World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

Lecture two: Marxism versus revisionism on the eve of the twentieth century

இரண்டாம் விரிவுரை: இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

By David North
5 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

இது "இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன் அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில், ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை நிகழ்த்திய இரண்டாம் விரிவுரையின் மூன்றாம், மற்றும் இறுதிப் பகுதியாகும். முதல் இரு பகுதிகளும் தமிழில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 7ம் தேதிகளில் வெளிவந்தன.

இது கோடைப் பள்ளியில் அளிக்கப்பட்ட இரண்டாவது விரிவுரையாகும்."ரஷ்ய புரட்சியும், இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்று பிரச்சினைகளும்", என்ற தலைப்பில் டேவிட் நோர்த்தினாலேயே வழங்கப்பட்ட முதல் விரிவுரை நான்கு பகுதிகளாக ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டது.

அடுத்ததாக, டேவிட் நோர்த்தினால் வழங்கப்பட்ட "போல்ஷிவிசத்தின் தோற்றுவாய்கள் மற்றும் என்ன செய்ய வேண்டும்?" என்ற மூன்றாவது விரிவுரை, ஏழு பகுதிகளாக தமிழில் வெளியிடப்படும்.

எடுவார்ட் பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதம்

எப்போது பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதம் முதலில் வெளித்தோன்றியது? இதற்குப் பல அறிகுறிகள் இருந்தன. உண்மையில் அவருடைய சோசலிச வாழ்க்கைப் போக்கின் (Career) ஆரம்பத்தில், பேர்ன்ஸ்டைன், புரட்சிகர மார்க்சிசத்தை, குட்டி முதலாளித்துவ மனிதநேயச் சொற் சலசலப்புகளினால் நீராளமாக்கும் (Diluting) போக்கிற்கு எளிதில் ஆளாகும் தன்மையை புலப்படுத்தி இருந்தார். 1870ம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சோசலிசம் ஜனரஞ்சகமான (Popular) பல - வர்க்க (Multi-class) இயக்கமாக, ஒழுக்கவியல் அடிப்படையில் சிறப்பாக நடுத்தர வர்க்கத்தை கவரக் கூடியதாக்குவதன் மூலம், அதற்கு மேலும் சிறந்த வருங்கால வாய்ப்பு வரும் என்று நம்பிய, இளம் சமுக ஜனநாயக இயக்கத்தின் செல்வந்த ஆதரவாளரான ஹோஷ்பேர்க்குடன் (Höchberg) பேர்ன்ஸ்டைன் தன்னை சேர்த்துக் கொண்டார். பெபெல் மற்றும் ஏங்கல்ஸ் ஆகியோரின் அழுத்தத்தின் கீழ் பேன்ஸ்டைன் இந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கினார்; ஆனால், அரசியலில் மீண்டும் மீண்டும் நடப்பதுபோல், முதலில் இளம் பிராயத்து தவறுகள் போல் தோன்றுபவை, பின்னர் ஒரு அரசியல் போக்கின் ஆரம்ப அறிகுறிகளாக வெளிப்படுகின்றன.

பின்னர், பேர்ன்ஸ்டைன் இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்தார்; அங்கு அவர் சீர்திருந்தவாத ஃபாபியன் (Fabian) இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் மிகவும் நட்புறவு ரீதியான உறவுகளை வளர்த்துக் கொண்டார். புரட்சிகர பேருரிமைக் கிளர்ச்சி இயக்கத்தின் (Chartism) பொறிவின் பின்னர், களைகளைப்போல சீர்திருத்தவாதம் படர்ந்திருந்தது, பிரிட்டினில் பேர்ன்ஸ்டைனினிற்கு ஏற்பட்ட அனுபவங்கள், அநேகமாக அவர் மனதில் ஆழ்ந்து பதிந்திருக்கக் கூடும். நிலையான மத்தியதர வர்க்கம் மற்றும் ஆழமாக வேர் ஊன்றிய பாராளுமன்ற முறை என்பனவற்றை கொண்ட செல்வமிக்க பிரிட்டனில், புரட்சிகரமாக முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான வாய்ப்பு மிகவும் நெடுந்தொலைவில் இருப்பதாக பேர்ன்ஸ்டைனுக்குத் தோன்றியது.

