முன்னோக்கு

அமெரிக்காவில் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட எழுத்தாளர்களின் வேலைநிறுத்தத்தின் சமூக, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஃபாக்ஸ் ஸ்டுடியோ முன் ஹாலிவுட் எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம், லொஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, மே 2, 2023.

11,000 ம் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் திரைப்பட எழுத்தாளர்களின் வேலைநிறுத்தம் வர்க்கப் போராட்டத்தில் ஒரு பொது எழுச்சியின் ஒரு பகுதியாக இருப்பதோடு, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பில் கூட்டு நிறுவனங்கள் கழுத்தை நெரிப்பதற்கு ஒரு சவாலாகவும், மற்றும் ஹாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஜனநாயகக் கட்சியின் ஸ்தாபனத்துடனான மோதலாகவும் இருக்கிறது.  

தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் இழப்பில் வேலைகளைக் குறைப்பதற்கும் செலவுகளைக் குறைப்பதற்கும் முனைந்துள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் இரக்கமற்ற கூட்டு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள எழுத்தாளர்கள் உள்ளனர். இலாப அமைப்புமுறையின் கீழ், செயற்கை நுண்ணறிவு மற்றும் வாழ்க்கையை வளமாக்குவதற்கான பரந்த ஆற்றலைக் கொண்டுள்ள பிற தொழில்நுட்பங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நிலைமைகளை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே இணையத்திலிருந்து நேரடியாக ஒலி அல்லது வீடியோவைக் கேட்கும் ஸ்ட்ரீமிங்கில் இதுபோன்ற அனுபவம் உள்ளது. அமெரிக்காவின் எழுத்தாளர் சங்கம் (WGA), நிறுவனங்கள் குறைவான ஊதியம் பெறும் எழுத்தாளர்களுக்கான ஸ்ட்ரீமிங் மாற்றத்தைப் பயன்படுத்தி, எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மிகவும் ஆபத்தான மற்றும் குறைந்த ஊதிய மாதிரிகளை உருவாக்குகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறது. இந்த   நிறுவனங்கள் பில்லியன்களை வசூலித்துக் கொண்டிருக்கும் வேளையில், சராசரி வாராந்திர எழுத்தாளர்களின் ஊதியம் கடந்த தசாப்தத்தில் பணவீக்கத்திற்கு ஏற்ப 23 சதவீதம் குறைந்துள்ளது.

நிறுவனங்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகளிடமிருந்து எழுத்தாளர்கள்  சிறந்த இழப்பீடு கோருகின்றனர். அமேசான் (2018 ஆம் ஆண்டு வரை, 500 அதிர்ஷ்ட  பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது) 2022 இல் 514 பில்லியன் டொலர்களைப் இலாபமாக பெற்றுள்ளது. டிஸ்னி (2022 இல் 500 அதிர்ஷ்ட பட்டியலில் 53வது இடத்திலுள்ளது) கடந்த ஆண்டு 83 பில்லியன் டொலர்கள், NBC Universal 39 பில்லியன் டொலர்கள், நெட்பிலிக்ஸ் 32 பில்லியன் டொலர்கள் மற்றும் பலவற்றை இந்த நிறுவனங்கள் இலாபமாக பெற்றுள்ளன.

இந்த இராட்சத நிறுவனங்கள் இலாப வரம்புகளை மேலும் அதிகரிக்க வோல் ஸ்ட்ரீட்டின் இடைவிடாத அழுத்தத்தின் கீழ் உள்ளன. வங்கிகளும் முதலீட்டாளர்களும் குறிப்பாக ஊடக நிறுவனங்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளில் இருந்து வருமானத்தை அதிகரிக்க ஒரு வழியைக் கண்டறிய வேண்டும் என்று கோருகின்றனர்.

