின் உறுப்பினர்கள் மீது இன்னும் அதிகமான கோரிக்கைகளை சுமத்துகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள கட்சி உறுப்பினர்களின் கல்வியூட்டலில் அதிக கவனம் தேவைப்படுகிறது. இந்தக் கல்வியூட்டலின் மிக முக்கியமான கூறுபாடு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றைப் பற்றி காரியாளர்களின் அறிவையும், புரிதலையும் உயர்த்துவதாகும்.

88. மார்க்சிச இயக்கத்திற்கு, வரலாற்று அறிவு என்பது எப்போதும் புரட்சிகர நடைமுறையின் அடித்தளமாக இருந்து வருகிறது. வரலாற்று அனுபவத்தை உள்ளீர்த்துக்கொள்வது தத்துவார்த்த ரீதியாக வழிநடத்தப்படும் நடைமுறைக்கு அடிப்படையாகும். இது பொதுவாக தனிப்பட்ட அனுபவத்தையும் சொந்த அபிப்பிராயங்களையும் அரசியல் செயல்பாட்டிற்கான ஆரம்பபுள்ளியாக கொள்ளும் ஒருவருக்கு, அரசியலுக்கான நடைமுறை அணுகுமுறையை வழங்கவேண்டும். அதிகாரத்துவத்தின் தத்துவார்த்தப் போக்குகள் பற்றிய ஒரு முக்கியமான கட்டுரையில், ட்ரொட்ஸ்கி எழுதினார்:

…“நேரடி” நடைமுறையை மிக உயர்ந்ததாக கருதி தங்களை வழிநடத்திக் கொள்ளும் அனுபவவாதிகள் சரியானவர்களா? அப்படியானால், அவர்கள் மிகவும் நிலையான சடவாதிகள் இல்லையா? இல்லை, அவர்கள் சடவாதத்தின் கேலிச்சித்திரத்தை பிரதிபலிக்கின்றனர். தத்துவத்தால் வழிநடத்தப்படுவது என்பது, அன்றைய ஒன்று அல்லது மற்றொரு நடைமுறைச் சிக்கலை முடிந்தவரை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கு, மனிதகுலத்தின் அனைத்து முந்தைய நடைமுறை அனுபவங்கள் அனைத்திலிருந்தும் பெறப்பட்ட பொதுமைப்படுத்தல்களால் வழிநடத்தப்பட வேண்டும். எனவே, தத்துவத்தின் மூலம், நடைமுறையின் குறிப்பிட்ட அம்சங்களைக் காட்டிலும், ஒட்டுமொத்தமாக-நடைமுறையின் முதன்மையான தன்மையை நாம் துல்லியமாகக் கண்டறியலாம்.

89. இன்றைய நெருக்கடி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியால் முன்வைக்கப்படும் பிரச்சனைகளுக்கு அதன் பதிலளிப்பை வழிநடத்த, புரட்சிகரக் கட்சியால் பயன்படுத்தப்படும் இந்தப் பொதுமைப்படுத்தல்கள் ஒரு பரந்த வரலாற்று அனுபவத்தின் ஒருங்கிணைப்பில் இருந்து பெறப்பட்டவை. போல்ஷிவிக் கட்சியின் சீரழிவை விளக்க முற்படுகையில், ஒரு காலத்தில் வரலாற்றின் நாயகன் என்று வர்ணிக்கப்பட்ட ட்ரொட்ஸ்கி, பிரெஞ்சுப் புரட்சியின் நிகழ்வுகளைக் கவனத்தில்கொண்டு, சோவியத் தொழிலாளர் அரசின் ஆளும் கட்சிக்குள் நடந்து வரும் நிகழ்ச்சிப்போக்குகளை விளக்குவதற்கு தேர்மிடோர் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தேர்மிடோர் எனப்பட்ட இந்த அரசியல் பிற்போக்கு காலம் ரொபெஸ்பியரின் மரணதண்டனையுடன் ஜூலை 1794 இல் தொடங்கியது.