மார்க்சினால், 1850ல் எழுதப்பட்ட "பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்" என்ற நூலின் புதிய பதிப்பிற்கு ஏங்கல்ஸ் எழுதிய முன்னுரையை பேர்ன்ஸ்டைனும், காவுட்ஸ்கியும் திருத்தியமைத்திருந்த முறை, அந்த முதுபெரும் புரட்சியாளர், சமாதானப் பாதையில் சோசலிசம் என்பதன் சீடர்களுள் ஒருவர் ஆகிவிட்டார் என்ற எண்ணப் பதிவை (Impression) ஏற்படுத்தும் முறையில் இருந்தது. 1895ன் தொடக்கத்தில் இதைக் கண்டறிந்த ஏங்கல்ஸ், ஆழமான வேதனைக்கு உள்ளானார். தான் இறப்பதற்கு வெறும் நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 1, 1895ல், ஏங்கல்ஸ் கோபத்துடன் காவுட்ஸ்கிக்கு எழுதியதாவது:

"இன்று வோவாட்ஸில் (Vorwärts) எனக்குத் தெரியாமல் என்னுடைய "முன்னுரையின்" ஒரு பகுதி அச்சிடப்பட்டுள்ளதைப் பார்த்து நான் மலைத்துப் போனேன். அதில், சமாதான வேட்கை கொண்ட, எந்த ஒரு விளைவானாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்று வாதிடுபவர் போல, என்னை வஞ்சித்து காட்டப்பட்டுள்ளது. இந்த முன்னுரை அதன் முழுமையில் நியு சைற்றில் (Neue Zeit) வெளி வரவேண்டும் என்று நான் விரும்புவதற்கு இதுவே எல்லாவற்றிற்கும் அதிகமாக முக்கிய காரணமாக உள்ளது. அப்பொழுதுதான் என்னைப்பற்றிய இந்த வெட்கக்கேடான மனதில் உண்டாக்கப்பட்ட கருத்து அழிக்கப்படக்கூடும். நான் இதன் மூலம் லைப்னெக்ட்டை (Liebknecht) அதைப் பற்றி என்ன கருதுகின்றேன் என்பது பற்றி ஐயத்துக்கு இடம் இன்றி விடுவதோடு, இதே நிலைதான் அவர்கள் எவராயிருந்தாலும் அவர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் அவர்கள், என்னிடம் ஒரு வார்த்தை கூடக் கூறாது, எனது கருத்துக்களை அவர் உருத்திரித்து பொருள் கொடுக்க, அவருக்கு இந்த சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளார்கள்." [7]

1896 அக்டோபரில், ஏங்கல்ஸ் காலமாகி ஓராண்டிற்கு சற்று பின்னர், பேர்ன்ஸ்டைன், "சோசலிசத்தின் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். இது மார்க்சிசத்தின் புரட்சிகர வேலைத்திட்டத்தை வெளிப்படையாக அவர் நிராகரிப்பதன் முறையான ஆரம்பத்தை குறித்துக் காட்டிற்று. அவரது கட்டுரை ஐரோப்பாவில் சோசலிச இயக்கம் விரைவாக முன்னேறுவது பற்றியும், அதன் வளர்ச்சியுறும் செல்வாக்கு பற்றியும் குறிப்பிட்டுக் கொண்டு, ஆரம்பித்தது. முதலாளித்துவ கட்சிகள் கூட சோசலிஸ்டுகள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்த வேண்டி இருந்தது. பேன்ஸ்டைன் இந்த வெற்றிகள், சோசலிசம் முழுமையாக வெற்றியின் விளிம்பில் நிற்கின்றது என்று வாதிடாவிட்டாலும் அவர், நிலவும் யதார்த்தம் தொடர்பாக சோசலிச இயக்கத்தால் பெரும்பாலும் எடுக்கப்படும் மறுப்பு ரீதியான (Negative) மனப்பான்மையை கைவிடுவது நிச்சயமாக அவசியமாகிவிட்டது என்று வாதிட்டார். அதன் இடத்தில், சோசலிஸ்டுகள் "ஆக்கமுறையான சீர்திருத்த ஆலோசனைகளை முன்வைக்க வரவேண்டும்."[8]