வோல் ஸ்ட்ரீட் ஆய்வு நிறுவனமான MoffettNathanson இந்த ஆண்டின் தொடக்கத்தில் பின்வருமாறு கருத்துரைத்து, ''ஸ்ட்ரீமிங் உண்மையில் ஒரு நல்ல வணிகம் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகிகள் குறைந்தபட்சம் முன்பு வந்ததை ஒப்பிடவில்லை''. அதை ஒரு 'நல்ல வணிகமாக' மாற்ற, குறிப்பிட்ட எழுத்தாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் சுரண்டுவதை அதிகரிக்க வேண்டும் என்றது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் தங்கள் பணி மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது அதே இரக்கமற்ற தாக்குதலை எதிர்கொள்கின்றனர் என்ற உண்மையை எழுத்தாளர்களும் எதிர்கொள்கின்றனர் என்பதாகும். எந்தப் பற்றாக்குறையும் இல்லாத ஊடக நிர்வாகிகளின் பேராசை, முதலாளித்துவ இலாப அமைப்பு முறையின் கட்டாயங்களுக்கு இரண்டாம் பட்சமானது ஆகும்.

எழுத்தாளர்களுக்கு ஒரு போராட்ட வரலாறு உண்டு. இது அவர்களின் ஏழாவது வேலைநிறுத்தம் ஆகும், 2007-08ல் 100 நாள் வேலைநிறுத்தம் உட்பட, இதுபற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் விரிவாக வெளியிடப்பட்டது. இந்த வேலைநிறுத்தங்களில் பெரும்பாலானவை பல மாதங்களாக நீடித்தன.

வேலைநிறுத்தம் செய்பவர்களின் பொருளாதாரக் கோரிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இருப்பினும், இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டம் ஆழமான சமூக, அரசியல், கலாச்சார மற்றும் வரலாற்று கேள்விகளை எழுப்புகிறது.

தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பு ஆகியவை பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் அமெரிக்க முதலாளித்துவத்தின் மையத்தில் இருக்கிறது. அத்துடன், வெளிநாட்டில் அதன் பிம்பம் மற்றும் நற்பெயரையும் கொண்டுள்ளது. எழுத்தாளர்களுக்கும் பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கும் இடையிலான சண்டை கலாச்சார வாழ்க்கையின் உள்ளடக்கத்தின் மீதான போராட்டமாகும். ஃபாக்ஸினுடைய (Fox) முர்டோக் குடும்ப நபர்கள், வாரிசு தொடரில் கடுமையாக சித்தரித்துள்ள எழுத்தாளர்கள்   மற்றும் தொழில்துறை முழுவதும் உள்ள அவர்களது சகாக்கள் அமெரிக்க மற்றும் உலக மக்கள் அதன் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் திரைகளில் என்ன பார்க்கிறார்கள் என்பதில் கடுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

எழுத்தாளர்கள், ஸ்டுடியோக்கள் மற்றும் நெட்வொர்க்குகளுக்கு இடையே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக நடந்து வரும் போரின் ஒரு பகுதியாக தற்போதைய மோதல் இருக்கிறது. அதே ஆண்டு மார்ச் மாதம் அவர்கள் விதித்த 50 சதவீத ஊதியக் குறைப்பு உட்பட, திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் (அமெரிக்காவின் மேற்கு மற்றும் கிழக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் முன்னோடி) 1933 இல் ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் இரக்கமற்ற மற்றும் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் நிறுவப்பட்டது.

திரைக்கதை எழுத்தாளர்களை ஒன்றிணைத்து தொழிற்சங்கத்தை அமைப்பது என்பது, ஸ்டுடியோ தலைமை அதிகாரிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஏனெனில், அவர்கள் எழுத்தின் உள்ளடக்கத்தில் தலையிடுவதற்கான அவர்களின் உரிமையில் தாங்கமுடியாத குறுக்கீடு என்று இதனைக் கருதினர். 1940 களின் பிற்பகுதியிலும் 1950 களின் முற்பகுதியிலும் இடதுசாரி சித்தாந்தங்களின் சாத்தியமான எழுச்சி பற்றிய பரவலான அச்சத்தின்போது, எழுத்தாளர்கள் கம்யூனிச எதிர்ப்பு சூனிய-வேட்டைக்காரர்களின் குறிப்பிட்ட இலக்காக இருந்தனர்.

அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் குறிப்பாக 1930 களின் பிற்பகுதியில் இருந்து தயாரிக்கப்பட்ட சமூக உணர்வுள்ள திரைப்படங்கள் தொடர்பாக மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தது. 1940 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி திரை எழுத்தாளர்கள் சங்கம், அமெரிக்க செயல்பாடுகள் குழுக் கமிட்டியின் (HUAC) தாக்குதலுக்கு உள்ளானது. 1947 மற்றும் 1951-53 இல் HUAC, இரண்டு சுற்று விசாரணைகளை நடத்தியதின் விளைவாக நூற்றுக்கணக்கானவர்கள் தடுப்புப்பட்டியலுக்கும் மற்றவர்கள் கோழைத்தனமான சரணடைதலுக்கும் வழிவகுத்தது. 1952 ஆம் ஆண்டில், காங்கிரஸுக்கு முன் 'தங்களைத் துடைக்க' தவறிய எந்தவொரு நபர்களின் பெயர்களையும் 'திரையிலிருந்து தவிர்க்க' திரைப்பட ஸ்டுடியோக்களை திரை எழுத்தாளர்கள் சங்கம் அங்கீகரித்தது.

எழுத்தாளர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இடையேயான  மோதலில், பெருவணிக மேலாதிக்கத்திற்கு எதிரான கலை சுதந்திரத்திற்கான போராட்டத்தின் கூறுகளையும், இணக்கவாதம், தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான சமூக விமர்சனத்திற்கான போராட்டத்தின் கூறுகளையும் எப்போதும் கொண்டுள்ளது.

ஹாலிவூட்டிலுள்ள பெரிய நிறுவனங்கள் பாரியளவில் அரசு, பென்டகன் மற்றும் CIA ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டள்ளன. 'போர் அரங்குகள்: பென்டகன் மற்றும் சிஐஏ ஹாலிவுட்டை எப்படி எடுத்தது' என்ற சமீபத்திய ஆவணப்படம், கடந்த இரண்டு தசாப்தங்களாக 2,500க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளில் இராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் எவ்வாறு நேரடியான முக்கிய கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் எதிரான பைடென் நிர்வாகத்தின் தற்போதைய போர் உந்துதலுக்கு முழு பொழுதுபோக்குத் துறையையும் ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு ஏற்ப மேலும் பயன்படுத்தப்படுகிறது. புத்தகங்கள் மற்றும் கருத்துக்களின் மீதான தணிக்கை ஏற்கனவே அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலிலிருந்து இதனைப் பிரிக்க முடியாது. அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றிய உண்மையை அம்பலப்படுத்தியதற்காக ஜூலியன் அசாஞ் சிறையில் இருக்கிறார். ஆளும் வர்க்கத்துக்கு வழி இருந்தால், சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் யதார்த்தத்தை அம்பலப்படுத்தும் அனைவருக்கும் எதிராக இதே விதி பயன்படுத்தப்படும்.

இன்று தீவிர தொலைக்காட்சி மற்றும் திரைக்கதை எழுதுதல் நடக்கிறது. அமெரிக்க சமுதாயத்தின் பயங்கரமான சீரழிவு மற்றும் சிதைவுக்கு அருகில், தினசரி பாரிய துப்பாக்கிச் சூடு மற்றும் பிற சமூக விரோத அட்டூழியங்களின் விளைச்சல் என்பன அதிக சிந்தனைமிக்க எழுத்தாளர்களை ஈர்க்கிறது. ஆனால், பெருநிறுவனங்களின் இலாபத்திற்கான கோரிக்கைகளும் வணிகத்திற்கான கருத்தியல் தேவைகளும் மேலோங்கி நிற்கின்றன. கலை சுதந்திரம் உண்மையில் இருந்திருந்தால், எழுத்தாளர்கள் என்ன கதைகளைச் சொல்வார்கள்? அவர்கள் தங்கள் சொந்த சூழ்நிலையில் என்ன வகையான நாடகங்களை உருவாக்குவார்கள்? தற்போதைய வேலைநிறுத்தத்தை நடத்துவதில் என்ன முரண்பாடுகள் மற்றும் மோதல்களை அவர்கள் எழுப்ப வேண்டும்?