லெனின், அக்டோபர் புரட்சிக்கு உடனடியாக முந்திய மாதங்களில், 1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூன் அனுபவம் குறித்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எழுத்துக்கள் பற்றிய மீளாய்வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அந்த ஆய்வில் இருந்து வெளிப்பட்டது மார்க்சிச புலமைக்கான லெனினின் சிறந்த பங்களிப்பான அரசும் புரட்சியும் என்ற நூல் மட்டுமல்ல ஆனால் போல்ஷிவிக் கட்சி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியதுமாகும்.

90. மார்க்சிஸ்டுகள் வெறும் புத்தகப் புழுக்கள் அல்ல. ட்ரொட்ஸ்கி ஒருமுறை, தனது விரலால் தனது மூக்கை ஆராயும் போது மனிதகுலத்தின் நிலையைப் படித்து சிந்திக்கும் கல்வியாளர் பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்தார். அன்றாட வேலைகளில் ஈடுபட்டுள்ள கட்சி உறுப்பினர்களால் வாசிப்புக்கு வரம்பற்ற நேரத்தைச் செலவிடமுடிவதில்லை. ஆனால், கிடைக்கும் நேரத்தை, முதலில், அவர்கள் கட்டியெழுப்பப் போராடும் கட்சியின் வரலாற்றை முழுமையாக உள்வாங்கவும், அதற்கு முந்தைய ஆண்டுகள் மற்றும் பத்தாண்டுகளில் அது கடந்து வந்த இன்றியமையாத வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

91. நிச்சயமாக, இளைய தலைமுறையினரின் அரசியல் கல்வி குறிப்பிட்ட சிக்கல்களை முன்வைக்கிறது. முதலாவதாக, பிராங்ஃபேர்ட் பள்ளி மற்றும் பின்-நவீனத்துவத்தின் செல்வாக்கின் கீழ் பொது அரசியல் சூழல் வரலாற்று ஆய்வுக்கு விரோதமானதாக உள்ளது. பின்-நவீனத்துவவாதிகள் புறநிலை உண்மை மற்றும் 'பெரும் கட்டுக்கதைகள்' என்று அழைக்கப்படுபவை பற்றிய ஆய்வை கைவிட வேண்டியதன் அவசியத்தை அறிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் பொதுவாக, வரலாற்றின் சடவாத கருத்தாக்கத்தையும், மேலும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனம் மற்றும் நிச்சயமாக ட்ரொட்ஸ்கியின் ரஷ்ய புரட்சியின் வரலாறு மற்றும் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி போன்ற படைப்புகளை கருதினர். விஷயத்தை அப்பட்டமாகச் சொல்வதென்றால், கல்வியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட பொய்களின் யுகத்தில் நாம் வாழ்கிறோம். உக்ரேனில் நடந்த போரும், திமோதி ஸ்னைடர் போன்ற அயோக்கியர்களின் வாழ்க்கையும் காட்டியுள்ளதுபோல, வரலாற்றை எழுதுவதற்கும் பிரச்சாரத்தை உருவாக்குவதற்கும் இடையிலான வேறுபாடு கல்விச் சமூகத்தின் கணிசமான பகுதியினரால் புறக்கணிக்கப்படுகிறது.

92. இந்த பிற்போக்கு சூழல் வரலாற்று அறிவின் மட்டத்தில் பொதுவான சரிவுக்கு பங்களித்தது. பல உறுப்பினர்களுக்கு, அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் சேரும்போது அவர்களின் வரலாற்றுக் கல்வியூட்டல் தொடங்குகிறது.