அடுத்து வந்த இரு ஆண்டுகளில், சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள், என்ற புத்தக வெளியீட்டோடு உச்சத்தை அடைந்த பேர்ன்ஸ்டைன், தனது மரபுவழி மார்க்சிசத்தை பற்றிய விமர்சனத்தை விரிவுபடுத்தினார். இந்த எழுத்துக்கள், நடைமுறையில் மார்க்சிசத்தின் எந்த ஒரு அடிப்படைக் கூறுடனும் பேர்ன்ஸ்டைனுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெளிவுபடுத்தின. ஹேகலுக்கு மார்க்சிசம் கொண்டிருந்த மெய்யியற் கடனை, மற்றும் அது இயங்கியல் வழிமுறையை ஆரத் தழுவியிருத்தலை அவர் நிராகரித்தார். குறிப்பாக, பேர்ன்ஸ்டைன், "சோசலிசத் திடீர் கவிழ்வுவாதம்" ("Socialist Catastrophitis,") என்று அவர் வர்ணித்த, முதலாளித்துவம் அதன் உள் முண்பாடுகளின் காரணமாக உச்ச நெருக்கடிக்கு சென்று கொண்டிருக்கின்றது என்ற நம்பிக்கையை நிராகரித்தார். பருவ ரீதியான (Periodic) நெருக்கடிகள் ஏற்பட முடியம் என்பதை ஏற்றுக் கொண்ட பேன்ஸ்டைன், அதே நேரத்தில் அவர் முதலாளித்துவம் --கடனை பயன்படுத்துவது போன்ற-- "பொருத்தமாக மாறியமைவதன் வாயிலாக" ("Means of adaptation") தொடர்ந்தும் அபிவிருத்தியடையும் - இதன் மூலம் அப்படிப்பட்ட நெருக்கடிகள் கால வரையறையற்று தள்ளிப்போட முடியும் அல்லது செம்மைப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.

எச்சந்தர்ப்பத்திலும், சோசலிசத்தின் எதிர்காலம், முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க முடியாத பெரும் நெருக்கடியுடன் இணைக்கப்படக் கூடாது, என்று பேர்ன்ஸ்டைன் வலியுறுத்தினார். 1898ம் ஆண்டு சமூக ஜனநாயகக் கட்சியின் ஸ்ருட்கார்ட் அகல் பேரவைக்கு அவர் எழுதியது போல:

"முதலாளித்துவ சமுதாயத்தின் உடனடியாக நிகழக்கூடிய பொறிவின் வாயிலில் நாம் நிற்கின்றோம் என்ற கருத்தை, மற்றும் இத்தகைய வரவிருக்கும் பெரும் அழிவின் சாத்தியக் கூறு சமூக ஜனநாயகத்தின் தந்திரங்களை நிர்ணயிப்பதையோ அல்லது அதில் அது தங்கியிருப்பதையோ நான் எதிர்த்து வந்துள்ளேன். இந்த நிலைப்பாட்டின் எல்லா அம்சங்களுடனும் நான் உறுதியாக இருக்கின்றேன்.[9]

