1917 ரஷ்ய புரட்சி

அக்டோபர், 1917 இல், முதலாம் உலகப் போரின் படுகொலைக்கு மத்தியில், ரஷ்ய தொழிலாள வர்க்கம், விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் செயல்பட்டு, அலெக்சாண்டர் கெரென்ஸ்கி தலைமையிலான இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கியெறிந்து, உலக வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை நிறுவியது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர், இரண்டாம் ஜார் நிக்கோலஸ் தலைமையிலான ஒரு முடியாட்சி வம்சத்தால் ரஷ்யா ஆட்சி செய்யப்பட்டது. இந்த புரட்சியானது ஏகாதிபத்திய போர் முடிவிற்கு வருவதன் ஆரம்பமாகும்.

ரஷ்ய புரட்சி உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை குறித்தது. இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை தூக்கிவீசுவது முதலாளித்துவத்திற்கு மாற்றீடு என்பது ஒரு கற்பனாவாத கனவு அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் போராட்டத்தின் மூலம் அடையக்கூடிய ஒரு உண்மையான சாத்தியம் என்பதை நிரூபித்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் துரோகங்கள் மற்றும் குற்றங்களால் அழிக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி இறுதியில் சோகமான  இருந்தபோதிலும், கடந்த நூற்றாண்டில் வேறு எந்த நிகழ்வும் உலகின் அனைத்துப் பாகங்களிலும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கையில் இவ்வளவு தொலைநோக்குடைய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த பக்கத்தில், வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சியின் முக்கியத்துவத்தையும் படிப்பினைகளையும் ஆராய்வதையும், உலகம் முழுவதும் அதன் தாக்கத்தையும் பற்றி வெளியிடப்பட்ட பல கட்டுரைகள் மற்றும் விரிவுரைகளை கண்டுகொள்ளலாம்.

விளாடிமிர் லெனின் 1919 இல் பெட்டோகிராட்டில் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றுகின்றார். வலது பக்கத்தில் ட்ரொட்ஸ்கி நிற்கின்றார். [Photo]
2017 நூற்றாண்டு விரிவுரைகள்: ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்?
முதன்மை கட்டுரைகள்
லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை

ட்ரொட்ஸ்கியும் லெனினும் 1917 அக்டோபர் புரட்சியில் போல்ஷிவிக் கட்சிக்கும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கும் தலைமை தாங்கினர். இது மனிதகுல வரலாற்றில் முதல் தொழிலாளர் அரசை நிறுவியது. 1923 ஆம் ஆண்டில், சோவியத் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றிய ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான ஒரு தேசியவாத அதிகாரத்துவத்தின் வளர்ச்சியை எதிர்ப்பதற்காக ட்ரொட்ஸ்கி இடது எதிர்ப்பு (Left Opposition) இயக்கத்தை ஸ்தாபித்தார். 1933 ஆம் ஆண்டில், ட்ரொட்ஸ்கியால் எதிர்க்கப்பட்ட மூன்றாம் அகிலத்தின் அழிவுகரமான கொள்கையினால் ஜேர்மனியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, சோவியத் ஒன்றியத்திலும் மற்றும் மூன்றாம் அகிலத்திலும் உருவாகிய ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்க ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

மேலும்
ரஷ்ய புரட்சியின் கூடுதல் விபரங்கள்
சமீபத்திய கட்டுரைகள்