93. ஆனால் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவில் இணைந்திருக்கும் புதிய உறுப்பினர்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பரந்த அனுபவத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது? எனது தலைமுறையினர் வேர்க்கர்ஸ் லீக்கில் சேர்ந்தபோது, எங்களுக்கும் அக்டோபர் புரட்சிக்கும் இடைவெளி அரை நூற்றாண்டுக்கும் சற்று அதிகமாகவே இருந்தது. 1923 இல் இடது எதிர்ப்பின் ஸ்தாபகமானது, 1970 அல்லது 1971 உலகத்திலிருந்து 47 அல்லது 48 ஆண்டுகளில் மட்டுமே பிரிக்கப்பட்டது. அதாவது 1976 இல் இருந்து இன்று நம்மைப் பிரிக்கும் அதே அளவானதாக இருந்தது! ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தோற்றம், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகம், 1939-40ல் குட்டி முதலாளித்துவ சிறுபான்மையினரான சாக்ட்மன், பேர்ன்ஹாம் மற்றும் அபேர்னுக்கு எதிரான வரலாற்று உடைவு, பப்லோவாத திருத்தல்வாதத்தின் வளர்ச்சி, பகிரங்கக் கடிதம் மற்றும் 1953 பிளவு மற்றும் மீண்டும் ஒன்றிணைவதற்கு எதிராக பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் நடத்தப்பட்ட போராட்டங்கள் ஆகியவற்றில் எங்கள் கல்வி கவனம் செலுத்தப்பட்டது. எங்கள் அறிவில் நிச்சயமாக பல இடைவெளிகள் இருந்தன. ஆனால் ட்ரொட்ஸ்கியின் கிடைக்கக்கூடிய எழுத்துக்கள் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை நாங்கள் படித்தது தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) காட்டிக்கொடுப்புக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்தின் தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட மரபைப் பாதுகாப்பதற்கு ஒரு போராட்டத்தை நடத்த எங்களுக்கு உதவியது.

94. புரட்சிகர மார்க்சிச இயக்கத்தின் அனுபவத்தில் இருந்து எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் பெற்றோம். எனக்கு ஒரு காலகட்டம் நினைவுக்கு வருகிறது. அக்டோபர் 1985 இன் பிற்பகுதியில், WRP இன் பல உறுப்பினர்கள் அனைத்துலகக் குழுவின் வரலாற்றைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் அல்லது அவர்கள் ஒரு சர்வதேச இயக்கத்தின் ஒரு பகுதி என்ற விழிப்புணர்வும் இல்லாமல் இயக்கத்திற்குள் கொண்டு வரப்பட்டதையும் அவர்கள் ட்ரொட்ஸ்கிச காரியாளர்களாக செயல்பட முடியாதிருந்ததையும் உணர்ந்தோம். அவர்களின் அரசியல் அனுதாபங்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது. எனவே அக்டோபர் 25, 1985 என்று நான் நம்புகிறேன் ஒரு கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்க விரும்புபவர்களும், அனைத்துலகக் குழுவின் அரசியல் ஆளுமையை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்ற வெளிப்படையான அறிவிப்பின் அடிப்படையில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என அனைத்துலகக் குழு முன்மொழிந்தது. பண்டாவும் சுலோட்டரும் அந்த முன்மொழிவை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள், அதை அவர்கள் பின்னர் நிராகரித்தனர். கூட்டம் முடிந்ததும் என்னைப் பார்க்க வந்த பண்டா, “இதை எங்கே கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டார். நான் சொன்னேன், “மைக், அது கம்யூனிச அகிலத்தில் உறுப்பினராக இருப்பதற்கு ஒரு அடிப்படை நிபந்தனையாக இருந்தது”. கம்யூனிச அகிலத்தின் 21 புள்ளிகளை ஏற்றுக்கொள்வதுதான் அதில் இணைந்துகொள்வதற்கான அடிப்படையாகும். அந்த அடிப்படையில்தான் அவர்கள் இரண்டாம் அகிலத்தின் சீர்திருத்தவாதம் மற்றும் மத்தியவாதத்தை எதிர்த்துப் போராட முயன்றனர். பண்டா ஆச்சரியப்பட்டார். அவர் தனது அரசியல் சீரழிவின் அந்த கட்டத்தில், கம்யூனிச அகிலத்தின் அனைத்து படிப்பினைகளையும் மறந்துவிட்டார்.