இது ஒரு மையக் கருத்தாக இருந்தது: துல்லியமான மற்றும் விளக்கமான வகையில் "பேரழிவு" எடுக்கும் வடிவம் எப்படி முன்கூட்டிக் கூறுவது என்பது அல்ல அடிப்படைப் பிரச்சினை. எந்த முன்கூட்டிக் கூறலும், அனைத்து நேரங்கள், சூழ்நிலைமைகள் என்பனவற்றிற்கு செல்லுபடியானவையாக கூறமுடியாது. மாறாக, சோசலிசத்தின் வளர்ச்சிக்கும், முதலாளித்துவ அமைப்பில் உண்மையில் நிலவும் உள் முரண்பாடுகளுக்கும் இடையில், ஏதாவது புறநிலை ரீதியாக மற்றும் இன்றியமையா முறையில் இணைப்பு எதுவும் இருக்கின்றதா என்பதே தீர்க்கமானதாக (Critical) இருந்த பிரச்சனையாகும். அத்தகைய இணைப்பு (Connection) எதுவும் இல்லை என்றால், அப்பொழுது சோசலிசத்தை ஒரு வரலாற்று இன்றியமையாமை என்று கூற முடியாது.

அப்பொழுது எது, இன்றியமையாமை இல்லாத நிலையில், சோசலிசத்திற்கான பகுத்தறிவுக்கு ஒத்த காரணத்தை கொடுத்துள்ளது? பேர்ன்ஸ்டைனை பொறுத்தவரையில், சோசலிசம் ஒரு நன்நெறி ரீதியாக (Ethical), மற்றும் மனிதநேய அடிப்படையில்தான் நியாயப்படுத்தப்படலாம், மற்றும் நியாயப்படுத்தப்படமுடியும் -அதாவது, கான்டின் (Kant's) தவிர்க்க முடியா கடப்பாட்டை (Categorical Imperative) அரசியல் அரங்கில் பயன்படுத்துவதாகும். இதில் கீழ்க்கண்ட கட்டாய உத்தரவும் அடங்கியுள்ளது: "மனிதனை, உங்களில் உள்ள மனிதனையும், அதேபோல மற்ற எவரிலும் உள்ள மனிதனையும், எப்பொழுதும் வெறுமனே ஒரு வழிவகையாக (Means) நடத்தாமல், ஒர் இறுதியாக அடையும் நிலையாக (End) நடத்தச் செயற்படுங்கள்."

சோசலிசத்திற்கு ஒரு நன்நெறி (Ethical) அடிப்படையை நிறுவ பேர்ன்ஸ்டைன் எடுத்த முயற்சிகள் ஒன்றும் புதுமையானவை அல்ல. உண்மையில் 1890களில் கான்டின் தவிர்க்க முடியாக் கடப்பாடு (Categorical imperative) தர்க்க ரீதியாக சோசலிசத்திற்கு இட்டுச் செல்லும் என்று நம்பிய ஒரு கணிசமான அளவுடைய நவீன கான்டிய கல்வியாளர்கள் குழு ஒன்று இருந்து வந்தது. முக்கியமான நவ கான்டிய மெய்யியல்வாதியான, மாரிஸ் கோஹென் போன்ற சிலர், கான்டின் இந்த நன்நெறியின் அடிப்படையில் அவரை "நிஜமாக மற்றும் நடைமுறை ரீதியாக ஜேர்மன் சோசலிசத்தின் நிறுவனராக" கருதவெண்டும் என்று வாதிட்டனர். [10]