ஆளும் வர்க்கம், வெதுவெதுப்பான தாராளவாதத்திற்கு அப்பாற்பட்ட எந்தவொரு கதையையும் முற்றிலும் விலக்க, உண்மையான இடதுசாரி சிந்தனையின் எந்தவொரு வடிவத்தையும் சட்டவிரோதமாக்க பல தசாப்தங்களாக நீண்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் இனமும் பாலினமும்தான் எல்லாமே என்ற ஜனநாயகக் கட்சி மற்றும் போலி இடதுகளின் நச்சுப் பேச்சுக்கள் ஓயாமல் ஊக்குவிக்கப்படுகின்றன. சுய-தணிக்கை ஆட்சி திணிக்கப்படுகிறது, எழுத்தாளர்கள் பொதுவாக முதலாளித்துவம் பற்றிய மிக மறைவான விமர்சனங்களைக் கூட தங்கள் நூல்களுக்குள் பதுங்கிக் கொள்ள வேண்டும்.

ரூபேர்ட் முர்டோக் 2007-08 வேலைநிறுத்தத்தின் போது அவரது வணிக மற்றும் சமூக நலன்களுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக இந்த சர்ச்சையை பார்க்கவில்லை. வேலைநிறுத்தம் முதலில் இணையப் பிரச்சினையில் கவனம் செலுத்தியபோது, ​​அது நகர்ந்துவிட்டதாக முர்டோக் புகார் கூறினார். ‘’இப்போது சொல்லாட்சி என்னவென்றால், உங்களுக்குத் தெரியும், பெரிய, கொழுத்த நிறுவனங்கள், மற்றும் வறிய எழுத்தாளர்கள், அவர்கள் உண்மையில் ஒருவித சோசலிச அமைப்புக்கு மாற விரும்புகிறார்கள் மற்றும் நிறுவனங்களை இழுக்க விரும்புகிறார்கள்.’’

இந்த வேலைநிறுத்தத்தில் எழுத்தாளர்கள் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு, தங்கள் சொந்தக் கைகளில் விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் இதர பிரிவுகளுடன், பொழுதுபோக்குத் துறையிலும் அதற்கு அப்பாலும் தங்கள் போராட்டத்தை ஒன்றிணைக்க வேண்டும். ஜனநாயகக் கட்சியுடனும், ஆளும் வர்க்கத்துடனும் பிணைந்துள்ள தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் குழுக்களின் வளர்ச்சியும் இதில் அடங்கும். WGA தலைவர்கள் புதன்கிழமை ஒரு பேரணியில் 'வெள்ளை மாளிகை எங்களுக்குப் பின்னால் உள்ளது' என்று அறிவித்தனர். இது மாபெரும் பெருநிறுவனங்கள் மற்றும் அதன் பின்னால் நிற்கும் ஆளும் வர்க்க அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் போராட்டத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பொய்யாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வேலைநிறுத்தம் மற்றும் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளை உலகம் முழுவதும் நடைபெறும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் இணைப்பது அவசியம். வெறுக்கப்படும் மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை மக்களுடன் பிரான்ஸ் ஒரு புரட்சிகர நெருக்கடிக்குள் நுழைந்துள்ளது. ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, இலங்கை மற்றும் கனடா என்று நாடு விட்டு நாடு என்று பாரிய வேலைநிறுத்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அமெரிக்காவில், இந்த ஆண்டு கல்வித் தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்கள் ஒரு சமூக வெடிப்பின் ஆரம்ப வெளிப்பாடு மட்டுமே. கலிபோர்னியாவில் மட்டும் கல்வியாளர்கள், கப்பல்துறை தொழிலாளர்கள் மற்றும் தளவாடத் தொழிலாளர்கள் ஆகியோரின் போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. 

வரலாறு மற்றும் அரசியலைப் பற்றிய ஒரு தீவிர ஆய்வு, மற்றும் இந்த அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியை நோக்கிய நோக்குநிலை என்பன எழுத்தாளர்கள் தங்கள் சொந்த போராட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும், சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கும், உண்மையான மற்றும் நீடித்த மதிப்புடைய கலையை உருவாக்குவதற்கும் இது அவசியம். 

Loading