95. எங்களைப் பொறுத்தவரை, புரட்சிகர மார்க்சிச இயக்கத்தின் அனுபவங்கள், எங்கள் நடைமுறைக்கான அடிப்படையாகும். 1970 களில் நாங்கள் இயக்கத்தில் சேர்ந்தபோது நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்த பரந்த அனுபவத்திற்காக நாங்கள் தீவிரமாக அர்ப்பணித்தோம். சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு லியோன் ட்ரொட்ஸ்கியின் பிறந்தநாளின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 1979 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் மத்திய குழுவால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணத்தை நான் சமீபத்தில் கண்டேன். அந்த ஆவணம் ஒரு கட்டத்தில் பின்வருமாறு கூறியது:

சோவியத் ஒன்றியம் ஒரு இடைமருவு ஆட்சியாக இருந்தது. அங்கு முதலாளித்துவம் தூக்கியெறியப்பட்டுவிட்டது, ஆனால் சோசலிசம் இன்னும் கட்டப்படவில்லை. மேலும் அதிகாரத்துவம் சோசலிசத்திற்கான போராட்டத்தை ஒவ்வொரு நாளும் குறைமதிப்பிற்குட்படுத்தி வருகிறது. இந்த உருக்குலைந்த தொழிலாளர் அரசு, அதிகாரத்துவத்தை தூக்கியெறிந்து புரட்சியை நீடிப்பதன் மூலம் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதா அல்லது ஸ்ராலினிசத்தின் உதவியுடனான எதிர்புரட்சி மூலம் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதா என்ற மாற்றீட்டை எதிர்கொண்டுள்ளது. ஸ்ராலினிசத்தை அடித்து நொறுக்க, திட்டமிட்ட பொருளாதாரத்தை பாதுகாக்க மற்றும் சோவியத் ஒன்றியத்தை மீண்டும் சோசலிசத்திற்கான பாதையில் முன்வைக்க, ட்ரொட்ஸ்கி ஒரு அரசியல் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அடிப்படை முன்னோக்கில் திருத்தலுக்கு ஒரு காற்புள்ளிக்கூட உட்பட்டது அல்ல.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு மற்றும் அதன் வேலைத்திட்டம் பற்றி நாங்கள் அப்படித்தான் உணர்ந்தோம். எதுவும் திருத்தலுக்கு உட்பட்டதல்ல, காற்புள்ளிக்கு கூட அதில் இடமில்லை. நீங்கள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்டத்தை மேம்படுத்தலாம், நீங்கள் அதை விரிவாக்கலாம். ஆனால் அதை மாற்றும், திருத்தும், அழிக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். 1970 களில் வேர்க்கர்ஸ் லீக்கின் உணர்வையும் உந்துதலையும் வெளிப்படுத்திய நான் நம்பும் அந்த உணர்வு, 1980 களில் WRP விட்டோடிகளுக்கு எதிராக தொடரப்பட்ட போராட்டத்தின் உறுதியில் ஒரு சிறிய காரணியாக இருக்கவில்லை.

96. WRP உடனான பிளவுக்குப் பின்னர் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் கடந்துவிட்டன. இப்போராட்டத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இப்போது அனைத்துலகக் குழுவின் காரியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு உள்ளீர்த்துக்கொள்ளப்பட வேண்டிய வரலாற்று அனுபவத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். ஆம், தோழர்களே, குறிப்பாக உங்களில் உள்ள இளைய தோழர்களே, உங்கள் வாசிப்புப் பட்டியலின் அடிப்படையாக இருக்க வேண்டிய பாடத்திட்டத்தில் நாங்கள் அதிகம் சேர்த்துள்ளோம். 1982க்கும் இன்றைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தின் மோதல்கள், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோடியான வரலாற்று அனுபவத்தைத் தொடர்ந்து குறிப்பிடுவது உங்களுக்கு உதவக்கூடும். இந்த ஆவணங்களைப் படிக்கும்போது, நீங்கள் அதே நேரத்தில், ட்ரொட்ஸ்கிசத்தின் முழு வரலாற்றின் அனுபவத்திலிருந்தும் மீளாய்வு செய்து கற்றுக்கொள்ள முடியும். அந்த காரணத்திற்காக, அனைத்துலகக் குழுவின் வரலாற்றை ஆய்வு செய்வது உலக சோசலிசப் புரட்சிக் கட்சியின் காரியாளர்களின் கல்வியூட்டலுக்கு இன்றியமையாத அடித்தளமாகும், மேலும் இந்த வாரம் நாம் நடத்தப்போகும் பணி, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் எங்கள் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் தத்துவார்த்த மட்டத்தை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

Loading