இது தவறானதாகவும் அதேபோல எதுவும் அறியாத் தன்மையையும் (Naïve) கொண்டிருந்தது. சாதாரண சிந்தனை முறை (Common Sense) பொதுவாக சராசரி மனிதனின் நாளாந்த செயற்பாடுகளில் பெற்றிருக்கும் அதே இடத்தைத்தான், தவிர்க்க முடியாக் கடப்பாடும் (Categorical Imperative) நன்நெறி நடத்தைத் துறையில் வகுக்கின்றது. சாதாரண சிந்தனை, முறை அதிகம் அறிவாற்றலின் பயன்பாடு வேண்டப்படாத நிலைமைகளில் எப்படிப் போதுமானளவு திருப்திகரமான விளைபயன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கின்றதோ, அதேபோல தவிர்க்க முடியா கடப்பாடும், ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சமூக வரைச்சட்டத்தின் (Framework) கீழ் ஏற்புடைய நடத்தைக்கான வழிகாட்டியாக பயன்பட முடியும். முற்றிலும் சொந்த மற்றும் தனிப்பட்ட உறவுகளை நடத்தும் பொழுது, ஒருவர் தனது சக மனிதரை ஒரு வழிவகையாக (Means) நடத்தாமல், அவரை ஒர் இறுதியாக அடையும் (End) நிலையில் வைத்து நடத்துவாராயின் அது மிகவும் போற்றக் கூடியதாக இருக்கும். ஆனால் பொது வாழ்வில் இந்தக் கட்டுப்பாட்டை (Imperative) கடுமையாய் கடைப்பிடிப்பது என்பது மிகவும் பிரச்சினைக்குரியதாகும்.

வர்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ள சமுதாயம் ஒன்றில், சர்வவியாபகமாக இந்த நீதிச் சித்தாந்தத்தை (Maxim) பிரயோகிப்பது என்பது, எத்த ஒரு கருத்தாழமான (Serious) அரசியல் அர்த்தத்திலும் முடியாததாகும். தொழிற்துறை முதலாளித்துவம் ஜேர்மனியில் பரந்தளவில் அபிவிருத்தி அடைவதற்கு எவ்வளவோ முன்னர் வாழ்ந்திருந்த கான்ட், தன்னுடைய மைய நன்நெறி அடிக்கோளானது (Postulate) புறநிலை ரீதியாக முதலாளித்துவ சமுதாயத்தின் உற்பத்தி உறவுகளுடன் ஒத்திணைந்து வராது (Irreconcilable) என்பதை புரிந்து கொண்டு இருந்திருக்க முடியாது. ஒரு கூலித் தொழிலாளி, ஒரு முதலாளிக்கு, உபரிமதிப்பை மற்றும் இலாபத்தை ஈட்டித்தரும் ஒரு வழிவகையேயன்றி வேறு என்ன?

பேர்ன்ஸ்டைனை பகிரங்கமாக சவால் செய்ய ஆரம்பத்தில் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியினுள் பெரும் தயக்கம் இருந்தது. ரஷ்ய மார்க்சிஸ்டுகள்தான், முதலில் பார்வஸ், அதன் பின்னர் பிளெக்கனோவ் ஆகியோரே, பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்திற்கு எதிராக வெளிப்படையான, மற்றும் முற்று முழுமையான போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினவர்களாவர். தத்துவார்த்த விவாதங்களில், நன்கு பிரபலமான "கைதிகளை கைப்பற்றாதீர்கள்" என்ற தனது அணுகுமுறையை பிளெக்கனோவ் கையாண்டு, நிர்மூலமாக்கும் தனது தொடர் கட்டுரைகளை எழுதினார். இவை பேர்ன்ஸ்டைனின் மெய்யியல் கருத்துருக்களின் (Conceptions) திவாலை அம்பலப்படுத்தின. இக் கட்டுரைகள், இயங்கியல் வழிமுறை மற்றும் மார்க்சிச தத்துவத்தின் அடித்தளங்கள் என்பன பற்றிய மிக உன்னதமான விரிவுரைகளுள் தமது இடத்தை வகுக்கின்றன. சீர்திருத்தமா அல்லது புரட்சியா? என்ற, 27 வயதுடைய ரோசா லுக்சம்பேர்க்கின் கூரறிவு மிக்க தத்துவார்த்த விவாதப் படைப்பு, இவற்றையும் விட நன்கு பிரசித்தி பெற்றது. அதன் முதல் அத்தியாயத்தில் அவர், மார்க்சிசத்தின் மீது பேர்ன்ஸ்டைன் தொடுத்த தாக்குதல் கிளப்பியுள்ள அடிப்படை பிரச்சினை பற்றி சுருக்கமாக தொகுத்துக் கூறினார்.

"திருத்தல்வாத தத்துவம், இவ்விதத்தில் தன்னை ஒரு இரண்டக நிலையினுள் (Dilemma) உட்படுத்திக் கொண்டுள்ளது. இன்றுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டுவந்தது போல, சோசலிச உருமாற்றம் என்பது, முதலாளித்துவ உள்முரண்பாடுகளின் விளைபயனால், மற்றும் வளர்ச்சியுடன் முதலாளித்துவம் அதன் உள் முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வதினால், தவிர்க்கமுடியாமல் ஒரு கட்டத்தில் அதன் பொறிவில் முடியும். (அதாவது அப்பொழுது "பொருத்தமாக மாறியமைவது" (‘Means of adaptation') பயனற்றுப்போக, பொறியும் தத்துவம் சரியானதாகிவிடும்.) அல்லது "பொருத்தமாக மாறியமையும் வழிவகை" முதலாளித்துவ முறையின் பொறிவை உண்மையில் நிறுத்தி, அதன் மூலம் முதலாளித்துவத்தை அதன் சொந்த முரண்பாடுகளை அதுவே அமுக்கிவைத்து (Suppress) அது தன்னைத் தானே பேணிக் கொள்ள அதற்கு வகை (Enables) செய்கின்றது, அப்பொழுது சோசலிசம் ஒரு வரலாற்றுத் தேவை என்பது இல்லாமற் போய்விடும். அதன் பின் அது, நீங்கள் அதை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம், ஆனால் அது சமூதாயத்தின் சடரீதியான வளர்ச்சியின் விளைபயனாக இருக்காது.

"இந்த இரண்டக நிலை (Dilemma) மற்றொரு இரண்டக நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. ஒன்றில் முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் பயணம் (Course) பற்றிய திருத்தல்வாதம் அதன் நிலைப்பாட்டில் சரியாக இருக்கின்றது எனவே சமுதாயத்தை சோசலிச உருமாற்றம் செய்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வா கற்பனை கோட்பாடு (Utopia). அது அப்படி இல்லையென்றால் சோசலிசம் என்பது ஒரு கற்பனை கோட்பாடு அல்ல, அதோடு முதலாளித்துவம் "பொருத்தமாக மாறியமையும் வழிவகையை" (‘Means of adaptation') கொண்டுள்ளது என்பது ஒரு பொய்யான தத்துவமாகும். மணிச்சுருக்கமாக இதுதான் பிரச்சினை.[11]

சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள் என்பதை வாசிக்கும் பொழுது, எந்த அளவிற்கு பேர்ன்ஸ்டைன் சரிகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் மேற்பரப்பின் கீழ் அபசகுனமாய் (Ominous) கிழம்பிக் கொண்டிருக்கும் இரையொலியை, முற்று முழுதாகக் கவனிக்காது இருந்தார் என்பதைப் பார்க்கும் பொழுது, ஒருவர் மலைத்துப் போகாமல் இருக்க முடியாது. பொருளாதார வளர்ச்சியின் குறியீடுகள் என்றும் கால எல்லையின்றி மேல்நோக்கியே சென்று கொண்டிருப்பன என்றும், பரந்த மக்களின் வாழ்கைத் தரங்களும் தளராது உறுதியாக உயர்ந்துகொண்டே செல்லுவன என்றும், தடுமாற வைக்கும் மனநிறை அமைதியுடன் (Staggering complacency) எதையும் ஆராயாது அவர் எண்ணிக் கொண்டார். ஒரு பெரும் நெருக்கடி என்ற கருத்து, பேர்ன்ஸ்டைனுக்கு கலப்பற்ற பைத்தியக்காரத்தனமாக தோன்றியது. காலனித்துவமுறை, இராணுவவாதம் ஆகிய புதிய இயல்நிகழ்வுகள் பிரமாண்ட ரீதியில் ஆயுதமேந்திய முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே வன்மையான மோதுதலுக்கு இட்டுச் செல்லும் என்ற எச்சரிக்கைகள் கூட --எக்கணமும் நிகழ இருக்கும் பேரழிவு எடுக்கக் கூடிய வடிவங்களில் ஒன்று-- பீதியை கிளப்புதல் என்று பேர்ன்ஸ்டைனினால் உதறித்தள்ளப்பட்டது. "அதிருஷ்டவசமாக, நாம் அரசியல் வேறுபாடுகளை வேட்டுப் படைக் கருவிகளைக் (Firearms) கொண்டு தீர்ப்பதை விட்டு விட்டு, மேலும் பெருகிக் கொண்டு செல்லும் வேறுமுறைகளிற் தீர்த்துக் கொள்ளப் பழக்கப் பட்டு வருகின்றோம்", என்று பேர்ன்ஸ்டைன் அற்பத் தன்னிறைவுடன் (Smugly) குறிப்பிட்டார்.[12] இதை அவர் குறிப்பிட்டது இருபதாம் நூற்றாண்டின் முன்னணை பொழுதிலாகும் (Eve) !

ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தயக்கம் காட்டிய பொழுதும், பேர்ன்ஸ்டைனின் கருத்துக்களுக்கு எதிரான ஒரு பகிரங்க போராட்டத்தை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. பேனாவை கையில் எடுப்பதற்கு முடிந்த அளவு தாமதித்த பொழுதும் கூட - ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய சோசலிச இயக்கங்களினுள் அனைத்து தத்துவார்த்த பிரச்சினைகளிலும் இறுதித் தீர்ப்பாளரான கவுத்ஸ்கி, பேன்ஸ்டைனுக்கு எதிரானவர்களின் பட்டியலில் அவரும் கடைசியாக சேர்ந்து கொண்டார். கவுத்ஸ்கி, மிக எழுச்சியற்ற முறையில் (Soberly) பேர்ன்ஸ்டைனின் பிரதான வாதங்களை அவை தவறானவை என்று மறுத்துரைத்தார். 1898ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் அகல் பேரவையிலும் (Congress) அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் நடந்தவற்றிலும், பேர்ன்ஸ்டைனின் பிறழ்ந்த கருத்துக்கள் (Heresies) உத்தியோகபூர்வமாக கண்டனம் செய்யப்பட்டன. தத்துவார்த்த தளத்தில் மார்க்சிசம் உச்ச உயர் நிலையில் இருந்து கோலோச்சிற்று. ஆனால் வேறொரு தளத்தில், கட்சி நடைமுறை மற்றும் இயக்க அமைப்புத் தளங்களில் தத்துவார்த்த திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பிளெக்கனோவ், பேர்ன்ஸ்டைனை கட்சியில் இருந்து அகற்றுமாறு சமூக ஜனநாயகக் கட்சிக்கு அழைப்பு விடுத்தபோது, கட்சித் தலைவர்கள் அதை, அக்கணமே நிராகரித்தார்கள். திருத்தல்வாத தத்துவத்திற்கும், சமூக ஜனநாயக கட்சியின் நடைமுறை மற்றும் இயக்க அமைப்பு முறைக்கும் இடையில் இருந்த ஒரு மிகவும் நிஜமான இடைத் தொடர்பை ஆராய, மற்றும் அம்பலப்படுத்த, கட்சியின் தலைவர்களிடையே எந்த ஒரு பேரார்வமும் இருக்கவில்லை. அப்படி அவர்கள் செய்திருந்தால், தவிர்க்கமுடியால் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் தொழிற் சங்கங்களுக்கும் - பெயரளவிற்கேனும் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தொழிற் சங்கங்களுக்கும், கட்சிக்கும் இடையில் இருந்த உறவு பற்றிய வினா எழுந்திருக்கும்.

சந்தர்ப்பவாதத்தின் நடைமுறை வடிவங்களுக்கு எதிராக, குறிப்பாக தொழிற் சங்கங்களின் நாளாந்த நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தர்ப்பவாதத்தின் நடைமுறை வடிவங்களுக்கு எதிராக பகிரங்கமான போராட்ட சாத்தியக்கூறை கண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருந்தன அவர்கள் அத்தகைய போராட்டம் கட்சியை உடைத்துவிடும் என்றும், தொழிலாள வர்க்க அணியினுள் பிளவை ஏற்படுத்தி பல தசாப்தங்களின் இயக்க ரீதியான முன்னேற்றத்தை கீழறுப்பது மட்டுமல்லாது சமூக ஜனநாயகக் கட்சிக்கு எதிராக அரச அடக்கு முறைக்கு வகை செய்யும் என்றும் அஞ்சினர், இவை மிகவும் முக்கியமான காரணங்களாகத்தான் இருந்தன. இருந்த பொழுதும், அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தை சமூக ஜனநாயகக் கட்சி தட்டிக் கழித்ததன் விளைபயன்கள் மிகவும் ஆழமான மற்றும் கடுந்துயரத்திற்கு வழிவகுத்தவையாக அமைந்தன.

அதுமட்டுமல்லாது திருத்தல்வாதம் ஒரு வெறும் ஜேர்மனிய பிரச்சினை அல்ல. அது, வெவ்வேறு வடிவங்களில் இரண்டாம் அகிலம் முழுவதும் தன்னை வெளிப்படுத்திற்று. பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி, அதன் தலைவர்களில் ஒருவரான அலெக்சாண்டர் மில்லறன்ட் (Alexander Millerand), பிரான்சின் ஜனாதிபதி வால்டெக் றூசோவின் (Waldeck-Rousseau) அழைப்பை ஏற்று, அவரது அமைச்சர் அவையில் வர்த்தக அமைச்சராக 1899ம் ஆண்டு சேர்ந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது. பேர்ன்ஸ்டைனிசத்தின் தர்க்கம், வர்க்க ஒத்துழைப்பிற்கு, முதலாளித்துவ வர்க்கத்திடம் அரசியல் சரணாகதிக்கு, மற்றும் அதன் அரசின் பாதுகாப்பிற்கு இட்டுச் செல்லும் என்பதை இந்த நிகழ்வு மிகவும் தெளிவாக்கியது.

இரண்டாம் அகிலத்தின் ஒரேயொரு பகுதியில்தான், ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் மட்டும்தான், திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் நெறிமுறையாக அபிவிருத்தி செய்யப்பட்டு அதன் அனைத்து நிலைகளிலும் ஆராயப்பட்டு மிகுந்த தொலைவிற்கு செல்லும் அதன் அரசியல் முடிவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முடிவு பெற்றுள்ளது

குறிப்புகள்:

[7] திரட்டு நூல்கள், தொகுதி 50 (நியூ யோக் சர்வதேச வெளியூட்டாளர்கள், 2004) பக்கம் 86

[8] மார்க்சிசமும், சமூக ஜனநாயகமும் : திருத்தல்வாத விவாதம் 1896-1898, பதிப்பாசிரியர்கள்: எச். ரியூடர் மற்றும் ஜே. எம்.ரியூடர் (கேம்பிரிஜ் பல்கலைக் கழக அச்சகம். 1988), பக்கம் 74.

[9] எடுவாட் பேர்ன்ஸ்டைன், சோசலிசத்திற்கான முன் நிபந்தனைகள் (கேம்பிரிஜ் பல்கலைக் கழக அச்சகம், 1993), பக்கம் 1.

[10] பீட்டர் கேயினால், ஜனநாக சோசலிசத்தின் இரண்டக நிலையில் (நியூ யோர்க் கொல்லியர், 1970), பக்கம் 152ல் மேற்கோள்.

[11] லண்டன் நூல் அடையாளங்கள், 1989, பக்கம் 29

[12] முன் நிபந்தனைகள். பக்கம் 162

Top of page